search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்டின்பட்டியில் விருந்து நிகழ்ச்சியில் தகராறு - கார் கண்ணாடி உடைப்பு ரவுடி கைது
    X

    ஆஸ்டின்பட்டியில் விருந்து நிகழ்ச்சியில் தகராறு - கார் கண்ணாடி உடைப்பு ரவுடி கைது

    விருந்து நிகழ்ச்சியில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கார் கண்ணாடியை அடித்து உடைத்ததாக ரவுடி கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    மதுரை ஆஸ்டின்பட்டி அருகே உள்ள விளாச்சேரி சீனிவாசன் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடந்தது.

    இதில் அதே பகுதியைச் சேர்ந்த சிங்கராஜ் மகன் அஜித்குமார் (22) பங்கேற்றார். அவர் உணவருந்திச் செல்லும் போது, பாத்திரத்தில் கறி எடுத்துச் சென்றாராம். இதனை முருகன் கண்டித்தார்.

    இந்த முன் விரோதத்தில் முருகன் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த கார் மீது, அஜித்குமார் கல்லை தூக்கி போட்டுள்ளார். இதில் கார் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

    இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசில் முருகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர். இவர் பிரபல ரவுடி என கூறப்படுகிறது.

    Next Story
    ×