search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police inquiry"

    • விபத்தில் ஓட்டுநர் சசிகுமார், தனியார் பாதுகாவலர் பால்ராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோவை மாவட்டத்தில் இருந்து சேலம் நோக்கி இரவு செக்யூல் லாஜிஸ்டிக் என்ற பெயரில் தங்க நகைகளை கொண்டு செல்லும் தனியார் வேன் சென்று கொண்டிருந்தது.

    வேனை சசிகுமார் என்பவர் ஓட்டி வந்தார். தனியார் பாதுகாவலர் பால்ராஜ் என்பவர் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் உடன் வந்து கொண்டிருந்தார். வேனில் பல்வேறு தங்க நகைக் கடைகளில் பெறப்பட்ட 800 கிலோ தங்க நகைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.666 கோடியாகும்.

    இந்த வேன் நள்ளிரவில் ஈரோடு மாவட்டம் சித்தோடு சமத்துவபுரம் பகுதியில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    அப்போது ஒரு வளைவில் வேன் திரும்பிய போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தங்க நகைகளை கொண்டு வந்த வேன் திடீரென சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் சசிகுமார், தனியார் பாதுகாவலர் பால்ராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து உடனடியாக சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தங்க நகைகளுடன் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த வேனை பத்திரமாக மீட்டு சித்தோடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதேப்போல் விபத்தில் காயம் அடைந்த சசிகுமார், பால்ராஜ் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மற்றொரு வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 800 கிலோ தங்க நகைகள் பத்திரமாக சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யோகீஸ்வர்நாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தேசிய தொழில் நுட்ப கல்வி மையம் (என்.ஐ.டி) செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த யோகீஸ்வர்நாத் என்பவர் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

    அவர் அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் மாணவர் யோகீஸ்வர்நாத் விடுதியின் சி-பிளாக்கின் 7-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவர் யோகீஸ்வர்நாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மாணவர் யோகீஸ்வர்நாத் மாடியில் இருந்து குதித்து எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது உடனடியாக தெரியவில்லை. பாடங்கள் தொடர்பாக மன அழுத்தம் ஏறபட்டதன் காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய தொழில் நுட்ப கல்வி மையத்தின் விடுதியில் 7-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டில் சின்னசாமி மனைவி சாந்தி மட்டும் தனியாக தூங்கி கொண்டு இருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி நகரில் அடுத்தடுத்து 2 இடங்களில் நள்ளிரவில் முகமூடி கொள்ளையர்கள் வீடு புகுந்து பெண்களிடம் 7 1/2 பவுன் தங்கச் சங்கிலி , ரூ.47ஆயிரம் பணம் மற்றும் 2 செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர்.

    தருமபுரி அருகே உள்ள மொன்னையவன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி, டாஸ்மாக் ஊழியர். இவர் பழைய தருமபுரி அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இந்நிலையில் நேற்று இரவு சின்னசாமி பணியை முடித்து விட்டு வீட்டுக்கு செல்லாமல் அவருடைய தாய் வீட்டுக்கு சென்று அங்கேயே தங்கி உள்ளார். அவரது வீட்டில் சின்னசாமி மனைவி சாந்தி மட்டும் தனியாக தூங்கி கொண்டு இருந்தார்.

    இந்நிலையில் நள்ளிரவில உடல் உபாதை கழிப்பதற்காக சாந்தி எழுந்து வெளியே வந்தார். அப்போது முகமூடி அணிந்த 2 நபர்கள் சாந்தியின் வீட்டுக்குள் சென்று பீரோவில் இருந்த ரூ.47 ஆயிரம் பணம், 2 விலை உயர்ந்த செல்போன்களை திருடி கொண்டிருந்தனர். அப்போது சத்தம் கேட்ட சாந்தி மின் விளக்கை ஆன் செய்த போது சாந்தியின் கழுத்தில் இருந்த 71/2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு, அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    இதேபோல் பென்னாகரம் சாலையில் உள்ள நந்தி நகர் பகுதியில் 6-வது தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. தனியார் சிப்ஸ் கடை உரிமையாளர். அவரது மனைவி ரேவதி. சம்பவத்தன்று 2 பேரும் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது நள்ளிரவில் கதவை தட்டிய முகமூடி அணிந்த 4 மர்ம நபர்கள் ரேவதியின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். ஆனால் அவரது கணவர் ராஜீவ் காந்தி தடுத்ததால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதை தொடர்ந்து ராஜீவ் காந்தியை தாக்கி விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்த தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் ,கொள்ளை நடந்த 2 வீடுகளையும் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் தருமபுரி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த கொள்ளை சம்பவம் நடந்த வீடுகளில் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கிருந்து தடையங்களை பதிவு செய்தனர்.

    தருமபுரி நகரில் நள்ளிரவில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் இப்பகுதி பொது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    • குடிபோதையில் இருந்த நபர்களுக்கும், ஹரிஹரனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிஹரனை கொலை செய்தவர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை அருகே உள்ள சானூரப்பட்டியை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 27). இவர் திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    இந்த நிலையில் ஹரிஹரன் நேற்றிரவு தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கு சென்றார். அப்போது அவர் அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே மது குடித்துக் கொண்டிருந்த சிலரிடம் மது எங்கே கிடைக்கும் என கேட்டுள்ளார். இதில் குடிபோதையில் இருந்த நபர்களுக்கும், ஹரிஹரனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றவே ஹரிஹரனை சரமாரியாக தாக்கினர். இதில் கீழே விழுந்து காயமடைந்த ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது பற்றி தகவல் அறிந்த தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹரிஹரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிஹரனை கொலை செய்தவர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பொதுமக்கள் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
    • சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சின்ன ஆலேஅள்ளி பகுதியில் பிரசித்தி பெற்ற முருகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் காளியம்மன் கோவிலும் அமைந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலையில் மீண்டும் கோவிலை திறப்பதற்காக அவர் வந்தார்.

    அப்போது கோவிலின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு காளியம்மன் சாமி கழுத்தில் இருந்த தங்கத்தாலி ¾ பவுன் நகையும், உண்டியல் பணம் ரூ.5000-த்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்று உள்ளனர் என்பது தெரிய வந்தது.

    உடனே அவர் ஊர் கிராம மக்களிடம் தகவலை தெரிவித்தார். தகவலறிந்த கிராம மக்கள் கோவிலில் திரண்டு வந்து பார்வையிட்டனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோவிலிலை ஆய்வு செய்தனர்.

    மேலும் கோவிலை சுற்றியுள்ள பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டில் இருந்த சுதா செல்வி மற்றும் அவரது உறவினர் பெண்கள் ஆகியோரின் கழுத்தில் அரிவாள், வாள் வைத்து மிரட்டினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள சண்முகபுரத்தை சேர்ந்த யோவான்ராஜ் (வயது33). இவருக்கு திருமணம் ஆகி சுதாசெல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    யோவான்ராஜ் திருச்செந்தூரில் உள்ள லாட்ஜில் வேலை பார்த்து வருகிறார். மேலும் வீட்டின் முன்பு ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். யோவான்ராஜ் நேற்று இரவு விடுதிக்கு வேலைக்குச் சென்றுள்ளார். இதற்கிடையே நேற்று தூத்துக்குடியில் இருந்து சுதாசெல்வியின் உறவினர் பெண்கள் வந்திருந்தனர்.

    இந்நிலையில் யோவான் ராஜ் வீட்டில் பெண்கள், குழந்தைகள் மட்டும் இருப்பதை தெரிந்து கொண்ட கொள்ளை கும்பல் இன்று அதிகாலை சுமார் 2.30 மணிக்கு வீட்டின் கதவை உடைத்து முகமூடி அணிந்து வாள், அரிவாள், கம்பி ஆகிய பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த சுதா செல்வி மற்றும் அவரது உறவினர் பெண்கள் ஆகியோரின் கழுத்தில் அரிவாள், வாள் வைத்து மிரட்டினர்.

    தொடர்ந்து அவர்கள் அணிந்திருந்த நகைள் மற்றும் வீட்டில் பீரோவில் இருந்த நகைகள் என 15 பவுன் தங்க நகைகள், ரொக்கப்பணம் ரூ.60 ஆயிரம் ஆகியவற்றையும் அவர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் வீட்டில் இருந்த 3 செல்போன்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். செல்போன்களை எடுத்துச் சென்றதால் யாருக்கும் தகவல் தெரிவிக்க முடியாமல் தவித்து வந்த பெண்கள் திருச்செந்தூர், தூத்துக்குடி சாலையில் வாகனத்தில் சென்றவர்களிடம் உதவி கேட்டுள்ளனர்.

    சுமார் ஒரு மணி நேரமாக சாலையில் நின்று உதவி கேட்டபோது சாலையில் வாகனத்தில் சென்ற யாரும் உதவ முன் வராததால், சுதா செல்வி வீட்டில் இருந்த பைக்கை எடுத்துக் கொண்டு திருச்செந்தூரில் விடுதியில் பணிபுரியும் கணவரிடம் நேரில் சென்று நடந்ததை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தகவல் தெரிந்து வந்த திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்த்ராஜ், தாலுகா இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து சென்றனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த சுமார் 37 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அய்யாசாமி காலனி 3-வது தெருவை சேர்ந்தவர் அசரியா. இவரது மனைவி எஸ்தர் (வயது 52).இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    அசரியா இறந்து விட்டதால் வெளிநாட்டில் வசிக்கும் தனது தங்கை கெஸ்த்திதிற்கு சொந்தமான அய்யாசாமி காலனி வீட்டில் வசித்து அவரது 3 குழந்தைகளையும் கவனித்து வருகிறார்.

    இந்த நிலையில் கோவையில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக எஸ்தர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கோவைக்கு சென்று விட்டு கடந்த 30-ந்தேதி மீண்டும் வீடு திரும்பினார்.

    அப்போது அவர்களது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த சுமார் 37 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது. இது தொடர்பான புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் கலைவாணர், பொன்பாண்டி உட்பட போலீசார் தீவிர விசாரணை நடத்தி அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    இதில் தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த அருள்ராஜ் என்ற கருவாடு (20), சந்தோஷ்குமார் (21), சந்திரன்(20), ஹரிபிரசாத் (23), சோட்டையன் தோப்பை சேர்ந்த 18 வயதுடைய 2 பேர் மற்றும் ஒரு இளஞ்சிரார் உட்பட 7 பேர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 7 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதே போன்று சிப்காட் காவல் சரக பகுதியில் மேலும் 5 வீடுகளில் அவர்கள் திருடியது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து அவரிடம் இருந்த 60 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    DGL0405052024: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சின்ன ஓவுலாபுரம் வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரவேல்முருகன் (வயது 49). கூலித் தொழிலாளி. இவருக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று கூடலூருக்கு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்ற சந்திரவேல்

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சின்ன ஓவுலாபுரம் வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரவேல்முருகன் (வயது 49). கூலித் தொழிலாளி. இவருக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று கூடலூருக்கு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்ற சந்திரவேல் முருகன் இரவு வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் எரசக்கநாயக்கனூர் பகுதியில் உள்ள தண்ணீர் இல்லாத பாழடைந்த கிணற்றில் சந்திரவேல் முருகன் மற்றும் அவரது பைக் கிடந்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உடலில் வெட்டுக்காயங்கள் இருந்ததால் கொலை செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர். மேலும் சந்திரவேல் முருகனுக்கு யாருடனும் முன் பகையா என விசாரணை மேற்கொண்டனர். இதில் அவரது உறவினர் கவிசீலன் மகன்கள் நிஷாந்த் (வயது 26), நிவிஸ் (24) ஆகியோர் முன் விரோதம் காரணமாக சந்திரவேல்முருகனை வெட்டிக் கொன்று கிணற்றில் வீசியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 2 பேரையும் கைது செய்தனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில், சந்திரவேல் முருகன் குடும்பத்துக்கும் கவிசீலன் குடும்பத்துக்கும் முன் பகை இருந்துள்ளது. கடந்த வருடம் வருசநாடு தருமராஜபுரம் பகுதியில் நடைபெற்ற பஞ்சாயத்தில் சந்திரவேல்முருகனின் மருமகன் நல்லசாமி கொலை செய்யப்பட்டார். இது குறித்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டது. இதில் சந்திரவேல்முருகன் கவிசீலனின் மனைவி பேச்சியம்மாளை தாக்கியுள்ளார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை மனதில் வைத்துக் கொண்டு மகன்கள் நிஷாந்த், நிவிஸ் ஆகியோர் சந்திரவேல்முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர் உடல் மற்றும் பைக்கை கிணற்றில் வீசி சென்றுள்ளனர் என தெரிவித்தனர்.

    • வேல்கம்பியில் பதிவாகியுள்ள கைரேகையை அதிகாரிகள் எடுத்தனர்.
    • கொள்ளையர்கள் ஏதாவது தடயங்களை விட்டு சென்றுள்ளார்களா என ஆய்வு செய்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள ஆரூர்பட்டி கிராமம் கணக்குப்பட்டி பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பெரமனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கணேசன் (33) என்பவர் பூசாரியாக உள்ளார்.

    இவர் அதிகாலை 5 மணிக்கு கோவிலுக்கு வந்து கோவிலை திறந்து பூஜைகளை முடித்துவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

    அதுபோல் அதிகாலையில் கோவிலை திறந்து பூஜைகள் செய்துவிட்டு 11 மணியளவில் கணேசன் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு மாலை 5 மணி அளவில் கோவில் அருகில் வசிக்கும் கோவில் நிர்வாகத்தை சேர்ந்த செல்வம் மகன் ராஜரத்தினவேல் கோவிலை பூட்டி சாவியை வீட்டுக்கு எடுத்து சென்றார்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு வந்த பூசாரி கணேசன் கோவிலை திறந்து உள்ளே சென்றபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த சில்லரை காசுகள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அக்கம் பக்கத்தில் வசிக்கும் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனே அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் கடப்பாரை மற்றும் கோவில் முன்பு நடப்பட்டிருந்த இரும்பு வேல் ஆகியவற்றை கொண்டு உண்டியலை உடைத்து அதில் பக்தர்கள், பொதுமக்கள் காணிக்கை செலுத்திய பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது.

    இது பற்றி கோவில் நிர்வாகத்தினர் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தியபோது உண்டியலில் இருந்த ரூ.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தங்க நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பதும், கோவிலில் சி.சி.டி.வி.கேமரா பொருத்தப்படவில்லை. இதை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியுள்ளதும் தெரியவந்தது.

    கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் கோவிலுக்கு வந்து உண்டியல் மற்றும் கதவு உள்ளிட்டவைகளில் மர்ம நபர்களின் கைரேகை பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

    கோவில் முன்பு நடப்பட்டிருந்த வேல்கம்பியை பிடுங்கி எடுத்து உண்டியலில் இருந்த பூட்டை நெம்பி உடைத்து விட்டு மீண்டும் அதே இடத்தில் வேல்கம்பியை கொள்ளையர்கள் நட்டுள்ளனர். இந்த வேல்கம்பியில் பதிவாகியுள்ள கைரேகையை அதிகாரிகள் எடுத்தனர். மேலும் கொள்ளையர்கள் ஏதாவது தடயங்களை விட்டு சென்றுள்ளார்களா? என ஆய்வு செய்தனர்.

    கோவில் அருகாமையில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்கள் நடமாட்டம் பதிவாகி இருக்கிறதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சாலையில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை சந்தேகத்துக்கு இடமான வகையில் யாராவது சென்றார்களா? என அக்கம், பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவிலுக்குள் மர்ம நபர்கள் புகுந்து உண்டியலை உடைத்து பணம், நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் மக்கள், பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேபிள் சேகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
    • குற்றவாளிகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் தெரியவில்லை.

    திருச்சி:

    திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். இவர் முன்னாள் அ.தி.மு.க. பகுதி செயலாளராகவும், திருச்சி மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலராகவும் பதவி வகித்தவர். இவரது மனைவி கயல்விழி சேகர். இவர் முன்னாள் திருச்சி மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் ஆவார். கேபிள் தொழில் மட்டுமல்லாமல் பன்றி வளர்த்த வருகின்றனர்.

    கேபிள் சேகரின் மகன் முத்துக்குமார் (வயது 27). டிப்ளமோ என்ஜினியர். இந்த நிலையில் பன்றி வளர்ப்பதில் இவர்கள் குடும்பத்திற்கும் கேபிள் சேகரின் சகோதரர் பெரியசாமி குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் வந்தது. தொழில் போட்டியில் ஏற்பட்ட தகராறில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேபிள் சேகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அன்றிலிருந்து இன்று வரை இந்த முன்விரோதம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்நிலையில் திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி பேருந்து நிறுத்தம் அருகே இன்று காலை சுமார் 11 மணியளவில் பட்டப் பகலில் கேபிள் சேகரின் மகன் முத்துக்குமார் சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கியுடன் வந்த சில மர்ம நபர்கள் அவருடைய முகத்தை வெட்டி சிதைத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்சி மாநகர அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் நடந்த இடத்தில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் தொழில் போட்டி மற்றும் முன்விரோதத்தில் இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் தெரியவில்லை. கொலை செய்யப்பட்ட முத்துக்குமார் மீதும் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது .திருச்சி அரியமங்கலத்தில் இன்று பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

    • பொதுமக்கள் இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் மந்திர மூர்த்தி (வயது29). இவரும், இவரது நண்பர் செல்வ மாரியப்பன் என்பவரும் கடந்த 24-ந்தேதி இரவு கோவில்பட்டி வசந்த் நகர் பகுதியில் தண்டவாளத்தின் அருகே அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அந்த வழியாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இந்நிலையில் போதையில் இருந்த மந்திர மூர்த்தியும், அவரது நண்பர் செல்வ மாரியப்பனும் ரெயில் முன்பு செல்பி எடுக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது இருவரும் ரெயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டனர். இதில் மந்திர மூர்த்தி படுகாயம் அடைந்துள்ளார். செல்வ மாரியப்பன் லேசான காயம் அடைந்துள்ளார்.

    அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். படுகாயம் அடைந்த மந்திர மூர்த்திக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று இறந்தார். இதுகுறித்து தூத்துக்குடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மர்ம கும்பல் தாக்குதலில் இருந்து சின்னத்தம்பி அவரது மகன் வெற்றி ஆகிய இரண்டு பேரையும் மீட்டனர்.
    • கார்த்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலை அருகே உள்ள திண்ணக்காலனி கிராமத்தில் முனியப்பன் கோவில் உள்ளது.

    இந்தக் கோவிலின் அருகே புதர் நிறைந்த இடங்களில் இரவு நேரங்களில் அடிக்கடி மர்ம நபர்கள் சிலர் மது குடிப்பதும், போதையில் பாட்டில்களை போட்டு உடைப்பதும், தகராறு செய்வதும் வாடிக்கையாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சிலர் முனியப்பன் கோவிலின் அருகே மது குடித்தனர்.

    அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் போதையில் ஆபாசமாக திட்டிக் கொண்டனர். இதனை அதே பகுதியில் வசித்து வந்த சின்னத்தம்பியும் அவரது மகன் வெற்றியும் அந்த போதை ஆசாமிகளிடம் குடித்துவிட்டு ஏன் இப்படி தகராறில் ஈடுபடுகிறீர்கள். இங்கிருந்து உடனே புறப்படுங்கள் என்று கூறினர். இதனால் சின்னதம்பிக்கும் போதை ஆசாமிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    உடனே போதையில் இருந்து அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர்.

    பின்னர் அவர்கள் சிறிது நேரத்தில் மீண்டும் சிலரை முனியப்பன் கோவில் அருகே அழைத்து வந்தனர்.

    அப்போது சின்னதம்பியையும் அவரது மகன் வெற்றியையும் போதை ஆசாமிகளுடன் அந்த மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கினார்.

    அப்போது வெற்றி தனது நண்பரான எலக்ட்ரீசியன் கார்த்திகையை செல்போனில் உதவிக்கு அழைத்தார்.

    உடனே சம்பவ இடத்திற்கு கார்த்தக்கும் அவரது தந்தை தேவராஜும் விரைந்து வந்தனர்.

    மர்ம கும்பல் தாக்குதலில் இருந்து சின்னத்தம்பி அவரது மகன் வெற்றி ஆகிய இரண்டு பேரையும் மீட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம கும்பல் தேவராஜையும் அவரது மகன் கார்த்திகையும் சரமாரியாக தாக்கினார். பின்பு கார்த்திக்கின் கால்களின் இடையே மோட்டார் சைக்கிளை மர்ம கும்பலை சேர்ந்த சிலர் ஏற்றி வெறிச்செயலில் ஈடுபட்டனர். இதில் கார்த்திக் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் திரண்டனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். சமம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனே அங்க விரைந்து வந்து காயமடைந்த தேவராஜை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்போது கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் இறந்த கார்த்திக் உறவினர்களும், அப்பகுதியைச் சேர்ந்த கிராமங்களும் திரண்டு வந்து போதையில் தகராறில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோசங்களை எழுப்பினார். இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தகவல் அறிந்த ஏ.டி.எஸ் பி சங்கு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்த்திக்கின் உறவினர்களிடம் சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தினர் அதன் பின்பு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை ஏற்றி கொலை செய்த கார்த்திக்குக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தன் திருமணம் ஆனது. அவருடைய மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருமணம் ஆகி ஒன்றரை வருடத்தில் கார்த்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×