என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Home invasion robbery"
- பெண்ணை தாக்கி துணிகரம்
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பழம்பேட்டை பள்ளத்தெ ருவை சேர்ந்தவர் முன் னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சேகர் (60). இவ ரது மனைவி சித்ரா (45). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவ ரும் திருமணமாகி சென் னையில் வசித்து வருகின்ற னர்.
நேற்று முன்தினம் இரவு சேகர் தூங்கிய பிறகு, 11 மணியள வில் அவரது மனைவி சித்ரா கதவுகளை மூடி விட்டுதூங்க சென்றார். நள் ளிரவு சுமார் 12 மணியள வில் வீட்டில் ஏதோ சத்தம் கேட்டதால் சித்ரா எழுந்து பார்த்தார். அப்போது மர்ம கும்பல் 2 பேர் மறைந்திருப்பதை பார்த்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட முயன்றார். அப்போது அதிலிருந்து ஒருவர் சித்ராவை திடீரென தாக்கினார். இதில் சித்ரா மயங்கி கீழே விழுந்தார். சிறிது நேரம் கழித்து
மயக்கம் தெளித்து எழுந்த சித்ரா, கழுத்தில் இருந்த 8 பவுன் தாலி செயினை மர்ம கும்பல் பறித்து சென்றது தெரியவந் தது. உடனே அலறி கூச்ச லிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த போது மருமகும்பல் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.
பின்னர் இது குறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசா ரணை நடத்தினர்.
விசாரணையில் கொள்ளை கும்பல் முன்கூட்டியே வீடு புகுந்து பதுங்கியிருந்து நள்ளிரவு கைவரிசை காட்டியது தெரியவந் தது.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராமாயி அம்மாள் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள தனது மகன் ரமேஷ் வீட்டிற்கு சென்றார்.
- அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம் அருகே எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மனைவி ராமாயி அம்மாள். இவர் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள தனது மகன் ரமேஷ் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் ராமாயி அம்மாள் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவி த்தனர்.
உடனே அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்து வீட்டை பார்த்த போது மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த ½ கிலோ வெள்ளி தட்டு, வெள்ளி காமாட்சி விளக்கு, வெள்ளி குங்குமச்சிமிழ் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தொியவந்தது. இது குறித்து ராமாயிஅ ம்மாள்கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி வழக்குப்பதிவு செய்து வெள்ளி பொரு ட்கள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்