என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    நள்ளிரவு வீடு புகுந்து கொள்ளை
    X

    நள்ளிரவு வீடு புகுந்து கொள்ளை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெண்ணை தாக்கி துணிகரம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பழம்பேட்டை பள்ளத்தெ ருவை சேர்ந்தவர் முன் னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சேகர் (60). இவ ரது மனைவி சித்ரா (45). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவ ரும் திருமணமாகி சென் னையில் வசித்து வருகின்ற னர்.

    நேற்று முன்தினம் இரவு சேகர் தூங்கிய பிறகு, 11 மணியள வில் அவரது மனைவி சித்ரா கதவுகளை மூடி விட்டுதூங்க சென்றார். நள் ளிரவு சுமார் 12 மணியள வில் வீட்டில் ஏதோ சத்தம் கேட்டதால் சித்ரா எழுந்து பார்த்தார். அப்போது மர்ம கும்பல் 2 பேர் மறைந்திருப்பதை பார்த்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட முயன்றார். அப்போது அதிலிருந்து ஒருவர் சித்ராவை திடீரென தாக்கினார். இதில் சித்ரா மயங்கி கீழே விழுந்தார். சிறிது நேரம் கழித்து

    மயக்கம் தெளித்து எழுந்த சித்ரா, கழுத்தில் இருந்த 8 பவுன் தாலி செயினை மர்ம கும்பல் பறித்து சென்றது தெரியவந் தது. உடனே அலறி கூச்ச லிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த போது மருமகும்பல் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

    பின்னர் இது குறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசா ரணை நடத்தினர்.

    விசாரணையில் கொள்ளை கும்பல் முன்கூட்டியே வீடு புகுந்து பதுங்கியிருந்து நள்ளிரவு கைவரிசை காட்டியது தெரியவந் தது.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×