search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகனின் நடவடிக்கையால் தீக்குளித்து உயிரை மாய்த்த பெண்
    X

    மகனின் நடவடிக்கையால் தீக்குளித்து உயிரை மாய்த்த பெண்

    மகன் ஊதாரித்தனமாக சுற்றியதால் வேதனையடைந்த தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி சமத்துவப்புரத்தை சேர்ந்தவர் பாலையா (வயது58). இவரது மனைவி நீலாவதி (48). இவர்களுக்கு மகேந்திரன் என்ற மகன் உள்ளார். இவர் முல்லையம்பட்டியில் சைக்கிள் கடை வைத்து நடத்தி வருவதாக பெற்றோரிடம் கூறினார்.

    ஆனால் வேலைக்கு சரிவர செல்லாமலும் வீட்டில் இருந்து பணத்தை வாங்கி அதனை வீண் செலவு செய்து வந்துள்ளார். தாய் பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை.

    இதனால் மனமுடைந்த நீலாவதி தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த காயங்களுடன் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இது குறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×