search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்
    X

    வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்

    வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் இன்று சுதேசிமில் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    தூத்துக்குடி ஸ்டெர் லைட்டுக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனை கைது செய்த தமிழக அரசு மற்றும் போலீசாரை கண்டித்து புதுவை மாநில தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் இன்று புதுவை சுதேசி மில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகன்னாதன், மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர் செல்வன், ம.தி.மு.க. கபிரியேல், மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×