என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குட்கா ஊழல் தொடர்பாக வழக்கு பதிவு செய்தது சி.பி.ஐ.
Byமாலை மலர்30 May 2018 10:40 AM GMT (Updated: 30 May 2018 10:40 AM GMT)
குட்கா ஊழல் தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையை ஏற்று சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது. #GutkhaCase #GutkhaScam
சென்னை:
குட்கா முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றமும் இந்த தீர்ப்பை உறுதி செய்தது. அதன் அடிப்படையில் குட்கா ஊழல் பற்றி விசாரிக்கும் பொறுப்பை டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்றனர். அத்துடன் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு சென்னை வந்து விசாரணையைத் தொடங்கியது.
முதற்கட்டமாக குட்கா ஊழல் தொடர்பான முதல் தகவல் அறிக்கை ஆவணத்தை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழங்கியது. அதனை ஆய்வு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள், அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் தருமாறு தமிழக அரசிடம் டெல்லி சி.பி.ஐ. கேட்டிருப்பதால் அந்த ஆவணங்கள் கைமாறியதும் விசாரணை சூடுபிடிக்கும் என தெரிகிறது. #GutkhaCase #GutkhaScam
குட்கா முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றமும் இந்த தீர்ப்பை உறுதி செய்தது. அதன் அடிப்படையில் குட்கா ஊழல் பற்றி விசாரிக்கும் பொறுப்பை டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்றனர். அத்துடன் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு சென்னை வந்து விசாரணையைத் தொடங்கியது.
முதற்கட்டமாக குட்கா ஊழல் தொடர்பான முதல் தகவல் அறிக்கை ஆவணத்தை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழங்கியது. அதனை ஆய்வு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள், அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாநில லஞ்ச ஒழிப்புத் துறையினர், குட்கா விற்பனைக்கு லஞ்சம் பெற்றதாக 17 கீழ்மட்ட அதிகாரிகள் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்திருந்தது. தற்போது அவர்களின் பெயர்கள் சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. அடுத்தகட்டமாக, குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் அதிகாரிகளின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X