search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாங்குநேரியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
    X

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாங்குநேரியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்தும் மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நெல்லை:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்தும் மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நாங்குநேரி பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்கேஎம்.சிவக்குமார் தலைமை தாங் கினார். இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அப்பாவி மக்களை படுகொலை செய்த அரசை வன்மையாக கண்டிப்பது, பெட்ரோல்-டீசல் விலையினை ஜி.எஸ்.டி.வரம்புக்குள் கொண்டு வரவேண்டும் மற்றும் முடக்கி வைக்கப்பட்ட இணையதள சேவை உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

    இதில் ஏஐசிசி உறுப்பினர் வசந்தா, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜார்ஜ் ஜெயராஜ், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மோகன்குமார்ராஜா, மாவட்ட துணைத்தலைவர் தனபால், மாவட்ட பொதுச்செயலாளர் மருதம் ஆனந்த், வட்டார தலைவர்கள் ஜார்ஜ், ரவீந்திரன், சொர்ணம், முன்னாள் வட்டார தலைவர் செல்வராஜ், நகர தலைவர்கள் பைசல், மலுக்காமலி, செல்லையா, மாணிக்கம், கிழக்கு மாவட்ட சட்டபிரிவு தலைவர் பால்ராஜ், சேவாதள தலைவர் செல்வின், நாங்குநேரி தொகுதி ஊடகபிரிவு தலைவர் தருவை காமராஜ், நாங்குநேரி வட்டார துணைத்தலைவர் வாகைதுரை, நல்லான்குளம் சுரேஷ், பாபு, வானமாமலை மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாங்குநேரி நகர காங்கிரஸ் தலைவர் சுடலைக்கண்ணு செய்திருந்தார்.

    Next Story
    ×