என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மின்சாரம் தாக்கி ஊழியர் பலி: மின்கம்பத்திலேயே பிணமாக கிடந்தார்
Byமாலை மலர்25 May 2018 4:15 PM GMT (Updated: 25 May 2018 4:15 PM GMT)
மின்கம்பி அறுந்ததை சரிசெய்யும் பணி ஈடுபட்ட ஊழியர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கந்தம்பாளையம்:
பரமத்தி வட்டம் ஜமீன் இளம்பிள்ளை குடித்தெருவில் வசித்து வந்தவர் மாணிக்கம் (வயது 54). இவர் சோழசிராமணி மின்சார அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
நேற்று சிறுபூலாம்பாளையம் குருவிக்கல்காடு என்ற இடத்தில் உள்ள உயர்அழுத்த மின்கம்பி அறுந்ததை சரிசெய்யும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இவர் பணியாளர்களுடன் அப்பணியில் ஈடுபட்டார்.
அப்போது ஜமீன்இளம்பிள்ளை ஈ-நல்லாக்கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்திற்கு அருகில் மின்கம்பத்தில் ஏறி மாணிக்கம் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அவர் இறந்தார். அவரது பிணம் மின்கம்பத்திலேயே தொங்கியபடி கிடந்தது.
இது குறித்து சோழசிராமணி மின்வாரிய உதவி பொறியாளர் சரவணகுமார் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராதா மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X