search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி ஊழியர் பலி: மின்கம்பத்திலேயே பிணமாக கிடந்தார்
    X

    மின்சாரம் தாக்கி ஊழியர் பலி: மின்கம்பத்திலேயே பிணமாக கிடந்தார்

    மின்கம்பி அறுந்ததை சரிசெய்யும் பணி ஈடுபட்ட ஊழியர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கந்தம்பாளையம்:

    பரமத்தி வட்டம் ஜமீன் இளம்பிள்ளை குடித்தெருவில் வசித்து வந்தவர் மாணிக்கம் (வயது 54). இவர் சோழசிராமணி மின்சார அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

    நேற்று சிறுபூலாம்பாளையம் குருவிக்கல்காடு என்ற இடத்தில் உள்ள உயர்அழுத்த மின்கம்பி அறுந்ததை சரிசெய்யும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இவர் பணியாளர்களுடன் அப்பணியில் ஈடுபட்டார்.

    அப்போது ஜமீன்இளம்பிள்ளை ஈ-நல்லாக்கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்திற்கு அருகில் மின்கம்பத்தில் ஏறி மாணிக்கம் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அவர் இறந்தார். அவரது பிணம் மின்கம்பத்திலேயே தொங்கியபடி கிடந்தது. 

    இது குறித்து சோழசிராமணி மின்வாரிய உதவி பொறியாளர் சரவணகுமார் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராதா மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×