search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூர் அருகே வீட்டில் இருந்த மாணவி கடத்தல்
    X

    வில்லியனூர் அருகே வீட்டில் இருந்த மாணவி கடத்தல்

    வில்லியனூர் அருகே வீட்டில் இருந்த மாணவியை யாரோ கடத்தி சென்று விட்டதாக போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி முனியம்மாள். இவர்களது மகள் காயத்ரி (வயது 16). இவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி காயத்ரியை திடீரென காணவில்லை. பல இடங்களில் தேடியும் எங்கும் காயத்ரி இல்லை.

    இதையடுத்து லட்சுமணன் தனது மகள் மாயமானது குறித்து கரிக்கலாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் காயத்ரியை யாரோ கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாக கூறி உள்ளார்.

    போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் பெரியசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×