search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடவாசல் அருகே திருவிழாவில் கோஷ்டி மோதல்: 5 பேர் மீது வழக்கு
    X

    குடவாசல் அருகே திருவிழாவில் கோஷ்டி மோதல்: 5 பேர் மீது வழக்கு

    குடவாசல் அருகே கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள ஏருந்தவாடியைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் அப் பகுதியில் உள்ள வெங்கடாசலபதி கோவில் கம்பசேவை திருவிழாவில் கலந்து கொண்ட போது நாடக கலைஞர்கள் மீது கல்வீசி தாக்கியதாக அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், செங்குட்டுவன், பச்சைமுத்து, குனசேகரன், முரளி ஆகியோர் குற்றம் சாட்டினர். 

    இதனை ஏற்று கொள்ளாமல் அரவிந்தும், அவர் உறவினர்கள் தனபால், கணேசன், வினோத் ஆகியோர் மறுத்து பேசியுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சரவணன் உள்ளிட்ட 4 பேரும் உருட்டு கட்டையால் அரவிந்த் மற்றும் அவரது உறவினர்களை தாக்கியுள்ளனர்.

    இதுபற்றி குடவாசல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர ராஜா 5 பேர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.

    Next Story
    ×