search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டி அருகே விபத்துகளில் சிறுவன் உள்பட 2 பேர் பலி
    X

    ஆண்டிப்பட்டி அருகே விபத்துகளில் சிறுவன் உள்பட 2 பேர் பலி

    ஆண்டிப்பட்டி அருகே வெவ்வேறு விபத்துகளில் சிறுவன் உள்பட 2 பேர் பலியாகினர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே தொப்பம்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி வனத்தாய். சம்பவத்தன்று வனத்தாய் தனது மகன் தமிழ் அழகனுடன் (வயது5) அதே பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த சரக்கு வாகனம் மோதியதில் தமிழ்அழகன் படுகாயம் அடைந்து தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழ்அழகன் பரிதாபமாக பலியானார்.

    ஆண்டிப்பட்டி அருகே அமச்சியாபுரத்தை சேர்ந்தவர் குழந்தைராஜ் (57). தனது நண்பர் சவுந்தரராஜனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கந்துவாரன் பட்டிவிலக்கு பகுதியில் சென்றபோது சாலையில் இருந்து தடுப்பு மீது மோதியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் குழந்தைராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். சவுந்தரராஜன் படுகாயம் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×