என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே விபத்துகளில் சிறுவன் உள்பட 2 பேர் பலி
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே தொப்பம்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி வனத்தாய். சம்பவத்தன்று வனத்தாய் தனது மகன் தமிழ் அழகனுடன் (வயது5) அதே பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த சரக்கு வாகனம் மோதியதில் தமிழ்அழகன் படுகாயம் அடைந்து தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழ்அழகன் பரிதாபமாக பலியானார்.
ஆண்டிப்பட்டி அருகே அமச்சியாபுரத்தை சேர்ந்தவர் குழந்தைராஜ் (57). தனது நண்பர் சவுந்தரராஜனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கந்துவாரன் பட்டிவிலக்கு பகுதியில் சென்றபோது சாலையில் இருந்து தடுப்பு மீது மோதியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் குழந்தைராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். சவுந்தரராஜன் படுகாயம் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்