search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒன்றிய நிர்வாகிகளுடன் ரஜினி 25-ந் தேதி ஆலோசனை
    X

    ஒன்றிய நிர்வாகிகளுடன் ரஜினி 25-ந் தேதி ஆலோசனை

    நடிகர் ரஜினிகாந்த், வருகிற 25-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஒன்றிய செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார். #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    அரசியல் கட்சிக்கான அடிப்படையான வலுவான கட்டமைப்பை நடிகர் ரஜினி திட்டமிட்டு உருவாக்கி வருகிறார்.

    கடந்த வாரம் முதலில் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார். அடுத்த சில நாட்களிலேயே இளைஞர் அணி செயலாளர்களை சந்தித்தார். அந்த வரிசையில் வரும் 20-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மகளிர் அணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார். அதற்கும் அடுத்து 25-ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் உள்ள ஒன்றிய செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

    மாவட்டத்துக்கு குறைந்தது 15 பேர் என்றாலும் சுமார் 500 பேர் திரள்வார்கள். எனவே இதுவரை நடத்தியதுபோல வீட்டில் சந்திப்பது சிரமம். எனவே ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நிகழவிருக்கிறது.

    கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். ரஜினி அது முதலே மண்டபத்தில் தான் சந்திப்புகளை நிகழ்த்தி வந்தார். ஆனால் செய்திகள் வெளியில் கசியவே வீட்டை தேர்ந்தெடுத்தார். ஒன்றிய செயலாளர்கள் கூட்டத்திலும் இதே ரகசியத்தை கடைபிடிக்க மன்ற நிர்வாகிகள் திட்டமிட்டு வருகிறார்கள். #Rajinikanth #RajiniMakkalMandram

    Next Story
    ×