search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எழுத்தாளர் பாலகுமாரனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்
    X

    எழுத்தாளர் பாலகுமாரனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்

    மிகப்பெரிய எழுத்தாளர் பாலகுமாரன் என அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியப் பின் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். #Balakumaran
    சென்னை:

    இரும்புக்குதிரைகள் நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நாவலாசிரியர் பாலகுமாரன். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்றுள்ள பாலகுமாரன், உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

    பாலகுமாரனின் மறைவுக்கு எழுத்துலகம் மற்றும் கலையுலகத்தை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பேசும்போது,

    என் மிக நெருங்கிய நண்பர் பாலகுமாரன். அவர் மிகப்பெரிய எழுத்தாளர், பாட்ஷா படத்தில் வசனம் எழுதி இருந்தார். இந்த படத்தின் வெற்றி பிறகு வேறு படத்தில் பாலகுமாரனை வசனம் எழுத வைக்க முயற்சித்தேன். அப்போது, இலக்கியமும், ஆன்மிகமும் எனது உலகம் என்று அவர் கூறியதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். #Balakumaran #RIPBalakumaran
    Next Story
    ×