search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னம் வட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை நடக்கிறது
    X

    குன்னம் வட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை நடக்கிறது

    குன்னம் வட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவைகளை வழங்குவதற்காக அம்மா திட்டம் தமிழக அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் படி வருவாய் வட்டாட்சியர் தலைமையில், வருவாய்த் துறை அலுவலர்கள் பொதுமக்களை தேடிச் சென்று அவர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில், அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்படுகின்றது.

    இந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் பட்டா மாறுதல்கள் (உட்பிரிவு இல்லாத இனங்கள்), சிட்டா நகல்கள், ஆதார் அட்டைகள் பெற பதிவுகள் செய்தல், குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள், வாரிசுரிமைச் சான்றிதழ்கள், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான சான்றிதழ்கள், விபத்து நிவாரணம் கோரும் மனுக்கள் மீதான அறிக்கை, மேலும் ஒரே நாளில் தீர்வு காணக்கூடிய இதர மனுக்கள் மீது ஆணைகள் பிறப்பித்தல் ஆகியவை அன்றைய தினமே உடனடியாக பரிசீலிக்கப்பட்டு உரிய ஆணைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதற்காக முகாம் நடைபெறும் இடங்களில் இணைய தள இணைப்புடன் கூடிய கணினி வசதி, பிரிண்டர் ஆகிய வசதிகள் செய்யப்பட உள்ளன. முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் கணினியில் பதிவு செய்யப்பட்டு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுகின்றன. உடனடியாக முடிவு செய்ய இயலாத விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதில் சம்ம ந்தப்பட்ட மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். நாளை 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று குன்னம் வட்டத்தில் காடூர் (வடக்கு) வருவாய் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். 

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×