search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் அருகே பனியன் தொழிலாளி தற்கொலை
    X

    திருப்பூர் அருகே பனியன் தொழிலாளி தற்கொலை

    திருப்பூர் அருகே பனியன் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூ:

    திருப்பூர் பெரியதோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இது பற்றி ஈஸ்வரன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் இந்த காதலுக்கு ஈஸ்வரனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஈஸ்வரன் சோகத்துடன் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் விரக்தி அடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த போது வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். வீட்டிற்கு வந்த பெற்றோர் தனது மகன் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அவரை மீட்டு, திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஈஸ்வரன் இறந்தார். இது தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×