என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
தினகரன் - திவாகரனை கைது செய்ய வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
Byமாலை மலர்18 Jan 2018 7:36 AM GMT (Updated: 18 Jan 2018 7:36 AM GMT)
ஜெயலலிதா மரணத்தை வைத்து விளம்பரம் தேடுகின்ற மலிவான செயலில் ஈடுபடும் தினகரன், திவாகரனை கைது செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை:
அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்து விட்ட பிறகு யாராக இருந்தாலும் விசாரணை கமிஷனில்தான் தகவல் சொல்ல வேண்டும். விசாரணை கமிஷனுக்கு தெரிவிக்காமல் வெளியே சொல்வது மிகப்பெரிய குற்றம்.
அம்மாவை வைத்து விளம்பரம் தேடுகின்ற மலிவான செயலில் திவாகரனும், தினகரனும் செயல்படுகிறார்கள்.
விசாரணை கமிஷன் அமைத்த பிறகு இவர்கள் எல்லாவற்றையும் வெளியில் சொல்கிறார்கள். வீடியோ வெளியிடுகிறார்கள். அதேபோல் திவாகரன் ஒரு கருத்து சொல்கிறார். அம்மாவை வைத்து அவர்கள் அரசியல் செய்கிறார்கள்.
எனவே விசாரணை ஆணையம் தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்து திவாகரனையும், தினகரனையும் கைது செய்து உண்மைகளை கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X