என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![நாகமலை புதுக்கோட்டையில் கார் டிரைவர் குத்திக் கொலை நாகமலை புதுக்கோட்டையில் கார் டிரைவர் குத்திக் கொலை](https://img.maalaimalar.com/Articles/2018/Jan/201801151310324408_car-driver-killed-nagamalai-pudukkottai_SECVPF.gif)
நாகமலை புதுக்கோட்டையில் கார் டிரைவர் குத்திக் கொலை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
நாகமலை புதுக்கோட்டை:
நாகமலை புதுக்கோட்டை ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்தவர் நாடோடி. இவரது மகன் கார்த்தி (வயது 25). திருமணம் ஆகவில்லை. கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று காலை கார்த்தி மது குடித்து விட்டு வீட்டில் இருந்தார். அப்போது அங்கு 6 பேர் கும்பல் வந்தது. அவர்கள் திபுதிபுவென கார்த்தி வீட்டுக்குள் புகுந்தனர். கார்த்தியை தரதரவென வெளியே இழுத்து வந்து கத்தியால் குத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த கார்த்தியை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். கார்த்தியை குத்திக் கொன்ற கும்பல் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)