search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரையாம்புத்தூரில் போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது
    X

    கரையாம்புத்தூரில் போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது

    கரையாம்புத்தூரில் போலீஸ்காரரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
    பாகூர்:

    பாகூர் அருகே கரைய £ம்புத்தூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட சொர்ணாவூரில் நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல் புத்தாண்டை கொண்டாடும் வகையில் நடு ரோட்டில் மது குடித்து கொண்டு ரகளையில் ஈடுபட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கரையாம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணி புரியும் அந்துவான் சம்பவ இடத்துக்கு சென்று ரகளையில் ஈடு பட்ட வாலிபர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார்.

    ஆனால், ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும் அந்துவானை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த போலீஸ்காரர் அந்துவான் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் கரையாம்புத்தூர் போலீ சார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் போலீஸ்காரர் அந்துவானை தாக்கிய வாலிபர்கள் கரையாம்புத்தூரை சேர்ந்த விஜயபாபு (24) மற்றும் கார்த்திக், பாலசுந்தர் என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் களை போலீசார் தேடி வந்தனர். நேற்று கரையாம்புத்தூர் பஸ் நிறுத்தம் அருகே பதுங்கி இருந்த விஜயபாபுவை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×