என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கத்தில் இருந்து 23-ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: முதலமைச்சர் உத்தரவு
Byமாலை மலர்21 Oct 2017 10:08 AM GMT (Updated: 21 Oct 2017 10:08 AM GMT)
நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கத்தில் இருந்து 23-ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கத்திலிருந்து நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க பாசனப் பகுதி மற்றும் உடையார்குளப் பாசனப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க பாசனப் பகுதி மற்றும் உடையார்குளப் பாசனப் பகுதிகள் பயனடையும் வகையில் நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கத்திலிருந்து 23.10.2017 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள 4831 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.
மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கத்திலிருந்து நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க பாசனப் பகுதி மற்றும் உடையார்குளப் பாசனப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க பாசனப் பகுதி மற்றும் உடையார்குளப் பாசனப் பகுதிகள் பயனடையும் வகையில் நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கத்திலிருந்து 23.10.2017 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள 4831 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.
மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X