என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
மதுபானங்கள் விலை உயர்வு வேதனை அளிக்கிறது: தஞ்சை குடிமகன்கள் குமுறல்
தஞ்சாவூர்:
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு அமுலுக்கு வருகிறது. இதனால் குவார்ட்டர் ரூ.10 முதல் 12 வரை விலை அதிகரித்துள்ளது.
மதுபானங்களின் விலை உயர்வு குடிமகன்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதுகுறித்து தஞ்சை இ.பி.காலனியை சேர்ந்த அமல்தாஸ் என்பவர் கூறியதாவது:-
நான் வாலிப வயதில் இருந்தே மது குடித்து வருகிறேன். ஏற்கனவே மதியம் 12 மணிக்கு கடை திறப்பதால் மது குடிப்பதை ஒரளவு குறைத்து வந்தேன்.
தற்போது அரசு மதுபானங்களின் விலையை உயர்த்தி உள்ளது வேதனை அளிக்கிறது. அதாவது 100 சதவீதம் அதிரடியாக விலை உயர்த்தி விட்டால் நான் இனி மேல் டாஸ்மாக் கடை பக்கமே போக மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தெற்கு தெருவை சேர்ந்த தனசேகர் என்பவர் கூறியதாவது:-
முன்பு மதுபான விலை குறைவாகவே இருந்தது. ரூ.50 கொண்டு சென்றால் மது குடித்து விட்டு வரலாம். தினமும் ரூ.500 வரை சம்பாதிக்கும் நான் டாஸ்மாக் கடையில் ரூ.200 வரை கொடுத்து மதுகுடித்து வருகிறேன்.
இதனால் வீட்டில் மனைவி தகராறு செய்து வருகிறார். தற்போது மதுபான விலையை அரசு இப்படி ஒரேயடியாக விலை உயர்த்தும் என்று நினைக்கவே இல்லை. இது மிகவும் கவலை அளிக்கிறது. எனவே அரசு மறுபரிசீலனை செய்து விலையை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்