search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிமகன்கள்"

    • சமீபகாலமாக பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
    • இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலையம் ஈரோட்டில் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தினமும் உள்ளூர்-வெளியூர் மாவட்ட பஸ்கள் இயங்கி வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    தற்போது பஸ் நிலையத்தில் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாகபஸ் நிலையத்தில் மினி பஸ் நிறுத்தம் ரேக் பகுதியில் குடிமகன்கள் மது அருந்திவிட்டு செய்யும் அட்டகாசம் கொஞ்சம் நஞ்சமல்ல. மது அருந்திவிட்டு அங்கேயே தூங்குகின்றனர். சில சமயம் வாந்தி எடுக்கின்றனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் குறிப்பாக பெண் பயணிகள் முகம் சுளிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    இதனை அடுத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி பஸ் நிலையத்தில் தேவையில்லாமல் சுற்றி கொண்டிருப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். எனினும் குடிமகன்கள் ரகளையில் ஈடுபடும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று காலை நாமக்கல் சேலம் ரேக்கில் ஒரு குடிமகன் மது போதையில் அங்கும் இங்குமாக சுற்றி கொண்டிருந்தார். அப்போது கல்லூரி மாணவிகள் கல்லூரி செல்வதற்காக பஸ்சுக்கு காத்துக் கொண்டிருந்தனர். அதில் ஒரு மாணவியை பார்த்து அந்த குடிமகன் ஆபாச வார்த்தையில் பேசினார். இதனால் அந்த மாணவி அழுதார். இதே போன்று பஸ் நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் குடிமகன்கள் அட்டகாசத்ததால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

    இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    அய்யலூரில் பஸ் ஸ்டாப் குடிமகன்களால் மாணவ- மாணவிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
    வடமதுரை:

    திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள அய்யலூரி செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு அகற்றப்பட்டன. ஆனால் அதன் பின் பல்வேறு கடைகளிலும், மொபைல் பைக் மூலமும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் ஏற்கனவே கடை இருந்த பகுதியிலும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதால் இதனை கண்டித்து பொதுமக்கள் மதுபாட்டிலை உடைத்து போராட்டம் நடத்தினர். தற்போது பெரும்பாலான பஸ் ஸ்டாப்புகளை குடிமகன்கள் பாராக பயன்படுத்தி வருகின்றனர்.

    காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் போதும், வீடு திரும்பும் போது பஸ் ஸ்டாப்புகளில் மயங்கிய நிலையில் கிடக்கும் குடிமகன்களை பார்த்து மாணவிகள் அச்சமடைந்து உள்ளனர். 24 மணி நேரமும் மதுபானம் விற்கப்படுவதால் காலையிலேயே போதை தலைக்கேறிய நிலையில் அலங்கோலமாக கிடக்கின்றனர். எனவே இது போன்ற குடிமகன்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×