search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "scared"

    • தீத்திபாளையம் ரேசன் கடை ஷட்டரை உடைத்து, அரிசி, பருப்பு, சர்க்கரை மூட்டைகளை தின்றது
    • வனத்துக்கு முன்பாக உள்ள அடர்ந்த புதற்காட்டில் தஞ்சமடைந்து நிற்பதால் பொதுமக்கள் அச்சம்

    வடவள்ளி,

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் மலை அடிவார கிராமங்களுக்கு அடிக்கடி காட்டு யானைகள் வந்து செல்வது வழக்கம்.

    உணவு மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் வரும் யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து விளை பயிர்களை சேதப்படுத்துவதாக தொடர்ந்து விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 8 யானைகள் கொண்ட கூட்டம், தீத்திபாளையம் கிராமத்திற்குள் புகுந்தது.

    அப்போது அங்கு இருந்த ரேசன் கடையின் ஷட்டரை உடைத்து, உள்ளே இருந்த அரிசி, பருப்பு, சர்க்கரை மூட்டைகளை வெளியே எடுத்து போட்டு சாப்பிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அங்கு திரண்ட பொதுமக்கள் வனத்துறை உதவியுடன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். நேற்றிரவு காட்டு யானைகள் கூட்டம் மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வந்துள்ளன.

    நள்ளிரவு நேரத்தில் அய்யாசாமி மலை அடிவாரத்தில் இருந்து வெளிவந்த யானைகள் வனத்தையொட்டி உள்ள தோட்டங்களிலும், கிராமப்பகுதிகளிலும் உலா வந்துள்ளன.

    இதனால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் விரைந்து சென்று 3 குழுக்களாக பிரிந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் குப்பனூர் பகுதி வழியாக சென்று அடர் வனத்துக்கு முன்பாக உள்ள அடர்ந்த புதற்காட்டில் தஞ்சமடைந்துள்ளன. இந்த யானைகளை விரட்ட வனத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    இந்த பகுதிகளில் யானை நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி இந்த யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கமாகியுள்ளது.

    அவ்வாறு ஊருக்குள் வரும் யானைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. விளை நிலங்களை தொடர்ந்து யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே யானைகள் ஊருக்குள் வராமல் இருக்கும் வகையில் வனத்து

    றையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வெடி மருந்து தொழிற்சாலை வளாகத்திற்குள்ளும் வனவிலங்குகள் இரவும் பகலும் தொடர்ந்து நடமாடி வருகின்றன
    • சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை விடப்பட்டும் எவ்வித பலனும் இல்லை.

     அருவங்காடு,

    குன்னூர் அருகே உள்ள அருவங்காடு பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு 1100 குடியிருப்புகளும் உள்ளன.

    இதுமட்டுல்லாமல் இந்த தொழிற்சாலையின் கட்டுப்பாட்டின் கீழ் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை இயங்கி வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக வெடி மருந்து தொழிற்சாலை வளாகத்திற்குள்ளும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் காட்டெருமைகள், கரடி, சிறுத்தை ஆகிய வனவிலங்குகள் இரவும் பகலும் தொடர்ந்து நடமாடி வருகின்றன

    இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினருக்கு மனு மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் கோரிக்கை விடப்பட்டும் எவ்வித பலனும் இல்லை.

    எனவே தாங்கள் இம்மனுவை பரிசீலனை செய்து 2 ஆயிரம் தொழிலாளிகள் மற்றும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அருவங்காடு வெடிமருந்து தொழில் ஒருங்கிணைந்த ஊழியர் நலச்சங்க பொதுச் செயலாளர் அசோகன் தமிழக முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பி உள்ளார். 

    • இரவு நேரங்களில் ஆலையின் உடைந்த சுவர் வழியாக வெளியேறி ஊருக்குள் புக முயற்சி
    • வனத்துறையினர் நீண்டநேரம் போராடி யானையை காட்டிற்குள் விரட்டினர்

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரக பவானி நீர்தேக்க பகுதியில் அமைந்துள்ளது. மேலும் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக காடுகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ள சிறுமுகை வனச்சரகம் உள்ளது.

    இங்கு காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம். வலசை காலங்களில் நூற்றுக்கணக்கான யானைகள் இவ்வழியே இடம் பெயர்வது வழக்கம்.

    இப்படி இடம் மாறும் யானைகளில் சில உணவும், நீரும் ஓரிடத்தில் கிடைத்தால் அங்கேயே சில காலம் தங்கி விடுவதும் உண்டு. இவை காட்டு யானைகளுக்கே உண்டான இயல்பிற்கு மாறாக இயற்கையான வன தீவனங்களை தவிர்த்து விட்டு விவசாய பயிர்களை உண்டு பழகி விட்ட கிராப் ரைடர்ஸ் வகை யானைகள் என வனத்துறையினர் அழைக்கின்றனர்.

    இந்த வகையில் சிறுமுகை பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வந்த பழைய விஸ்கோஸ் ஆலையில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. அடர்ந்த காட்டை ஒட்டி பவானி ஆற்றங்கரையோரம் இயங்கி வந்த இந்த ஆலை பல்வேறு காரணங்களினால் மூடப்பட்டு பல ஆண்டுகளாகி விட்ட நிலையில் புதர்மண்டி ஆள் நடமாட்டம் இல்லாத ஆலை வளாகத்தினுள் யானைகள் புகுந்து விடுகின்றன.

    இவை பகல் நேரங்களில் ஆலைக்குள் ஓய்வெடுத்து விட்டு இரவு நேரங்களில் ஆலையின் உடைத்து சுவற்றின் வழியே வெளியேறி அருகில் கிடைக்கும் உணவுகளை உட்கொள்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆலைக்குள் முகாமிடும் யானைகளின் எண்ணிக்கை மாறினாலும் அருகிலேயே ஆற்று நீரும், தீவனமும் கிடைப்பதால் எப்போதும் ஒரு யானைக்கூட்டம் இதனுள் இருப்பது வழக்கமாகி விட்டது.

    இந்த நிலையில் நேற்று ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று தொழிற்சாலையிலிருந்து சாலை கடக்க முயன்றது. இதனை அறிந்த சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் மற்றும் யானை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேரம் போராடி யானையை காட்டிற்குள் விரட்டினர்.

    • சமீபகாலமாக பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
    • இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலையம் ஈரோட்டில் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தினமும் உள்ளூர்-வெளியூர் மாவட்ட பஸ்கள் இயங்கி வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    தற்போது பஸ் நிலையத்தில் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாகபஸ் நிலையத்தில் மினி பஸ் நிறுத்தம் ரேக் பகுதியில் குடிமகன்கள் மது அருந்திவிட்டு செய்யும் அட்டகாசம் கொஞ்சம் நஞ்சமல்ல. மது அருந்திவிட்டு அங்கேயே தூங்குகின்றனர். சில சமயம் வாந்தி எடுக்கின்றனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் குறிப்பாக பெண் பயணிகள் முகம் சுளிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    இதனை அடுத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி பஸ் நிலையத்தில் தேவையில்லாமல் சுற்றி கொண்டிருப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். எனினும் குடிமகன்கள் ரகளையில் ஈடுபடும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று காலை நாமக்கல் சேலம் ரேக்கில் ஒரு குடிமகன் மது போதையில் அங்கும் இங்குமாக சுற்றி கொண்டிருந்தார். அப்போது கல்லூரி மாணவிகள் கல்லூரி செல்வதற்காக பஸ்சுக்கு காத்துக் கொண்டிருந்தனர். அதில் ஒரு மாணவியை பார்த்து அந்த குடிமகன் ஆபாச வார்த்தையில் பேசினார். இதனால் அந்த மாணவி அழுதார். இதே போன்று பஸ் நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் குடிமகன்கள் அட்டகாசத்ததால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

    இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    ×