search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் வனவிலங்குகளால் பொதுமக்கள் பீதி
    X

    குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் வனவிலங்குகளால் பொதுமக்கள் பீதி

    • வெடி மருந்து தொழிற்சாலை வளாகத்திற்குள்ளும் வனவிலங்குகள் இரவும் பகலும் தொடர்ந்து நடமாடி வருகின்றன
    • சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை விடப்பட்டும் எவ்வித பலனும் இல்லை.

    அருவங்காடு,

    குன்னூர் அருகே உள்ள அருவங்காடு பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு 1100 குடியிருப்புகளும் உள்ளன.

    இதுமட்டுல்லாமல் இந்த தொழிற்சாலையின் கட்டுப்பாட்டின் கீழ் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை இயங்கி வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக வெடி மருந்து தொழிற்சாலை வளாகத்திற்குள்ளும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் காட்டெருமைகள், கரடி, சிறுத்தை ஆகிய வனவிலங்குகள் இரவும் பகலும் தொடர்ந்து நடமாடி வருகின்றன

    இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினருக்கு மனு மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் கோரிக்கை விடப்பட்டும் எவ்வித பலனும் இல்லை.

    எனவே தாங்கள் இம்மனுவை பரிசீலனை செய்து 2 ஆயிரம் தொழிலாளிகள் மற்றும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அருவங்காடு வெடிமருந்து தொழில் ஒருங்கிணைந்த ஊழியர் நலச்சங்க பொதுச் செயலாளர் அசோகன் தமிழக முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பி உள்ளார்.

    Next Story
    ×