என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காசிமேட்டில் விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தம்
ராயபுரம்:
காசிமேடு மீன்பிடி துறை முகத்தில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலில் மீன் பிடித்து வருகின்றனர்.
இதில் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கு பதிவு எண் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் மீனவர்கள் ஆந்திரா கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
பதிவு எண் இல்லாத விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திர அரசு எச்சரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து விசைப் படகுகளுக்கு பதிவு எண் தரக்கோரி மீன் வளத்துறை அதிகாரிகளிடம் காசிமேடு விசைப்படகு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனை கண்டித்தும் விசைப்படகுகளுக்கு உட னடியாக பதிவு எண் தரக் கோரியும் காசிமேடு விசைப் படகு மீனவர்கள் இன்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் காசிமேடு மின்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளை நிறுத்தி வைத்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்