search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெட்டப்பாக்கத்தில் வேலைக்கு சென்ற புதுப்பெண் மாயம்
    X

    நெட்டப்பாக்கத்தில் வேலைக்கு சென்ற புதுப்பெண் மாயம்

    நெட்டப்பாக்கத்தில் தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்ற புதுப் பெண் மாயமானார்.

    புதுச்சேரி:

    புதுவை நெட்டப்பாக்கம் நேரு நகரை சேர்ந்தவர் மாரியப்பன். எலக்ட் ரீஷியன். இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 22). இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. பாக்கியலட்சுமி அங்குள்ள தனியார் தொழிற்சாலை யில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று பாக்கிய லட்சுமி வேலைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால், வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாரி யப்பன் அந்த தொழிற் சாலைக்கு சென்று விசா ரித்தார்.

    அப்போது பாக்கிய லட்சுமி விடுமுறை எடுத்து சென்றதாக தொழிற்சாலை நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து உறவினர் கள் வீடுகள் மற்றும் பல இடங்களில் தேடியும் எங்கும் பாக்கியலட்சுமி இல்லை.

    இதனைத்தொடர்ந்து தனது மனைவி மாயமானது குறித்து மாரியப்பன் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    Next Story
    ×