search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    15 பவுன் நகைகளுடன் வாலிபர் மாயம்
    X

    15 பவுன் நகைகளுடன் வாலிபர் மாயம்

    • தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.
    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    கோவை,

    கோவை குறிச்சி கல்லுகுழி வீதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 25). ஆன்லைன் உணவு பார்சல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி பானுபிரியா என்ற மனைவியும் ஒருமகனும் உள்ளனர். ராம்குமார் அவரது மனைவியிடம் நகைகளை கொடுக்கும்படி அடிக்கடி கேட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வீட்டில் இருந்த ராம்குமார் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு மாயமானார். அவரை அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை. இது குறித்து அவரது மனைவி 15 பவுன் நகைகளுடன் மாயமான தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளுடன் மாயமான ராம்குமாரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×