என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
15 பவுன் நகைகளுடன் வாலிபர் மாயம்
Byமாலை மலர்11 Oct 2022 9:54 AM GMT
- தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.
- கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கோவை,
கோவை குறிச்சி கல்லுகுழி வீதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 25). ஆன்லைன் உணவு பார்சல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி பானுபிரியா என்ற மனைவியும் ஒருமகனும் உள்ளனர். ராம்குமார் அவரது மனைவியிடம் நகைகளை கொடுக்கும்படி அடிக்கடி கேட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வீட்டில் இருந்த ராம்குமார் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு மாயமானார். அவரை அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை. இது குறித்து அவரது மனைவி 15 பவுன் நகைகளுடன் மாயமான தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளுடன் மாயமான ராம்குமாரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X