search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு- 495 மதிப்பெண்ணுக்கு மேல் 65 பேர் பெற்றனர்
    X

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு- 495 மதிப்பெண்ணுக்கு மேல் 65 பேர் பெற்றனர்

    • 10-ம் வகுப்பு தேர்வில் 564 பேர் 491 முதல் 495 வரை மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
    • 5 லட்சத்து 20 ஆயிரத்து 904 மாணவ-மாணவிகள் 300 மதிப்பெண்களுக்கும் குறைவாக பெற்றுள்ளனர்.

    சென்னை:

    10-ம் வகுப்பு தேர்வை மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 பேர் எழுதி உள்ளனர். 10-ம் வகுப்பு தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 500 ஆகும். இதில் 65 மாணவ-மாணவிகள் 495-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 564 பேர் 491 முதல் 495 வரை மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

    1,439 பேர் 486 முதல் 490 வரை மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 2400 மாணவ-மாணவிகள் 481 முதல் 485 வரை மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 28 ஆயிரத்து 178 மாணவ-மாணவிகள் 451 முதல் 480 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். 83 ஆயிரத்து 405 பேர், 401 முதல் 450 வரை மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    1 லட்சத்து 10 ஆயிரத்து 997 பேர், 351 முதல் 400 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். 1 லட்சத்து 55 ஆயிரத்து 668 பேர் 301 முதல் 350 வரை மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 5 லட்சத்து 20 ஆயிரத்து 904 மாணவ-மாணவிகள் 300 மதிப்பெண்களுக்கும் குறைவாக பெற்றுள்ளனர்.

    Next Story
    ×