search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய பிரபாகரன்
    X
    விஜய பிரபாகரன்

    தேர்தலில் போட்டியிட விஜயகாந்த் மகன் விருப்ப மனு

    எந்த தொகுதியில் நின்றாலும் தொண்டர்கள் என்னை வெற்றி பெற வைப்பார்கள் என விஜய பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்தார்.
    சென்னை:

    தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவியும், பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார். எந்த தொகுதியில் போட்டி என குறிப்பிடாமல் விருப்ப மனுவை அளித்துள்ளார்

    அதைத்தொடர்ந்து தேமுதிக சார்பில் போட்டியிட விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். எந்த தொகுதியில் போட்டி என குறிப்பிடாமல் விருப்ப மனுவை அவர் அளித்துள்ளார்.

    விருப்ப மனு அளித்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த விஜயபிரபாகரன், தொண்டர்களின் விருப்பம் அடிப்படையில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளேன். முதல்முறையாக தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தது மகிழ்ச்சியாக உள்ளது. சென்று வா வெற்றி நமதே என்று தனது தந்தை கேப்டன் விஜயகாந்த் தெரிவித்ததாகவும் கூறினார். நான் எந்த தொகுதியில் நின்றாலும் தொண்டர்கள் என்னை வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 

    தேமுதிக தமிழகம் முழுவதும் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அப்பா, அம்மா எந்த தொகுதியில் நிற்க சென்னாலும் அங்கு நிற்பேன். கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். நான், விருப்ப மனு மட்டும்தான் தாக்கல் செய்ய வந்தேன் என்றும் தெரிவித்தார்.
    Next Story
    ×