search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ம.தி.மு.க. ஆபத்து உதவிகள் அணி நிர்வாகிகள் நியமனம் - வைகோ அறிவிப்பு
    X

    ம.தி.மு.க. ஆபத்து உதவிகள் அணி நிர்வாகிகள் நியமனம் - வைகோ அறிவிப்பு

    ம.தி.மு.க. ஆபத்து உதவிகள் அணியின் புதிய தலைவராக வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ஜீவன் நியமிக்கப்பட்டுள்ளதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ம.தி.மு.க.வின் ஆபத்து உதவிகள் அணியின் செயலாளராக இருந்து வந்த கோ.கலையரசன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவர் தொடர்ந்து கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றிய கழக செயலாளராக நீடிப்பார்.

    ஆபத்து உதவிகள் அணியின் புதிய தலைவராக வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ஜீவன் நியமிக்கப்படுகிறார். இவர் வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்புடன், கூடுதலாக இந்த பொறுப்பையும் கவனித்துக்கொள்வார். ஆபத்து உதவிகள் அணியின் செயலாளராக மதுரை, கே.புதூர், கற்பக நகரை சேர்ந்த எஸ்.முனியசாமி நியமிக்கப்படுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×