search icon
என் மலர்tooltip icon

    அயர்லாந்து

    • மழையால் தாமதமாக தொடங்கிய ஆட்டம் 12 ஓவராக குறைக்கப்பட்டது.
    • முதலில் விளையாடிய அயர்லாந்து அணியில் ஹாரி டெக்டர் 64 ரன்கள் குவித்தார்.

    டப்ளின்:

    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட்கோலி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை.

    இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய இருந்த நிலையில் மழை பெய்ததால்,  தாமதமாக தொடங்கிய ஆட்டம் 12 ஓவராக குறைக்கப்பட்டது.

    முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் ஹாரி டெக்டர் 33 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார்.

    பின்னர் 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் தீபக் ஹுடா 29 பந்துகளில் 47 ரன்களை எடுத்ததுடன், கடைசிவரை களத்தில் இருந்தார். மற்றொரு வீரர் இஷான் கிஷன் 26 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 24 ரன்களும் அடித்தனர்.

    9.2 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 111 ரன்களை குவித்தது. இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

    • மழையால் தாமதமாக தொடங்கிய ஆட்டம் 12 ஓவராக குறைக்கப்பட்டது.
    • முதலில் விளையாடிய அயர்லாந்து அணியில் ஹாரி டெக்டர் 64 ரன்கள் குவித்தார்.

    டப்ளின்:

    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு டி 20 போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட்கோலி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை.

    இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய இருந்த நிலையில் மழை பெய்ததால், ஆட்டம் தாமதமாக தொடங்கியது. இதையடுத்து 12 ஓவர் என்ற அளவில் ஆட்டம் குறைக்கப்பட்டது.

    பின்னர் விளையாடிய அயர்லாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் ஹாரி டெக்டர் 33 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கி விளையாடியது.

    • இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 2 டி 20 போட்டியில் ஆடுகிறது.
    • இந்திய அணியில் இன்று அறிமுக வீரராக இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் களம் இறங்குகிறார்.

    டப்ளின்:

    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு டி 20 போட்டியில் ஆடுகிறது.

    இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட்கோலி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை.

    இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    இந்திய அணியில் அறிமுக வீரராக இன்று உம்ரான் மாலிக் களம் இறங்குகிறார்.

    இந்நிலையில், மழை பெய்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிறந்த அணியாக செயல்படவே விருப்பம் என ஹர்திக் பாண்ட்யா தகவல்.
    • கிரிக்கெட் போன்ற விளையாட்டில் எந்த சூழ்நிலைகளில் வலுவாக இருப்பது மிகவும் முக்கியம்.

    டப்ளின்:

    அயர்லாந்து சென்றுள்ள ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் இருபது ஓவர் போட்டி டப்ளின் நகரில் இந்திய நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு தொடங்குகிறது.

    இந்திய அணியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இஷான்கிஷன், சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன், புவனேஷ்வர் குமார், சாஹல், அவேஷ் கான் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். பால்பரீன் தலைமையிலான அயர்லாந்து அணியும் இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும் என கருதப்படுகிறது.

    இந்நிலையில், மலாஹிட் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளதாவது:

    நாங்கள் அனைவருக்கும் வாய்ப்பளிக்க விரும்புகிறோம், ஆனால் சிறந்த 11 வீரர்களுடன் விளையாட விரும்புகிறோம். எங்களிடம் சிறந்த லெவன் அணி இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.

    நான் யார் என்பதை காட்ட இங்கு வரவில்லை, இந்தியாவை வழிநடத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவே எனக்கு பெரிய விஷயம். நான் சிறப்பான விளையாட்டை வெளிபடுத்துவேன். இந்தத் தொடரில் நான் எப்படி செயல்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறேன்.

    முன்பை விடஇப்போது அதிக பொறுப்பு. நான் பொறுப்பை ஏற்கும்போது சிறப்பாக செயல்பட்டேன் என்றே நான் எப்போதும் நம்பினேன். கிரிக்கெட் போன்ற ஒரு விளையாட்டில் எந்த சூழ்நிலைகளில் வலுவாக இருப்பது மிகவும் முக்கியம்.

    தோனி மற்றும் விராட் கோலியிடம் இருந்து அணியை வழி நடத்துவது குறித்து நிறைய கற்றுக்கொண்டேன். ஆனால் அதே நேரத்தில், நான் நானாக இருக்க விரும்புகிறேன், எந்த நேரத்தில், அணிக்கு என்ன முடிவு தேவை என்பதில் கவனம் செலுத்துகிறேன்

    ×