என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • உ.பி. தியோரியா தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.
    • வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 15-ந்தேதியாகும்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக 13 தொகுதிகளுக்கு ஜூன் 1-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மே 15-ந்தேதி ஆகும்.

    தியோரியா தொகுதியில் ஜூன் 1-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் ஷஷாங் மானி திரிபாதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்தார்.

    தேர்தல் அலுவலகத்திற்கு முன் அவரது ஆதரவாளர்கள் திரண்டு இருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்தவற்கான நேரம் முடியும் தருவாயில் இருந்து. இந்த நிலையில் ஷஷாங்க் வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான பைல் உடன் அலுவலகத்தை நோக்கி ஓடோடி வந்தார்.

    அவசரமாக தொண்டர்களை விலகச் சொல்லி நேரம் முடிவதற்குள் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    பொதுவாக வேட்புமனு தாக்கல் செய்ய டோக்கன் வழங்கப்படும். அதன்படி வேட்பாளர்கள் சரியான நேரத்திற்கு முன்னதாகவே அங்கே இருப்பார்கள். ஆனால் தொண்டர்கள் காத்திருக்க வேட்பாளர் ஓடோடி வந்தது வியப்பாக பார்க்கப்படுகிறது.

    • காங்கிரஸ் தலைவர் சதீஷ் சர்மா அமேதி தொகுதியில் 1990-ல் போட்டியிட்டார். பின்னர் சோனியா காந்திக்காக அமேதி தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாறினார்.
    • அதே சூழ்நிலை ஏற்பட்டால் தானும் அமேதி தொகுதியில் இருந்து மாறுவேன் என கே.எல். சர்மா தெரிவித்துள்ளார்.

    அமேதி தொகுதியில் கடந்த முறை ராகுல் காந்தி போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்தமுறை சோனியா காந்தி மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதிக்கு மாறியுள்ளார். அமேதி தொகுதில் காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான, விசுவாசமான கிஷோரி லால் சர்மா நிறுத்தப்பட்டுள்ளார்.

    காந்தி குடும்பம் அமேதி தொகுதியில் போட்டியிடவில்லை என்ற முடிவின் மூலம் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது என பா.ஜனதாவின் கிண்டல் செய்தனர். மேலும் பயந்து ஓடிவிட்டார் என விமர்சனம் செய்திருந்தது.

    இந்த நிலையில், பா.ஜனதாவின் ஆணவம் அடித்து நொறுக்கப்படும். அமேதி தொகுதியில் என்னுடைய வெற்றி, காந்தி குடும்பத்தின் வெற்றியாக இருக்கும் என கே.எல். சர்மா தெரிவித்துள்ளார்.

    பிடிஐ நிறுவத்திற்கு பேட்டியளித்த அவர் அமேதி தொகுதி குறித்து கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் சதீஷ் சர்மா அமேதி தொகுதியில் 1990-ல் போட்டியிட்டார். பின்னர் சோனியா காந்திக்காக அமேதி தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாறினார். அதே சூழ்நிலை ஏற்பட்டால் தானும் அமேதி தொகுதியில் இருந்து மாறுவேன் என கே.எல். சர்மா தெரிவித்துள்ளார்.

    சதீஷ் சர்மா 1991 மற்றும் 1996-ல் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1998-ல் தோல்வியடைந்த நிலையில், ராகுல் காந்திக்காக ரேபரேலி தொகுதிக்கு மாறினார். சோனியா காந்தி 1999-ல் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    சரண் அடைந்து விட்டதாக பா.ஜனதா கூறுவது அவர்களின் ஆணவத்தை காட்டுகிறது. அதற்கு மே 20-ந்தேதி மக்கள் பதில் அளிப்பார்கள். முடிவு ஜூன் 4-ந்தேதி தெரியவரும்.

    ஆங்கிலேயர்களின் காலத்தில் காந்தி குடும்பத்தினர் ஓடிப்போனதில்லை, இப்போதும் ஓடிப்போனதில்லை, எதிர்காலத்திலும் அப்படி ஓடிப்போக மாட்டார்கள். மற்றவர்களை ஓட வைப்போம். ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜக ஓடுவதை உறுதி செய்து வருகிறார்.

    இவ்வாறு கிஷோரி லால் சர்மா தெரிவித்துள்ளார்.

    • பா.ஜ.க, உடன் எந்த பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாரா?
    • எங்கள் கட்சியில் சுதான்சு திரிவேதி போதும். அவர்களுக்கான பதிலை கொடுப்பார்.

    அமேதி:

    பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் முக்கிய பிரச்சினைகளை பற்றி பேசுவதில்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி இருந்தார்.

    இந்த நிலையில் எந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தயாரா? என்று ராகுல்காந்தி, பிரியங்காவுக்கு மத்திய மந்திரியும், அமேதி தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான ஸ்மிருதி இரானி சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நான் அவர்களுக்கு (ராகுல்காந்தி, பிரியங்கா) சவால் விடுகிறேன். பா.ஜனதாவுடன் எந்த பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாரா?

    இதற்கான டி.வி. சேனல், தொகுப்பாளர், இடம், நேரம் ஆகியவற்றை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

    ஒரு பக்கம் அண்ணன்-தங்கை ஜோடியும், இன்னொரு பக்கம் பா.ஜனதாவின் செய்தி தொடர்பாளர்களும் இருப்பார்கள். எல்லாம் தெளிவாகிவிடும். எங்கள் கட்சியில் இருந்து சுதான்சு திரிவேதி போதும். அவர்களுக்கான பதிலை கொடுப்பார்.

    இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறி உள்ளார்.

    கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல்காந்தியை தோற்கடித்தார். அதே நேரத்தில் வயநாட்டில் ராகல்காந்தி வெற்றி பெற்றார். ராகுல்காந்தி இந்த முறை வயநாடு, ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அவ்னீஷ் மிஸ்ரா என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டர் ஓட்டி செல்லும் காட்சிகள் உள்ளன.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    நாடு முழுவதும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் சில வாகன ஓட்டிகள் சாலையில் வித்தியாசமான ஹெல்மெட் அணிந்து செல்வது சமூக வலைதளங்களில் வைரலாகி விடும். அந்த வகையில் இளைஞர்கள் முயல் வடிவ ஹெல்மெட் அணிந்து சென்ற காட்சிகள் ஏற்கனவே இணையத்தில் பரவி இருந்தது.

    இந்நிலையில் தற்போது வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் கான்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அணிந்துள்ள வித்தியாசமான ஹெல்மெட் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவ்னீஷ் மிஸ்ரா என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டர் ஓட்டி செல்லும் காட்சிகள் உள்ளன.

    அதில், சாலையில் செல்லும் அந்த இளம்பெண் அணிந்திருந்த ஹெல்மெட்டை கூர்ந்து கவனிக்கும் போது அந்த ஹெல்மெட் அவரது தலையை முழுங்குவது போன்று இருக்கிறது. தலை முழுவதும் மூடிய நிலையில் சிறிய இடைவெளி கூட இல்லாமல் காணப்படும் அந்த பெண்ணின் வீடியோவை பார்த்த பயனர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

    வீடியோவை பார்த்த பயனர்கள் வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.
    • `ரோடு ஷோ' வாரணாசியில் நடைபெற உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, மே 14-ந் தேதி கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

    இதையொட்டி பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற உள்ளது. பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி உள்ளிட்ட 13 தொகுதிகளுக்கு கடைசி கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    வாரணாசி எம்.பி.யாக இரண்டாவது முறையாக தொடரும் பிரதமர் நரேந்திர மோடி, இங்கு மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

    வாரணாசியில் நேற்று தொடங்கிய வேட்புமனு தாக்கல் மே 14-ந் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் இங்கு கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.

    இதையொட்டி இதற்கு முதல் நாளில் இருந்தே வாரணாசியில் பிரம்மாண்ட ஊர்வலங்கள் நடைபெற உள்ளன.

    உத்தரபிரதேசத்தில் புனித நகரமான வாரணாசி யின் மால்தஹியாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

    வரும் 14-ந் தேதியிலும் அதேபோல் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவிக்க உள்ளார். இதற்கு ஒருநாள் முன்னதாக மே 13-ல் பிரதமர் மோடி வாரணாசி செல்ல உள்ளார். அதே நாளில் அவரது `ரோடு ஷோ' வாரணாசியில் நடைபெற உள்ளது.

    பிரதமர் தனது வேட்புமனுவை வாரணாசி தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க உள்ளார். இப்பதவியில் மாவட்ட ஆட்சியரான தமிழ்நாட்டை சேர்ந்த எஸ்.ராஜலிங்கம் உள்ளார். வாரணாசியுடன் சேர்த்து உத்தரபிரதேசத்தின் 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஜூன் 1-ல் நடைபெற உள்ளது. இதன் மூன்றாவது நாளான ஜூன் 4-ல் நாடு முழுவதிலுமான தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நரேந்திர மோடி தனது நண்பர்களான கோடீஸ்வரர்களின் ₹16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார்.
    • அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.

    பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் பிரசாரம் செய்தார்.

    அப்போது பேசிய மோடி, "காங்கிரசின் இளவரசர் (ராகுல்காந்தி) ரபேல் விவகாரத்தில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக 5 தொழிலதிபர்கள் பற்றியே பேச ஆரம்பித்தார்.பின்னர் அவர் அம்பானி, அதானி பற்றி பேசினார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி-அதானியை வசைபாடுவதை நிறுத்திவிட்டார்.

    ஒரே இரவில் அம்பானி-அதானியை வசைபாடுவதை நிறுத்திய நீங்கள் என்ன ஒப்பந்தம் செய்தீர்கள்? இதில் காங்கிரஸ் நாட்டுக்கு பதில் சொல்ல வேண்டும்" என்று பிரதமர் மோடி பேசினார்.

    இந்நிலையில் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு தொடர்பாக ரேபரேலியில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

    பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், "பெரும் தொழிலதிபர்களுடன் நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக ராகுல் காந்தி தினமும் கூறுகிறார். நரேந்திர மோடி தனது நண்பர்களான கோடீஸ்வரர்களின் ₹16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார், ஆனால் விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை. இதற்கு நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும்

    அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். அவர்களின் பெயரை கூட உச்சரிக்காத பிரதமர் மோடி, தேர்தலுக்காக இப்படி பேசுகிறார்" என்று தெரிவித்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லிப்ட்டின் கதவு மூடப்பட்டவுடன், சிறுமி வலியுடன் கையை அசைப்பதை வீடியோவில் காணமுடிகிறது.
    • நபர் லிப்டில் இருந்து நாயை விரட்டியவுடன் கதவு மூடப்பட்டதும் சிறுமி வலியால் துடிக்கிறார்.

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் லிப்டில் சிறுமியை நாய் கடித்து குதறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நொய்டாவில் உள்ள செக்டார் 107ல் உள்ள லோட்டஸ்-300 சொசைட்டியில் சிறுமியை நாய் கடித்துள்ளது. மே 3-ந்தேதி நடந்ததாகக் கூறப்படும் இந்த முழு சம்பவமும் லிப்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    அந்த வீடியோவில், லிப்டிற்குள் இருக்கும் சிறுமியை 4-வது மாடியில் இருந்து கீழ் தளத்திற்கு வருகிறார். பின்னர் லிப்ட் 2-வது மாடியில் நின்றதும் ஒரு செல்லப்பிராணி லிப்ட்டுக்குள் நுழைந்து தனியாக இருந்த சிறுமியைக் கடிக்கிறது.

    சிறுமியை நாய் கடித்தபோது ஒரு நபர் லிப்டிற்குள் சென்று நாயை விரட்டியடித்து, சிறுமியை மேலும் நாய் கடியில் இருந்து காப்பாற்றுகிறார். அந்த நபர் லிப்டில் இருந்து நாயை விரட்டியவுடன் கதவு மூடப்பட்டதும் சிறுமி வலியால் துடிக்கிறார்.

    லிப்ட்டின் கதவு மூடப்பட்டவுடன், சிறுமி வலியுடன் கையை அசைப்பதை வீடியோவில் காணமுடிகிறது.

    சென்னையில் உள்ள பூங்காவில் இரண்டு செல்லப்பிராணி நாய்களால் தாக்கப்பட்டதில் ஐந்து வயது சிறுமி பலத்த காயம் அடைந்த ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
    • மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வரதட்சணை அதிகம் கேட்டு கொடுக்க முடியாததால் கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவங்களை கேள்விபட்டிருப்போம். ஆனால் தான் சீதனமாக கேட்ட காருக்கு பதிலாக புதிதாக வேறு காரை வழங்கியதால் மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

    அங்குள்ள முசாபர் நகரை சேர்ந்தவர் அமீர் ஆலம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. மணமகன் தனக்கு வரதட்சணையாக ஹூண்டாய் காரை கேட்டிருந்தார். ஆனால் மணமகளின் குடும்பத்தினர் அவருக்கு மாருதி காரை சீதனமாக அளித்துள்ளனர். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்தினார்.

    இதனால் பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். திருமணம் பாதியில் நின்றதை அறிந்து சோகம் அடைந்த மணப்பெண் தனது நிலை குறித்தும், குடும்பத்தினரின் துயரம் குறித்தும் இதுபோன்ற ஆண்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

    அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவரின் கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார் அவரது மனைவி மெஹர் ஜஹான்
    • சிசிடிவி காட்சிகளை காட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்க மனைவி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்

    உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், கணவரின் கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்திய அவரது மனைவி மெஹர் ஜஹானை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    கணவனுக்கு போதைப்பொருள் கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்திய பிறகு அவரை கட்டிப்போட்டு அவரது ஆண் உறுப்பை சிகரெட்டால் சுட்டு காயப்படுத்தி கொடுமைப் படுத்தியுள்ளார்.

    மனைவி தன்னை கட்டி வைத்து தாக்குவது சிகரெட்டால் சுடுவது போன்ற காட்சிகளை சிசிடிவி காட்சிகள் மூலம் கணவன் பதிவு செய்துள்ளார். இதனை ஆதாரமாக கொண்டு கடந்த 5-ம் தேதி காவல்நிலையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார்.

    இதனையடுத்து, மெஹர் ஜஹான் மீது கொலை முயற்சி, சித்திரவதை செய்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

    • கர்நாடக மாநிலத்தின் குல்பர்கா பாராளுமன்ற தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே.
    • மகாராஷ்டிராவில் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் உடன் வரிசையில் நின்று வாக்களித்தார் நடிகை ஜெனிலியா.

    உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனிய பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    அதே போல் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அதன் விவரம் வருமாறு:-

    அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவரது குடும்பத்தினர் அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

    கர்நாடக மாநிலத்தின் குல்பர்கா பாராளுமன்ற தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே.

    குஜராத்தின் போர்பந்தரில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா வாக்களித்தார்.

    அகமதாபாத்தில் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி வரிசையில் நின்று வாக்களித்தார்.

    மத்திய பிரதேசத்தில் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் வாக்களித்தார்.

    மகாராஷ்டிராவில் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் உடன் வரிசையில் நின்று வாக்களித்தார் நடிகை ஜெனிலியா.

    தெற்கு கோவா மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பல்லவி டெம்போ தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

    இந்நிலையில், மூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 25.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    அசாம் - 27.34 சதவீதம்

    பீகார் - 24.41 சதவீதம்

    சத்தீஸ்கர்- 29.90 சதவீதம்

    கோவா- 30.94 சதவீதம்

    குஜராத்- 24.35 சதவீதம்

    மத்திய பிரதேசம் - 30.21 சதவீதம்

    கர்நாடகா- 24.48 சதவீதம்

    மகாராஷ்டிரா- 18.18 சதவீதம்

    உத்தரபிரதேசம்- 26.12 சதவீதம்

    மேற்கு வங்கம்- 32.82 சதவீதம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் நாளான ஜூன் 1-ந் தேதி உ.பி தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.
    • வரும் 13-ந் தேதி அவர் வாரணாசியில் வாகன பேரணி நடத்துகிறார்.

    பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டும் வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்று 2-வது முறையாக பிரதமரானார். தற்போது 3-வது முறையாக வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார்.

    இறுதிக்கட்ட தேர்தல் நாளான ஜூன் 1-ந் தேதி உ.பி தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரமதர் மோடி வரும் 14ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

    அதற்கு முந்தைய நாள் 13-ந் தேதி அவர் வாரணாசியில் வாகன பேரணி நடத்துகிறார்.

    பேரணி செல்லும் பாதை இறுதி செய்யப்பட்டு விட்டது என்றும் பேரணிக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக வாரணாசி நகர பாஜக தலைவர் வித்யாசாகர் ராய் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரதீப் சிங்கால் கட்சி அலுவலகத்திற்கு விரைந்தார்.
    • சம்பவம் நடந்த இடத்தில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டது.

    வெளியில் நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களை மர்மநபர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். சத்தம் கேட்டு கட்சி தொண்டர்கள் அங்கு வரும் முன்பு, மர்ம நபர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரதீப் சிங்கால் கட்சி அலுவலகத்திற்கு விரைந்தார்.

    சம்பவத்தையடுத்து சிஓ சிட்டி மயங்க் திவேதியுடன் பலத்த போலீஸ் படை சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரை சமாதானப்படுத்த முயன்றது.

    இதுகுறித்து விசாரணை நடத்தி, சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிஓ சிட்டி திவேதி உறுதியளித்துள்ளார்.

    சம்பவம் நடந்த இடத்தில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

    ×