என் மலர்
உத்தரப் பிரதேசம்
- தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- 10 ஆண்டுகளில் காசிக்கு (வாரணாசி) உலகத்தரம் வாய்ந்த வளர்ச்சியை மோடி கொண்டு வந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பெருமைக்கான பயணம் தடையின்றி தொடரும் என்றும் வாரணாசி மக்கள் அவருக்கு மீண்டும் ஒரு சாதனை வித்தியாசத்தில் வெற்றிப்பெற ஆசீர்வதிப்பார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தெரிவித்தார்.
வாரணாசி மக்களவைத் தொகுதியில் 3வது முறையாக மீண்டும் வெற்றிப்பெறும் நோக்கில் பிரதமர் மோடி இன்று மனுத்தாக்கல் செய்தார்.
அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் பலர் கலந்து கொண்டனர். அமித்ஷாவும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

இதுகுறித்து அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய கலாச்சாரத்தின் மையமான பாபா விஸ்வநாத்தின் நகரமான காசியில் இருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக வேட்புமனு தாக்கல் செய்த 'யஷஸ்வி' பிரதமர் நரேந்திரமோடிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
10 ஆண்டுகளில் காசிக்கு (வாரணாசி) உலகத்தரம் வாய்ந்த வளர்ச்சியை மோடி கொண்டு வந்துள்ளார்.
அவர் இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தையும் மேம்படுத்தியுள்ளார். மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பெருமைக்கான பயணம் தடையின்றி தொடர பாபா விஸ்வநாத் மற்றும் கங்கா 'மையா' ஆகியோரை நான் பிரார்த்திக்கிறேன்.
இந்த முறையும் காசி மக்கள் மோடியை சாதனைக்குரிய வித்தியாசத்தில் வெற்றி பெற ஆசீர்வதிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எனது தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன்.
- காசியுடனான எனது உறவு அற்புதமானது,
கங்கை நதியில் சிறப்பு பூஜைக்கு பிறகு பிரதமர் மோடி கூறும்போது, கங்கை நதி என்னைத் தத்தெடுத்துக் கொண்டது. எனது தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன். கங்கை என்னை வலுப்படுத்தி தேற்றியது. கங்கை நதி தாயை போல் அனைவரையும் காக்கிறது. ரூ.140 கோடி மக்களுக்காக நான் உழைக்கிறேன். இது கடவுள் உத்தரவு என்றார். தாய் குறித்து பேசும்போது பிரதமர் மோடி கண்கள் கலங்கி குரல் தழுதழுத்தது.
முன்னதாக மோடி, எக்ஸ் வலைதளத்தில் கூறும்போது, காசியுடனான எனது உறவு அற்புதமானது, ஒருங்கிணைந்தது மற்றும் ஒப்பிட முடியாதது. அதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என்றுதான் என்னால் சொல்ல முடியும் என்றார்.
- பாராளுமன்ற தேர்தலில் நேற்றுடன் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
- வாரணாசி தொகுதியில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இதுவரை வென்றதில்லை.
லக்னோ:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்றுடன் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவு அடைந்துள்ளது. இதுவரை 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 3-வது முறையாகப் போட்டியிடுகிறார். ஏற்கனவே 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடி 3-வது முறையாக அத்தொகுதியில் களம் இறங்கி உள்ளார்.
வாரணாசி தொகுதிக்கான வாக்குப்பதிவு 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலில் நடக்கிறது. இதில் மொத்தம் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடைசி கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
நேற்றே வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்தி ஆதரவு திரட்டினார். இதில் ஆயிரக்கணக்கா னோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் மோடி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்வதையொட்டி வாரணாசி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மோடி மனுத்தாக்கல் செய்யும் இடத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக பிரதமர் மோடி கங்கை நதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். இன்று காலை 9.30 மணிக்கு கங்கை கரையில் உள்ள தசப்வம்தே காட் என்ற இடத்துக்கு பிரதமர் மோடி சென்று கங்கை நதிக்கு பூஜை நடத்தினார். அவருக்கு நெற்றியில் புரோகிதர்கள் திலகமிட்டு பட்டு வஸ்திரம் அணிவித்தனர்.
அதன்பின் புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க பிரதமர் மோடி மனமுருக வேண்டினார். கங்கை நதிக்கு பூ, பால் உள்ளிட்டவற்றை அர்ப்பணித்தார். அதன்பின் கங்கை நதிக்கு கங்கா ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினார்.
கங்கையில் சிறப்பு பூஜையை முடித்த பிறகு பிரதமர் மோடி கப்பலில் பயணம் செய்து நமோ காட் என்ற இடத்தில் உள்ள கால பைரவர் கோவிலுக்குச் சென்றார். அங்கு அவரை உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் வரவேற்றார். கால பைரவர் கோவிலில் மோடி சாமி தரிசனம் செய்தார்.
கோவிலில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய புறப்பட்டார். அவர் காலை 11.45 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு தேர்தல் அதிகாரியிடம் பிரதமர் மோடி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது மோடியுடன் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உடன் சென்றார். மோடியின் வேட்புமனுவை பண்டிட் ஞானேஸ்வர் பைஜ்நாத் படேல், லால் சந்த் குஷ்வாகா, சஞ்சய் சோங்கர் ஆகியோர் முன்மொழிந்தனர்.
பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தபோது மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஹர்தீப்பூரி, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களான தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான், ராஷ்டீரிய லோக் தளம் கட்சி தலைவர் ஜெயந்த் சவுத்ரி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், பாரதிய சமாஜ் கட்சி தலைவர் ராஜ்பர், அப்னா தளம் (எஸ்) தலைவர் அனு பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வேட்புமனு தாக்கல் முடிந்ததும் பிரதமர் மோடி பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
வாரணாசி தொகுதியில் பிரதமரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அஜய் ராய், பகுஜன் சமாஜ் சார்பில் ஏ.ஜமால் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
வாரணாசி தொகுதி தற்போது பா.ஜனதாவின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. 5 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட வாரணாசி பாராளுமன்ற தொகுதி பல ஆண்டுகளாக பா.ஜ.க-காங்கிரஸ் இடையே பெரிய போட்டி களமாக இருந்துவருகிறது. அத்தொகுதியில் பா.ஜ.க. 7 தடவையும், காங்கிரஸ் 6 தடவையும் வெற்றி பெற்றுள்ளன. வாரணாசி தொகுதியில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இதுவரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக களம் இறங்குகிறார்.
- வாரணாசியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று பிற்பகல் பிரதமர் மோடி தாக்கல் செய்ய உள்ளார்.
லக்னோ:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ள நிலையில், 4 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக களம் இறங்குகிறார். அவர் வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்யவும், பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக நேற்று மாலை பிரதமர் மோடி உத்தர பிரதேசம் சென்றுள்ளார். அங்கு வாரணாசி நகரில் பிரதமர் மோடி நேற்று வாகன பேரணியில் ஈடுபட்டார்.
இந்நிலையில், வாரணாசியின் கங்கை கரையில் உள்ள தசஅஸ்வமேத காட் என்ற இடத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு கங்கைக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தார்.
வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று பிற்பகலில் பிரதமர் மோடி தாக்கல் செய்ய உள்ளார்.
#WATCH | Uttar Pradesh: Prime Minister Narendra Modi offers prayers at Dasaswamedh Ghat in Varanasi pic.twitter.com/WKQ9is8856
— ANI (@ANI) May 14, 2024
- ராகுல் காந்தியின் திருமணம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
- 53 வயதாகும் ராகுல் காந்தி தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கலந்து கொண்டனர்.
அப்போது, ராகுல் காந்தியின் திருமணம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல்காந்தி நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
53 வயதாகும் ராகுல் காந்தி தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு ஊழல் வரலாறு உண்டு.
- பாரபங்கி மக்களவைத் தொகுதிக்கு ஐந்தாம் கட்டமாக மே 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார் என்றும் கடவுள் ராமர் கூட தனது "தீவிர பக்தன்" வெற்றி பெற விரும்புகிறார் என்று அவர் கூறினார்.
நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், "மோடி அலை தற்போது சுனாமியாக மாறியுள்ளது" என்று இங்குள்ள ஹைதர்கரில் பாஜக வேட்பாளர் ராஜ்ராணி ராவத்தை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பேரணியில் யோகி ஆதித்யநாத் கூறினார்.
அப்போது யோகி ஆதித்யநாத் மேலும் கூறியதாவது:-
பிரதமர் மோடியின் தலைமையில், சாதி, சமூகம் என்ற வேறுபாடின்றி அனைவரும் வளர்ச்சித் திட்டங்களால் பயனடைந்துள்ளோம்.
எங்கள் அன்புக்குரிய பகவான் ராமரும் தனது தீவிர பக்தர் (பிரதமர் மோடி) மீண்டும் நாட்டின் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு ஊழல் வரலாறு உண்டு. இவர்கள் பெரிய கூற்றுக்களை கூறுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், அவர்கள் காலத்தில் மக்கள் பசியால் இறந்தனர், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர், இளைஞர்கள் இடம்பெயர்ந்தனர்.
ஆனால், பிரதமர் மோடியின் தலைமையில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கு நாம் அனைவரும் சாட்சிகள். கடந்த 4 ஆண்டுகளாக 80 கோடி பேர் இலவச ரேஷன், 12 கோடி விவசாயிகள் கிசான் சம்மான் நிதி மூலம் பலன் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாரபங்கி மக்களவைத் தொகுதிக்கு ஐந்தாம் கட்டமாக மே 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் இதை மீண்டும் கொண்டுவர விரும்புகிறீர்களா?
- பொது சிவில் சட்டம் வேண்டுமா இல்லையா? முஸ்லிம் தனிநபர் சட்டம் கொண்டுவரப்படுமா?
காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் இதை மீண்டும் கொண்டுவர விரும்புகிறீர்களா?உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பிரசாரம் செய்தார். அப்போது, ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியிடம் அவர் 5 கேள்விகளை கேட்டுள்ளார்.
1) ராகுல் காந்தி அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லாதது ஏன்?
2) மோடிஜியால் ஒழிக்கப்பட்ட முத்தலாக் திட்டம் நல்லதா? கெட்டதா? நீங்கள் முத்தலாக்கை திரும்ப கொண்டு வர விரும்புகிறீர்களா?
3) மோடி ஜி சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினார், அது நல்லதா? கெட்டதா? சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இல்லையா?
4) முஸ்லிம் தனிநபர் சட்டத்திற்குப் பதிலாக, ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் வேண்டுமா இல்லையா? முஸ்லிம் தனிநபர் சட்டம் கொண்டுவரப்படுமா?
5) காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் இதை மீண்டும் கொண்டுவர விரும்புகிறீர்களா?
இந்த ஐந்து கேள்விகளுக்கும் ராகுல்காந்தி பதில் அளிக்க வேண்டும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ரேபரேலி தொகுதியில் ஐந்தாவது கட்டமாக மே 20ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
- 13, 14-ந்தேதிகளில் பிரதமர் மோடியை வாரணாசியில் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்வது என்று கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
- வாரணாசியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரபிரதேச மாநில அரசு செய்து வருகிறது.
வாரணாசி:
பாராளுமன்றத்துக்கு நடத்தப்பட்டு வரும் 7 கட்ட தேர்தல்களில் இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. 4-வது கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
5-வது, 6-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தற்போது வட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜூன் 1-ந்தேதி இறுதி 7-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
7-வது கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் கடந்த 7-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 14-ந்தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் 7-வது கட்ட தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
வாரணாசி தொகுதியில் கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் 2-வது தடவை வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடி தற்போது 3-வது முறையாக களம் இறங்கி உள்ளார். முந்தைய தேர்தல்களை விட இந்த தடவை வாரணாசி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
இதற்காக பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் தேர்தல் பணிக்குழுக்களை ஏற்படுத்தி இருக்கிறார். அவர்கள் வீடு வீடாக சென்று பிரதமர் மோடிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடி வருகிற 13, 14-ந்தேதிகளில் வாரணாசியில் தங்கி வேட்புமனு தாக்கல் செய்யவும், பிரசாரம் செய்யவும் திட்டமிட்டு இருக்கிறார்.
பிரதமரின் இந்த 2 நாள் பயணம் தொடர்பாக பா.ஜ.க. தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். 13, 14-ந்தேதிகளில் பிரதமர் மோடியை வாரணாசியில் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்வது என்று கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
இன்று பிரதமரின் வாரணாசி பயண திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படுகிறது.
நாளை மறுநாள் (13-ந்தேதி) மதியம் வாரணாசி செல்லும் பிரதமர் மோடி முதலில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார். அங்கு பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மதன்மோகன் மாள்வியா சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
அதன் பிறகு அங்கிருந்து அவர் ரோடு ஷோ நடத்துகிறார். அந்த ரோடு ஷோ வாரணாசியின் முக்கிய சாலைகள் வழியாக நடைபெற உள்ளது. சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தி தனக்கு ஆதரவு திரட்டுவார் என்று தெரியவந்துள்ளது.
அந்த ரோடு ஷோவில் பிரதமருடன் அமித்ஷா, நட்டா, ராஜ்நாத்சிங் உள்பட பா.ஜ.க. மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் பங்கேற்க உள்ளனர். ரோடு ஷோவின் போது வழிநெடுக பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
6 கிலோ மீட்டர் தூர ரோடு ஷோவில் பிரதமர் மோடி 12-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனத்தை நிறுத்தி மக்களின் வாழ்த்துகளை பெற்றுக்கொள்வார். அப்போது மக்களுடன் மோடி கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு மோடியின் வாகன பேரணி நடக்கும் 6 கிலோ மீட்டர் தொலைவிலும் சாலையின் இருபுறமும் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இதையொட்டி வாரணாசியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரபிரதேச மாநில அரசு செய்து வருகிறது. மோடியின் ரோடு ஷோ வாரணாசியில் கங்கை கரையில் உள்ள தசப்வம்தே காட் என்ற இடத்தில் நிறைவு பெறுகிறது.
அங்கு கங்கை கரையில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கங்கைக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்ய உள்ளார். அவருடன் ஏராளமான பா.ஜ.க. நிர்வாகிகள் ஆரத்தியில் ஈடுபட உள்ளனர்.
அதன் பிறகு அன்று இரவு பிரதமர் மோடி வாரணாசியில் தங்குகிறார். அன்று இரவு வாரணாசி தொகுதி பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் பிரதமர் மோடியை சந்தித்து பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மறுநாள் (14-ந்தேதி) செவ்வாய்க்கிழமை காலை பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு செல்கிறார். அங்கு அவர் சிறப்பு வழிபாடுகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆலய தரிசனம் முடிந்ததும் வாரணாசியில் நடக்கும் பா.ஜ.க. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.
அந்த ஆலோசனை கூட்டத்தில் வாரணாசி தொகுதி பா.ஜ.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கிறார்கள். அவர்கள் மத்தியில் தேர்தல் பணி தொடர்பாக பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டுவது தொடர்பாக அப்போது பிரதமர் மோடி அறிவுரை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் மோடி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய புறப்படுகிறார். மதியம் குறிப்பிட்ட நேரத்தில் அவர் மனுதாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்த பிறகு மீண்டும் வாரணாசியில் ஆதரவு திரட்ட உள்ளார். அன்று டெல்லி திரும்பும் அவர் மீண்டும் வாரணாசி தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
- அதே நேரம் இருவரும் விவாகரத்து செய்யாமலேயே கடந்த ஓரு ஆண்டாக தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.
- பெண்ணுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் கசன்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த இளம் டாக்டர் தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அவர்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அடிக்கடி இருவரும் சண்டை போட்ட நிலையில், இருவரும் பிரிந்தனர். அதே நேரம் இருவரும் விவாகரத்து செய்யாமலேயே கடந்த ஓரு ஆண்டாக தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த பெண்ணுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அந்த பெண் தனது 2 ஆண் நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று உள்ளார். அங்கு அறை எடுத்து தங்கிய அவர் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த அந்த பெண்ணின் கணவரான டாக்டர் நேராக அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு ஓட்டல் ஊழியர்களின் எதிர்ப்பையும் மீறி, தனது மனைவி தங்கி இருந்த அறையின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார்.
அப்போது மனைவி இரண்டு ஆண்களுடன் நெருக்கமாக இருப்பதை கண்ட அவர் ஆவேசம் அடைந்து மனைவியை கடுமையாக அடித்து உதைத்து தாக்கி உள்ளார். இதைப்பார்த்த அந்த பெண், ஆண் நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் டாக்டர் மற்றும் பெண் டாக்டர், அவரது ஆண் நண்பர்கள் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பெண் டாக்டருடன் நெருக்கமாக இருந்தது காஜியாபாத் மற்றும் புலந்த் சாகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதற்கிடையே பெண் டாக்டரை அவரது கணவர் சரமாரியாக தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Extra-Marital affair Kalesh (Doctor (Husband caught his Doctor Wife doing three some in a Hotel in Kasganj, UP. The wife is a Govt Doctor and she was staying separate after having dispute with her husband since last one year)
— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 10, 2024
pic.twitter.com/fBeMbQD8PF
- மருத்துவமனைக்குள் நர்ஸ் ஒருவர் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு ஸ்கூட்டியில் செல்லும் காட்சிகள் வீடியோவில் உள்ளது.
- மருத்துவமனையின் நடைபாதையில் நோயாளிகள் அமர்ந்திருக்க சில நோயாளிகள் அங்கும், இங்குமாக சென்று வரும் காட்சிகளும் வீடியோவில் உள்ளன.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் மருத்துவமனைக்குள் நர்ஸ் ஒருவர் ஸ்கூட்டி ஓட்டி சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அங்குள்ள பிலிபித் மருத்துவமனைக்குள் நர்ஸ் ஒருவர் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு ஸ்கூட்டியில் செல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளது. மருத்துவமனையின் நடைபாதையில் நோயாளிகள் அமர்ந்திருக்க சில நோயாளிகள் அங்கும், இங்குமாக சென்று வரும் காட்சிகளும் வீடியோவில் உள்ளன.
இதற்கிடையே அந்த நர்ஸ் தனது ஸ்கூட்டியில் மருத்துவமனையை சுற்றி ஓட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் நர்சின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
District Hospital of Pilibhit, UP is so big that staff Nurse has to use scooty to travel from one ward to another. God bless the patients. pic.twitter.com/4GtJAaRquJ
— NCMIndia Council For Men Affairs (@NCMIndiaa) May 7, 2024
- ராகுல் காந்தியை தோற்கடிப்பதே தனது ஒரே நோக்கமாக ஸ்மிரிதி இரானி கொண்டுள்ளார்.
- உங்கள் எம்.பி. மற்றும் பாஜக-வினர் தேர்தல் நேரத்தில் வருவார்கள்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி, பா.ஜனதா கடவுளின் பெயரில் வாக்கு கேட்பதாக குற்றம் சாட்டினார்.
அமேதி தொகுதியில் கே.எல். சர்மாவை ஆதரித்து பல தெருமுனை கூட்டங்களில் (நுக்கட் சபா- nukkad sabhas) பேசிய பிரியங்கா காந்தி இது தொடர்பாக கூறியதாவது:-
கடந்த 70 ஆண்டுகளில் செய்யாத பணிகளை தனது அரசாங்கம் 10 ஆண்டுகளில் செய்ததாக பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் கூறுகிறார். கள நிலவரம் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.
ராகுல் காந்தியை தோற்கடிப்பதே தனது ஒரே நோக்கமாக ஸ்மிரிதி இரானி கொண்டுள்ளார். உங்கள் எம்.பி. மற்றும் பாஜக-வினர் தேர்தல் நேரத்தில் வருவார்கள். ஆனால் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது, விவசாயத்தை மேம்படுத்துவது, உங்கள் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பது போன்றவற்றை பேசாமல், உங்கள் வீடுகளுக்கு வந்து, கடவுளின் பெயரால் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறுகின்றனர். இதை அவர்கள் செய்யவில்லையா?. அவர்கள் உங்களை தவறாக வழிநடத்துகிறார்கள். அவர்கள் 10 வருடங்களில் செய்த வேலையின் பெயரில் ஏன் வாக்குகள் கேட்கவில்லை?.
நாங்களும் மதங்களை கொண்டுள்ளோம். நாம் அனைவருக்கும் கடவுள் மற்றும் மதம் மிகவும் பிரியமானது. ஆனால் அரசியலுக்காக மதத்தைப் பயன்படுத்துவது தவறு.
இங்குள்ள அரசியலின் பாரம்பரியம் என்பது மக்களுக்கு சேவை செய்வதே. அதை தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பின்பற்றுகின்றனர். அந்த பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது. எனவே நீங்கள் எப்போதும் எங்களை ஆதரித்து எங்களை பலப்படுத்துகிறீர்கள். ஒருவரையொருவர் பலப்படுத்தும் வகையில் உறவு இருந்தது.
ஆனால்... என் சகோதரர் தோற்கடிக்கப்பட்டார், அவர்கள் எங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அவர்கள் சிலரை தவறாக வழி நடத்துவதில் வெற்றி பெற்றனர். ஆனால் ஐந்து ஆண்டுகளில், அவர்களின் புதிய வகையான அரசியலை நீங்கள் பார்த்தீர்கள், அதாவது இந்த பகுதியில் எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை.
நான் எங்கு சென்றாலும் மக்களுக்கு வேலை கிடைத்ததா? அல்லது விவசாயிகளின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டதா? என்று மக்களிடம் கேட்கிறேன். எந்த வேலையும் களத்தில் காணப்படவில்லை. ஆனால், தொலைக்காட்சியில் கடந்த 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை, 10 ஆண்டுகளில் மோடி ஜி செய்துள்ளதை பார்க்கலாம்.
நீங்கள் எந்த முன்னேற்றமும் அடையவில்லை என்றால், யாருடைய வாழ்க்கை மேம்பட்டது? 10 ஆண்டுகளில், பெரிய முதலாளிகளின் நிலை மேம்பட்டது மற்றும் அவர்களின் ரூ. 16 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன, ஆனால் விவசாயிகளுக்கு அல்ல.
இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.
- மோடி இந்தியாவின் பிரதமராகமாட்டார் என்பதை எழுத்துப்பூர்வ உறுதியாக அளிக்கிறேன்.
- எந்த டெம்போ, என்ன வகையான பணத்தை அதானி அனுப்பினார் என்பது மோடிக்கு தெரியும்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களையும், இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
உத்தர பிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேரடியாக களம் இறங்கியுள்ளார். அவரை ஆதரித்து ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-
நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராகமாட்டார். அவரது பிரதமர் காலம் முடிந்தது. இதை எழுத்துப்பூர்வ உறுதியாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள் பார்த்தீர்கள் என்றால், பிரதமர் மோடி அதானி மற்றும் அம்பானி பெயரை உச்சரித்தது கிடையாது. தற்போது அவர்களால் மோடியை காப்பாற்ற முடியும் என அவர் நினைக்கிறார்.
இந்தியா கூட்டணி என்னை சூழ்ந்து சுற்றி வளைத்துள்ளது. நான் தோற்றுக் கொண்டு வருகிறேன். என்னை காப்பாற்றுங்கள். அதானி- அம்பானி ஜி என்னை காப்பாற்றுங்கள் என மோடி, அவரது தொழில் அதிபர் நண்பர்களிடம் கூறும் நிலையில் மோடி இருக்கிறார் என்பதுபோல் ராகுல் காந்தி கிண்டல் செய்தார்.
ஆகவே எந்த டெம்போ, என்ன வகையான பணத்தை அதானி அனுப்பினார் என்பது மோடிக்கு தெரியும். டெம்போ குறித்த தனிப்பட்ட அனுபவம் மோடிக்கு உள்ளது.
உத்தர பிரசேதத்தில் நீங்கள் பார்க்க போகிறீர்கள்... இந்தியா கூட்டணி என்ன புயல் வந்து கொண்டிருக்கிறது. இங்கு பா.ஜனதா மிகப்பெரிய தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நான் உங்களுக்கு எழுத்துப்பூர்வ உறுதியாக தருகிறேன். இந்தியாவில் மாற்றம் நிகழப் போகிறது. மக்கள் முடிவு செய்துவிட்டனர். உ.பி.யில் மாற்றம் நிகழும் என மக்கள் முடிவு செய்திருந்தனர்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.






