என் மலர்
நீங்கள் தேடியது "surgical strike"
- பாகிஸ்தானில் நாங்கள் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாக கூறுகிறார்கள்... எதுவும் நடக்கவில்லை
- ராகுல் காந்தியுடன் பாகிஸ்தானுக்குச் சென்று, சர்ஜிக்கல் ஸ்டிரைக் எங்கு நடந்தது என்பதை தெரிந்து கொள்ளவும்.
தெற்கு காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பிரபல சுற்றுலா தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பஞ்சாப் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சரண்ஜித் சிங் சன்னி, "பஹல்காம் தாக்குதல் நடந்து 10 நாட்களுக்குப் பிறகும் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. நாங்கள் உறுதியான நடவடிக்கைகளைக் கோருகிறோம், பாகிஸ்தானுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைப் பார்க்க முழு நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது. 56 அங்குல மார்பளவு கொண்டவர் செயல்படுவதற்காக மக்கள் காத்திருக்கிறார்கள்.
நம் நாட்டின் மீது ஒரு குண்டு வீசப்பட்டால், நமக்குத் தெரியாதா? பாகிஸ்தானில் நாங்கள் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாக அவர்கள் கூறுகிறார்கள்... எதுவும் நடக்கவில்லை, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை நாம் பார்க்கவில்லை முடியவில்லை, யாருக்கும் அது தெரியாது. இன்றுவரை, சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் போது என்ன நடந்தது என்பது நமக்கு தெரியாது. அதற்கு எதாவது ஆதாரங்கள் இருக்கவேண்டும்" என்று தெரிவித்தார்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதாரம் இல்லை என்று சரஞ்சித் சிங் சன்னி பேசியதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய டெல்லி அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, "காங்கிரஸ் மீண்டும் ராணுவத்தையும் விமானப்படையையும் கேள்வி எழுப்பியுள்ளது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதாக தான் நம்பவில்லை என்றும், தனக்கு ஆதாரம் வேண்டும் என்றும் சரண்ஜித் சிங் சன்னி மீண்டும் கூறியுள்ளார்.
ராணுவமும் விமானப்படையும் பொய் சொல்வதாகவும், பாகிஸ்தான் உண்மையைச் சொல்கிறது என்றும் மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டும் காங்கிரசும் ராகுல் காந்தி குடும்பத்தினரும் என்ன மாதிரியான மனநிலையைக் கொண்டுள்ளனர். சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதாக பாகிஸ்தானே கூறிய போதிலும் இவ்வாறு கூறுகிறார்கள். உங்களுக்கு ஆதாரம் வேண்டுமென்றால், ராகுல் காந்தியுடன் பாகிஸ்தானுக்குச் சென்று, சர்ஜிக்கல் ஸ்டிரைக் எங்கு நடந்தது என்பதை தெரிந்து கொள்ளவும்" என்று தெரிவித்தார்.
மேலும், சரஞ்சித் சிங் சன்னி பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், "ராகுல் காந்தியின் காங்கிரஸ் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தொடர்ந்து பாதுகாக்கிறது. இப்போது சரண்ஜீத் சிங் சன்னி நமது ராணுவத்தை கேள்வி கேட்கிறார். இந்த நெருக்கடியான நேரத்தில் காங்கிரஸ் ஏன் நமது ராணுவத்தை மனச்சோர்வடையச் செய்கிறது. காங்கிரஸ் நேரடியாக பாகிஸ்தானிடமிருந்து உத்தரவுகளைப் பெறுகிறது" என்று குற்றம் சாட்டினார்.
- 56 அங்குல மார்பளவு கொண்டவர் செயல்படுவதற்காக மக்கள் காத்திருக்கிறார்கள்.
- சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் போது என்ன நடந்தது என்பது நமக்கு தெரியாது.
தெற்கு காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பிரபல சுற்றுலா தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பஞ்சாப் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சரண்ஜித் சிங் சன்னி, "பஹல்காம் தாக்குதல் நடந்து 10 நாட்களுக்குப் பிறகும் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. நாங்கள் உறுதியான நடவடிக்கைகளைக் கோருகிறோம், பாகிஸ்தானுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைப் பார்க்க முழு நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது. 56 அங்குல மார்பளவு கொண்டவர் செயல்படுவதற்காக மக்கள் காத்திருக்கிறார்கள்.
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாஜக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தான் மக்களை அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பினர். வாகா எல்லையை மூடிவிட்டனர். சிந்து நதி நீரை இந்தியாவால் நிறுத்த முடியாது. அதற்கான உள்கட்டமைப்பை உருவாக்க 10 ஆண்டுகள் ஆகும்.
நம் நாட்டின் மீது ஒரு குண்டு வீசப்பட்டால், நமக்குத் தெரியாதா? பாகிஸ்தானில் நாம் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாக அவர்கள் கூறுகிறார்கள்... எதுவும் நடக்கவில்லை, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை நாம் பார்க்கவில்லை. இன்றுவரை, சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் போது என்ன நடந்தது என்பது நமக்கு தெரியாது. அதற்கு எதாவது ஆதாரங்கள் இருக்கவேண்டும்" என்று தெரிவித்தார்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதாரம் இல்லை என்று சரஞ்சித் சிங் சன்னி பேசியதுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லைப் பிராந்தியம் தொடர்பாக ஒருவரையொருவர் அச்சுறுத்தத் தொடங்கினர்.
- அணு ஆயுதப் போருக்குத் தயாராகவில்லை என்பதை இரு தரப்பையும் நம்பவைக்க சில மணிநேரம் தேவைப்பட்டது.
வாஷிங்டன்:
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு சிஆர்பிஎப் வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் ஊடுருவி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாமை தாக்கி அழித்தது.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட அசாதார சூழலில் பாகிஸ்தான் அணுஆயுத தாக்குதலை நடத்துவதற்கு தயாரான தகவல் வெளியாகியிருக்கிறது.
'ஒரு அங்குலம்கூட கொடுக்காதே: நான் விரும்பும் அமெரிக்காவுக்காக போராடுகிறேன்' என்ற தலைப்பில் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ புத்தகம் எழுதி உள்ளார். இந்த புத்தகம் இன்று வெளியிடப்பட்டது. அதில், பாம்பியோ கூறியிருப்பதாவது:-
2019 பிப்ரவரி மாதம் பாலகோட் சர்ஜிக்கல் தாக்குதலை அடுத்து அணுகுண்டு தாக்குதலுக்கு பாகிஸ்தான் தயாராகி வருவதாகவும், இந்தியா தனது சொந்த முயற்சியில் தீவிர பதிலடி கொடுக்க தயாராகி வருவதாகவும், அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் என்னிடம் கூறினார்.
பிப்ரவரி 27-28 தேதிகளில் அமெரிக்க-வட கொரியா உச்சிமாநாட்டிற்காக நான் ஹனோயில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. இந்த சிக்கலான தருணத்தை தவிர்க்க இந்தியா- பாகிஸ்தான் இடையே இரவோடு இரவாக எங்கள் குழுவினர் பேசினர்.
வியட்நாமின் ஹனோய் நகரில் நான் இருந்த இரவை என்னால் மறக்கவே முடியாது. வட கொரியர்களுடன் அணு ஆயுதங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது போதாது என்று, இந்தியாவும் பாகிஸ்தானும் பல தசாப்தங்களாக வடக்கு எல்லைப் பிராந்தியம் தொடர்பாக ஒருவரையொருவர் அச்சுறுத்தத் தொடங்கினர்.
ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலில் 40 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். அதன்பின்னர். இந்தியா பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதிகளுக்கு எதிராக விமானத் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. தொடர்ந்து நடந்த சண்டையில் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தானியர்கள், இந்திய விமானியை சிறைபிடித்தனர்.
ஹனோயில் இருந்தபோது இந்திய வெளியுறவுத்துறை மந்திரியுடன் பேசினேன். அப்போது, அவர் பாகிஸ்தானியர்கள் தங்கள் அணு ஆயுதங்களை தாக்குதலுக்கு தயார் செய்ய ஆரம்பித்து விட்டதாக நம்பினார். இந்தியா, அதன் சொந்த முயற்சியில் தாக்குதலை விரிவுபடுத்துவது பற்றி சிந்தித்து வருவதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார். நான் அவரிடம் 'ஒன்றும் செய்ய வேண்டாம், பிரச்சனையை சரிசெய்ய எங்களுக்கு ஒரு நிமிடம் கொடுங்கள்' என்று கேட்டேன்.
நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் உள்ள சிறிய பாதுகாப்பான தகவல் தொடர்பு வசதியில் என்னுடன் இருந்த தூதுவர் (அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்) போல்டனுடன் இணைந்து உடனடியாக பணியாற்றத் தொடங்கினேன். பாகிஸ்தான் ராணுவ தலைவரான ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவை தொடர்புகொண்டு, இந்தியா தரப்பில் என்னிடம் சொன்னதை சொன்னேன். ஆனால், அது உண்மையல்ல என்றார் அவர்.
மேலும், இந்தியர்கள் தங்கள் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கு தயாராகி வருவதாக அவர் நம்பினார். அப்போது இரு நாடுகளுக்கு மத்தியில் எங்கள் குழுக்கள் சிறப்பாக பணியாற்றினர். அணு ஆயுதப் போருக்குத் தயாராகவில்லை என்பதை இரு தரப்பையும் நம்பவைக்க எங்களுக்குச் சில மணிநேரம் தேவைப்பட்டது.
ஒரு பயங்கரமான விளைவைத் தவிர்ப்பதற்காக, அந்த இரவில் நாங்கள் செய்ததை வேறு எந்த நாடும் செய்திருக்க முடியாது. எல்லா ராஜதந்திரத்தையும் போலவே, சிக்கலைத் தீர்க்கும் நபர்களும் மிக முக்கியமானவர்கள். இந்தியாவில் உள்ள தூதரக அதிகாரிகள் சிறப்பாக பணி செய்தனர். குறிப்பாக கென் ஜஸ்டர் திறமையான தூதராக இருந்தார். அவர் இந்தியாவையும் இந்திய மக்களையும் நேசித்தார்.
இவ்வாறு பாம்பியோ தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
- சர்ஜிகல் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரம் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை என்றார் திக்விஜய் சிங்.
- சர்ஜிகல் தாக்குதல் பற்றி அவர் சந்தேகம் கிளப்பியது பல்வேறு வகையிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் உரி ராணுவ தளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் பயங்கரவாதிகள் 4 பேர் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 19 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக அதே ஆண்டின் செப்டம்பர் 28-ம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் சர்ஜிகல் தாக்குதல் நடத்தியது என மத்திய அரசு தெரிவித்தது.
இதற்கிடையே, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஜம்முவில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ஜெய்ராம் ரமேஷ் உள்பட பலர் அவருடன் இணைந்து பாதயாத்திரையில் பங்கேற்றனர். அப்போது பேசிய திக்விஜய் சிங், காஷ்மீரின் புல்வாமா தாக்குதல் குறித்த அறிக்கை இதுவரை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. சர்ஜிகல் தாக்குதல் நடத்தினோம் என மத்திய பா.ஜ.க. அரசு கூறுகிறது. ஆனால், அதற்கான ஆதாரம் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. பா.ஜ.க. அரசு அடுக்கடுக்கான பொய்களை மட்டுமே கூறி ஆட்சி செய்து வருகிறது என கூறினார்.
சர்ஜிகல் தாக்குதல் பற்றி அவர் சந்தேகம் கிளப்பியது பல்வேறு வகையிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு அவர் சான்று கேட்பது இந்திய வீரர்களை அவமதிக்கும் மற்றும் கொச்சைப்படுத்தும் விவகாரம் ஆகும் என பா.ஜ.க. எதிர்ப்பு குரல் எழுப்பியது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திக்விஜய் சிங்கின் தனிப்பட்ட பார்வைகளை நாங்கள் ஏற்று கொள்ளவில்லை. அவரது கருத்துகள் ஒதுக்கப்பட வேண்டியவை. ராணுவ வீரர்கள் தங்களது பணியை திறம்பட செய்துள்ளனர் என்பதில் நாங்கள் முழு அளவில் தெளிவாக இருக்கிறோம். அதற்கு வீரர்கள் சான்றளிக்க வேண்டிய தேவையில்லை என தெரிவித்தார்.
- காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் இதை மீண்டும் கொண்டுவர விரும்புகிறீர்களா?
- பொது சிவில் சட்டம் வேண்டுமா இல்லையா? முஸ்லிம் தனிநபர் சட்டம் கொண்டுவரப்படுமா?
காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் இதை மீண்டும் கொண்டுவர விரும்புகிறீர்களா?உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பிரசாரம் செய்தார். அப்போது, ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியிடம் அவர் 5 கேள்விகளை கேட்டுள்ளார்.
1) ராகுல் காந்தி அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லாதது ஏன்?
2) மோடிஜியால் ஒழிக்கப்பட்ட முத்தலாக் திட்டம் நல்லதா? கெட்டதா? நீங்கள் முத்தலாக்கை திரும்ப கொண்டு வர விரும்புகிறீர்களா?
3) மோடி ஜி சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினார், அது நல்லதா? கெட்டதா? சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இல்லையா?
4) முஸ்லிம் தனிநபர் சட்டத்திற்குப் பதிலாக, ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் வேண்டுமா இல்லையா? முஸ்லிம் தனிநபர் சட்டம் கொண்டுவரப்படுமா?
5) காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் இதை மீண்டும் கொண்டுவர விரும்புகிறீர்களா?
இந்த ஐந்து கேள்விகளுக்கும் ராகுல்காந்தி பதில் அளிக்க வேண்டும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ரேபரேலி தொகுதியில் ஐந்தாவது கட்டமாக மே 20ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.


சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் நகரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று உரையாற்றினார்.
பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய வீரர்கள் நடத்திய அதிரடி ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ தாக்குதல் ராணுவ ரீதியான நடவடிக்கையாகும். ஆனால், ராணுவத்தின் பெருமையை சொந்தம் கொண்டாட விரும்பும் நமது பிரதமர் மோடி இந்த தாக்குதலை தனது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார் என ராகுல் குற்றம்சாட்டினார்.

மோடியின் அரசு 15,20 தொழிலதிபர்களின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இதனால், எங்கள் ஆட்சிக்காலத்தில் 2 லட்சம் கோடி ரூபாயாக இருந்த வங்கிகளின் இயங்காத பண இருப்பு, தற்போது பா.ஜ.க. ஆட்சியில் 12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மோடியின் அரசு தோல்வி அடைந்துள்ளது.
பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்றவை மிகப்பெரிய ஊழலாகும். இதன் மூலம் பெரிய நிறுவனங்களுக்கான கதவுகள் திறந்து விடப்பட்டன. சாதாரண மனிதனின் முதுகெலும்பு முறிக்கப்பட்டது.
முன்னேற்றத்தில் சீனாவுடனான போட்டியில் நாம் தோற்று விடவில்லை. நமது நாட்டில் திறமை வாய்ந்தவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும். அடுத்த 15-20 ஆண்டுகளுக்கு இங்கு சரியான அரசு அமைந்தால் சீனாவை நாம் முந்திச் சென்று விட முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். #Modi #RahulGandhi #surgicalstrike #politicalasset

காஷ்மீரில் ஊடுருவிய பயங்கரவாதிகள் உரி பகுதியில் நடத்திய திடீர் தாக்குதலில் 17 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தியா இதற்கு பதிலடி கொடுக்கும் என பிரதமர் மோடி எச்சரித்ததை தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் இந்திய வீரர்கள் புகுந்து நடத்திய அதிரடி தாக்குதலில் அங்கிருந்த 7 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது.
இந்த தாக்குதல் சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு, அதற்கான ஆதாரங்கள் அடங்கிய வீடியோ வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் சென்று இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியயது என இந்தியா அதிகாரப்பூர்வமாக தெரிவித்தும், பாகிஸ்தான் அரசு அதை தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் இந்திய ராணுவத்தின் உதவியுடன் இந்த வீடியோக்கள் நேற்று வெளியாகியுள்ளன.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் செய்திதொடர்பாளர் ரன்தீப் சுர்ஜீவாலா பேசுகையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-
பா.ஜ.க அரசு வாக்குகளுக்காக ராணுவ வீரர்களின் ரத்தத்தையையும் தியாகத்தையும் வைத்து அரசியல் பிரச்சாரம் செய்யும் போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கைகளை உத்திரப்பிரதேச சட்டசபை தேர்தல் அரசியலுக்கு கடந்த 2017-ம் ஆண்டு பா.ஜ.க பயன்படுத்தியது. அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க தற்போது சர்ஜிக்கல் ஸ்டிரைக் வீடியோக்களை மீண்டும் வெளியிட்டுள்ளது.
ஒருபக்கம், ராணுவத்தின் வெற்றியை மட்டும் தங்களது வெற்றியாக பாவித்துக்கொள்ளும் அரசு , மறுபக்கம் சரிவர ராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால் இந்த அரசு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இயலாமை நிலையில் உள்ளது. இதன் காரணமாக இந்த ஆட்சியில் அதிகப்படியான ராணுவ வீரர்கள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த அரசு, சர்ஜிக்கல் ஸ்டிரைக் வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் நமது பாதுகாப்பு அமைப்பிற்கு ஆபத்தை உண்டாக்குகிறதா? ரகசிய நடவடிக்கைகளின் ஆதாரத்தை பொதுவெளியில் வெளியிட்டு வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முயல்கிறதா? பா.ஜ.க.வினர் தேர்தலில் வாக்குகளை பெற வீரர்களை அரசியல் தீவனமாக பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். #surgicalstrike






