என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • தனக்கு தானே மயக்க ஊசியும் செலுத்திக் கொண்டார்.
    • தவறான தையல்களால் ரத்தப்போக்கு நிற்காமல் அதிகமாகியது.

    யூடியூப் பார்த்து கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளது.

    அதே வரிசையில் வயிற்று வலியால் துடித்த வாலிபர் ஒருவர் தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்ட சம்பவம் ஒன்று உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    ஆக்ராவை அடுத்த மதுராவில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராஜபாபு (வயது 32). திருமண மண்டபம் நடத்தி வருகிறார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக அவருக்கு குடல் வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் அவருக்கு வயிற்று வலி குணமாகவில்லை.

    ஆஸ்பத்திரிக்கு சென்றும் தீர்வு கிடைக்காததால் அவர் தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்காக யூடியூப் மற்றும் ஆன்லைனில் வரும் வயிற்று வலி சம்பந்தமான குறிப்புகளை தேடி கண்டுபிடித்தார்.

    அதில் ஆபரேஷன் செய்யும் வீடியோக்களையும் பார்த்துள்ளார். இதையடுத்து அவர் தனக்கு தானே ஆபரேஷன் செய்ய திட்டமிட்டார்.

    ஆபரேஷனுக்கு தயாரான அவர் தனது வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டு ஆபரேஷன் செய்ய முயன்றார்.

    தனக்கு தானே மயக்க ஊசியும் செலுத்திக் கொண்டார். ஆபரேஷன் செய்யும் கத்தியால் தனது வயிற்றில் வலது புறம் 7 செ.மீ. அளவிற்கு கீறினார்.

    ஆனால் அவர் எதிர்பார்த்ததை விட ஆபரேஷன் கத்தி ஆழமாக சென்றது. இதனால் அவருக்கு வலி அதிகமாகி ரத்தம் வர தொடங்கியது.

    இதனை சரி செய்ய முயன்ற ராஜபாபு அந்த இடத்தை தானே தைத்தார். 10-12 தையல்களையும் போட்டுள்ளார். தவறான தையல்களால் ரத்தப்போக்கு நிற்காமல் அதிகமாகியது. இதனால் பயந்து போன அவர் கத்தி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் ராஜபாபு சரிந்து கிடப்பதையும் வயிற்றில் கீறல் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    யூடியூப் பார்த்து தனக்கு தானே வாலிபர் ஆபரேசன் செய்து கொண்ட இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

    • இது குறித்து போலீசாருக்கு ரகசிய புகார் வந்தது.
    • செல்போனில் 59 கல்லூரி மாணவிகள் படங்கள் வீடியோக்கள் இருந்தன.

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள ஹத்ராஸ் என்ற இடத்தில் சேத்பூல் சந்த் பாக்லா என்ற முதுகலை கல்லூரி உள்ளது.

    இந்த கல்லூரியில் புவியியல் பேராசிரியராக ரஜ்னிஷ் குமார் (வயது 50). என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி அழகான மனைவி உள்ளார். ஆனால் குழந்தைகள் இல்லை.

    பேராசிரியர் ரஜ்னிஷ்குமார் அடிக்கடி தனது செல்போன் மற்றும் தனது அறையில் உள்ள கம்ப்யூட்டர் மூலம் ஆபாச படங்களை பார்த்து வந்தார்.

    கல்லூரி மாணவிகளை அவருடைய வலையில் வீழ்த்தி பலாத்காரம் செய்ய முடிவு செய்தார். கடந்த 2009-ம் ஆண்டு மாணவி ஒருவரிடம் மிகவும் அக்கறையாக பேசுவது போல் நடந்து கொண்டார்.

    அந்த மாணவிக்கு தேர்வில் அதிக மதிப்பெண் போடுவதாகவும், தனக்கு தெரிந்த தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.

    இதுபற்றி பேசுவதற்காக தனது அறைக்கு வரும்படி மாணவியை அழைத்துச் சென்றார். அங்கு வந்த மாணவியை கட்டாயப்படுத்தி கற்பழித்தார். அதனை தனது கம்ப்யூட்டரில் இருந்த ரகசிய கேமரா மூலம் பதிவு செய்தார்.

    கண்ணீர் விட்டு கதறிய மாணவியிடம் இந்த சம்பவத்தை வெளியே கூறினால் ஆபாச படத்தை ஆன்லைன் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினார்.

    இதனால் பயந்து போன மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்லாமல் மூடி மறைத்து விட்டார்.

    ஒரு மாணவியை சீரழித்த பேராசிரியரின் ஆசை நிற்கவில்லை. ஆண்டுதோறும் அவருடைய லீலைகள் தொடர்ந்தன. மேலும் பல மாணவிகளை அதிக மதிப்பெண் மற்றும் வேலைவாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறியும். மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என மிரட்டியும் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி கற்பழித்தார்.

    அதனை ரகசிய கேமரா மூலம் பதிவு செய்து தனது செல்போனில் பதிவேற்றம் செய்து கொண்டார்.

    பல ஆண்டுகளாக பேராசிரியரின் அட்டூழியம் தொடர்ந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை மிரட்டி தன்னுடைய அறைக்கு வரவழைத்தார்.

    அப்போது மாணவியிடம் பேராசிரியர் ரஜ்னிஷ் குமார் அத்துமீற தொடங்கினார். பதறிப்போன மாணவி அவரிடம் இருந்து தப்பி வெளியே வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் இது குறித்து போலீசாருக்கு ரகசிய புகார் வந்தது. இதனை அறிந்த பேராசிரியர் ரஜ்னிஷ் குமார் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

    போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். புகார் கொடுக்கப்பட்ட 72 மணி நேரத்திற்குள் தலைமறைவாக இருந்த பேராசிரியர் ரஜ்னிஷ் குமாரை கைது செய்தனர்.

    அவருடைய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் போலீசார் ஆய்வு செய்தபோது 65-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தன. இதில் 59 கல்லூரி மாணவிகள் படங்கள் வீடியோக்கள் இருந்தன.

    மற்ற ஆபாச வீடியோக்கள் அவர் ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து வைத்துள்ளார். அடிக்கடி செல்போனில் இருந்த ஆபாசங்களை பார்த்து ரசித்துள்ளார்.

    இது குறித்து ரஜ்னிஷ் குமார் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தருவதாகவும், அதிக சம்பளத்தில் வேலை தருவதாக கூறி மாணவி களை அறைக்கு அழைத்துச் சென்று கற்பழித்தேன். மேலும் சில மாணவிகளை மிரட்டி பணம் பறித்துள்ளேன்.

    கடந்த 2009-ம் ஆண்டு மாணவி ஒருவரை அறைக்கு வரவழைத்து பலாத்காரம் செய்தேன். அப்போது எங்களுக்கு தெரியாமலேயே அங்கிருந்த கம்ப்யூட்டர் வெப்கேமராவில் உல்லாசமாக இருந்த காட்சிகள் பதிவாகிவிட்டது.

    அதனை பார்த்த பிறகுதான் எனக்கு மற்ற மாணவிகளை கற்பழித்து ஆபாச படம் எடுக்க வேண்டும் என்று எண்ணத்தை தூண்டியது.

    இதனைத் தொடர்ந்து எனது கம்ப்யூட்டரில் பாலியல் பலாத்காரத்தை பதிவு செய்வதற்காக சிறப்பு கேமரா மென்பொருள் ஒன்றை நிறுவினேன். அதன் மூலம் மாணவிகளின் ஆபாச படங்களை பதிவு செய்தேன்.

    இதுவரை எத்தனை மாணவிகளை கற்பழித்துள்ளேன் என்பது எனக்கே தெரியவில்லை. மாணவிகளை ஆபாச படங்களை காட்டி மிரட்டியை அடிபணிய வைத்து அமைதியாக இருக்கச் செய்தேன். இதனால் அவர்கள் புகார் கொடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் கல்லூரி பேராசிரியர் மாணவிகளுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இது உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாணவிகளை கற்பழித்து வீடியோ எடுத்த பேராசிரியர் ரஜ்னிஷ் குமார் குறித்து போலீசாருக்கு கடிதம் மூலம் மாணவி ஒருவர் புகார் அளித்தார். அதில் பேராசிரியர் செல்போனில் உள்ள ஆபாச படங்கள் நிறைந்த பென்டிரைவ் ஒன்றும் இணைக்கப்பட்டு இருந்தது.

    அதில் பேராசிரியர் அதிக மதிப்பெண்கள் மற்றும் வேலை வாங்கி தருவதாக கூறி மாணவிகளை பாலியல் செயல்களில் ஈடுபடுத்தியதாக குற்றம் சாட்டி இருந்தார்.

    "நான் என் உண்மையான பெயரைப் வெளியிட விரும்பவில்லை. ஏனென்றால் இரக்கமற்ற பேராசிரியர் என்னைக் கொன்றுவிடுவார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

    இந்த கடிதத்தின் அடிப்படையிலேயே போலீசார் விசாரணையை தொடங்கினர். போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்ட உடனே பேராசிரியர் கல்லூரியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். 

    • கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அக்கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
    • கடந்த சனிக்கிழமை பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் அரசு நடத்தி வரும் சேத் பூல் சந்த் பாக்லா முதுகலை கல்லூரியில் புவியியல் துறையின் தலைவராக (HOD) உள்ளவர் ரஜ்னீஷ் குமார் (59 வயது).

    இவர் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அக்கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதை வீடியோ எடுத்தும் வந்துள்ளார். இதுதொடர்பாக நிர்வாகத்திடம் உள்விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் அவர் குற்றமற்றவர் என்று கூறிவிட்டது.

    இதனையடுத்து கடந்த ஆண்டு தேசிய மகளிர் ஆணையம் (NCW), உயர் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் ரஜ்னீஷ் குமார் மீது பாதிக்கப்பட்டவர் பெயர் குறிப்பிடப்படாமல் பாலியல் புகார் அளித்திருந்தார்.

    அந்தப் புகாரில், பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் ஆபாசமான நிலையில் இருப்பதைக் காட்டும் பல்வேறு புகைப்படங்களும் 59 வீடியோக்களும் ஆதாரமாக இணைக்கப்பட்டிருந்தன.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் 13 அன்று தான் அவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 64 (பாலியல் வன்கொடுமை), பிரிவு 68 (அதிகாரத்தில் உள்ள ஒருவரால் பாலியல் வல்லுறவு), மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 66 (சைபர் குற்றங்கள்) ஆகியவற்றின் கீழ் ரஜ்னீஸ் குமார் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கடந்த சனிக்கிழமை அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் காவல்துறை நடவடிக்கை எடுப்பதை அறிந்ததும், ரஜ்னீஷ் குமார் தலைமறைவானார்.

    இந்நிலையில் மாணவிகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட புவியியல் பேராசிரியரை 72 மணி நேரத்திற்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.

    • அதிர்ச்சி அடைந்த போலீசார் டிரைவருக்கு அபராதம் விதித்து சல்லான் வழங்கியுள்ளனர்.
    • வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நாள்தோறும் நடைபெறும் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கத்தில் காவல்துறையினர் பயணிகள் வாகனங்களில் பயணிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். வாகனங்களுக்கு ஏற்ப பயணிகள் பயணிக்க வேண்டும்.

    அதாவது, இருசக்கர வாகனங்களில் இருவர் பயணிக்கும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். மூன்று சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது குறைந்தது 4 பேர் வரை பயணிக்கலாம். அதேபோல் நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும் டிரைவரை தவிர்த்து 3 பேர் பயணிக்கவும் முன் இருக்கையில் அமர்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டு உள்ளது.

    இதேபோல் மாணவர்களை அழைத்து செல்லும் பள்ளி வாகனங்கள், தனியார் வாகனங்களுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனால் இதையெல்லாம் தனக்கு இல்லை என்பது போல ஒரு ஆட்டோவில் 14 பள்ளி குழந்தைகளை ஆட்டோ டிரைவர் ஒருவர் அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி BKD சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு ஆட்டோவில் பள்ளி சீருடையில் பல குழந்தைகள் இருப்பதை கண்ட போலீசார் உடனே அந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, டிரைவரின் முன்பக்க இருக்கையில் குறைந்தது 3 பள்ளி குழந்தைகள், பின் இருக்கையில் 11 பள்ளி குழந்தைகள் அமர்ந்திருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் டிரைவருக்கு அபராதம் விதித்து சல்லான் வழங்கியுள்ளனர்.

    இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    • அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற இந்துத்துவ அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன
    • நாக்பூரில் கடைகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டு மக்கள் தாக்கப்பட்டனர்.

    மகாராஷ்டிரத்தின் அவுரங்கபாத் நகரில் அவுரங்கசீப் கல்லறை உள்ளது. அந்தக் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற இந்துத்துவ அமைப்புகளின் போராட்டம் நாக்பூரில் வன்முறையாக மாறியது. கடைகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டு மக்கள் தாக்கப்பட்டனர்.

    உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் நகரில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், "ஆக்கிரமிப்பாளர்களை (அவுரங்கசீப்) புகழ்வது தேசத்துரோகமாகும். நமது முன்னோர்களை அவமதித்தவர்களை, நமது பெண்களை துன்புறுத்தியவர்களை, நமது நம்பிக்கையை பழித்தவர்களை புகழ்வதை புதிய இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது

    ஒவ்வொரு இந்திய குடிமகனும் நமது அடையாளத்தை அழிக்க முயன்றவர்களை பாராட்டுவதை விட, நமது புகழ்பெற்ற தலைவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக சிவாஜி மகாராஜின் சிலையை திறந்து வைக்கும் விழாவில் பேசிய ஏக்நாத் ஷிண்டே, அவுரங்கசீப் மகாராஷ்டிராவைக் கைப்பற்ற வந்தார், ஆனால் அவர் சிவாஜி மகாராஜின் தெய்வீக சக்தியை எதிர்கொண்டார். இன்னும் அவரை (அவுரங்கசீப்பை) புகழ்ந்து பாடுபவர்கள் துரோகிகளைத் தவிர வேறில்லை என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • உத்தரபிரதேசத்தில் 11 வயது சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்தியதாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
    • சிறுமி அணிந்திருந்த பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்து அவர்கள் அவிழ்த்துள்ளனர்.

    பெண்ணின் மார்பகத்தை பிடித்து அழுத்துவது பாலியல் வன்கொடுமைக்கான முயற்சியின் கீழ் வராது என்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரபிரதேசத்தில் 11 வயது மதிக்கத்தக்க சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்தியதாக பவன் மற்றும் ஆகாஷ் ஆகிய இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றவாளிகளில் ஒருவரான ஆகாஷ் அந்த சிறுமி அணிந்திருந்த பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்து ஒரு கால்வாயில் அருகே இழுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே வந்த சிலர் இவர்களை பார்த்ததும் அந்த சிறுமியை விட்டுவிட்டு அவர்கள் தப்பி ஒட்டியுள்ளனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவர் மீதும் ஐ.பி.சி. பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் போஸ்கோ சட்டத்தின் பிரிவு 18-ன் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

    விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, "சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்துவதும் அவரின் பைஜாமா கயிற்றை அவிழ்த்து அவரை இழுப்பதும் பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் வராது என்று தெரிவித்து அவர்கள் மீது பதியப்பட்ட வழக்கின் பிரிவுகளை மாற்றியமைத்தார்.

    அதாவது குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுகளை ஐபிசி பிரிவு 354-பி (ஆடையைப் பிடித்து தாக்குதல்) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 9/10 (பாலியல் வன்கொடுமை) ஆகியவற்றின் கீழ் மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.

    • குடும்பத்தினர் வற்புறுத்தலின் பேரில் குழந்தையின் எதிர்காலம் கருதி அந்த முடிவை கைவிட்டார்.
    • தனது மனைவியை மன்னித்து ஏற்றுக்கொண்டார்.

    உத்தரப் பிரதேசத்தில் காதலனுடன் சேர்ந்து மனைவி தனது கணவனை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி டிரம்மில் போட்டு சிமெண்டால் அடைத்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது.

    உத்தரப் பிரதேசம் மீரட் மாவட்டம் பிரம்மபுரியை சேர்ந்தவர் சவுரப் ராஜ்புத் (32 வயது). லண்டனை தளமாகக் கொண்ட வணிக கடற்படை அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முஸ்கான் ரஸ்தோகி என்ற பெண்ணை காதலித்து திருணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு தற்போது 5 வயதில் ஒரு மகள் உள்ளாள். மனைவி, மகள் பிரம்மபுரியில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.

    லண்டனில் பணியாற்றும் சவுரப் ராஜ்புத் அவ்வப்போது இந்தியா வந்து தனது குடும்பத்துடன் இருப்பார். இதற்கிடையே சில காலம் முன்பு தனது மனைவி முஸ்கான், சாஹில் என்ற நபருடன் தகாத உறவில் இருந்தது தெரியவந்தது. இதனால் மனைவியை விவாகரத்து செய்து மகனை தானே வளர்க்க முடிவு செய்தார். ஆனால் குடும்பத்தினர் வற்புறுத்தலின் பேரில் குழந்தையின் எதிர்காலம் கருதி அந்த முடிவை கைவிட்டார்.

     

    மேலும் தனது மனைவியை மன்னித்து ஏற்றுக்கொண்டார். அதன்பின் லண்டனுக்கு சென்ற அவர், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி மனைவி முஸ்கானின் பிறந்தநாள், பிப்ரவரி 28 ஆம் தேதி மகளின் பிறந்தநாள் ஆகியவற்றை முன்னிட்டு கடந்த மாதம் சவுரப் ஊருக்கு திரும்பி வந்தார்.

    ஆனால் தனது மனைவி முஸ்கான் சாஹில் உடன் தகாத உறவை இன்னும் தொடர்வதை கணவன் சவுரப் அறிந்துகொண்டார்.

    அவர்களுக்கிடையேயான ஆபாச வாட்சப் உரையாடலையும் சவுரப் பார்த்துள்ளார். இதனால் இருவருக்குமிடையில் வாக்குவாதம் எழுந்தது. இந்நிலையில் கணவன் சவுரப்பை கொலை செய்ய முஸ்கான் தனது காதலுடன் சேர்ந்து திட்டம் தீட்டி கடந்த மார்ச் 7 ஆம் தேதி சவுரபுக்கு மயக்க மருந்து கொடுத்தார். அதன்பின் அவரது இதய பகுதியில் கத்தியால் பலமுறை ககுத்தி இருவரும் கொலை செய்தனர்.

    மேலும் திட்டமிட்டபடி சவுரபின் தலை 15 துண்டுகளாக வெட்டி அதை டிரம் ஒன்றில் போட்டு அதன் மீது சிமெண்டை ஊற்றி உலரவைத்துள்ளனர். அதன் பின் முஸ்கான் சிம்லாவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். சவுரப்பை காணவில்லை என அவரின் சகோதரர் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் தனது அண்ணனின் மனைவி முஸ்கான் மீதும் சந்தேகம் தெரிவித்தார்.  

     

     சவுரப்பின் வங்கிக் கணக்கில் ரூ.6 லட்சம் இருந்தது. முஸ்கானும் சாஹிலும் முதலில் அந்தப் பணத்தை எடுக்க முயன்றனர், ஆனால் அவர்களால் முடியவில்லை. இதற்குப் பிறகு முஸ்கான் சிம்லாவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று பணம் கேட்டுள்ளார்.

    கணவனை குறித்த அவர்களின் கேள்விக்கு மழுப்பலாக பதில் சொல்லியுள்ளார். இறுதியில் தான் கொலை செய்ததை பெற்றோரிடம் முஸ்கான் ஒப்புக்கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் நேற்று மதியம் அவரை பிரம்மபுரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று முழு சம்பவத்தையும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து முஸ்கான் அளித்த வாக்குமூலத்தின்படி வீட்டில் டிரம்மில் சிமென்டில் உறைந்த சவுரபின் உடல் பாகங்களை பெறும் சிரமப்பட்டு போலீசார் மீட்டனர். தொடர்ந்து முஸ்கான் மற்றும் அவரது காதலன் சாஹிலை போலீசார் கைது செய்தனர்.

    • சௌமீன் எனப்படும் நூடில்ஸை குஞ்சனுக்காக சந்தீப் வாங்கி வந்துள்ளார்.
    • மனைவி, சந்தீப்பை கன்னத்தில் அரைத்துள்ளார்.

    உத்தரப்பிரதேசத்தில் நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் கண்டோலியில் உள்ள நந்தலால்பூர் பகுதியில் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வந்தவர் சந்தீப். இவரது மனைவி குஞ்சன்.  

    கடந்த பல ஆண்டுகளாக சந்தீப்புக்கும் அவரது மனைவி குஞ்சனுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. வேறு ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளதாக இருவரும் ஒருவரையொருவர் சந்தேகித்தனர். குஞ்சனிடம் இருந்து சந்தீப் விவாகரத்து பெற விரும்பினார். அவர் ஒரு வழக்கறிஞரைக் கூட அணுகியதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மதியம், சௌமீன் எனப்படும் நூடில்ஸை குஞ்சனுக்காக சந்தீப் வாங்கி வந்துள்ளார். ஆனால் குஞ்சன் அதை சாப்பிட மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. வாக்குவாதத்தில் சந்தீப் மனைவியை தாக்கத்தொடங்கினார்.

    மனைவியும் சந்தீப்பை கன்னத்தில் அரைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தீப் மனைவியின் கழுத்தை நெரித்தில் அவர் மயங்கி விழுந்தார்.

    பின் தனது மகன்களை கூப்பிட்டு மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சொன்னார். அவர்கள் சென்றதும் சந்தீப் மனைவியை கொன்றதாக கூறி போலீசில் சரணடைந்தார். குஞ்சன் இறந்துவிட்டதாக மருத்துவர்களும் அறிவித்தனர். சந்தீப்பை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். 

    • கிராமத்திற்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் 24 தலித்களை சுட்டுக்கொன்றது.
    • 17 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 13 பேர் மரணம் அடைந்தனர். ஒருவர் தலைமறைவானார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் கொள்ளை கும்பலால் ஒரு கிராமத்தில் 24 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 44 வருடங்கள் கழித்து 3 குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மெயின்பூரி மாவட்டத்தில் ஜேஸ்ரானா காவல் நிலையத்திற்கு உள்பட்ட திஹுலி கிராமத்தில் கடந்த 1981-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி சந்தோஷா என அழைக்கப்படும் சந்தோஷ் சிங், ராதே என அழைக்கப்படும் ராதே ஷியாம் ஆகியோர் தலைமையில் கொள்ளை கும்பம் நுழைந்தது.

    அந்த கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தினரைச் சேர்ந்த 24 பேரை ஈவு இரக்கமின்றி கொள்ளைக் கும்பல் சுட்டுக்கொன்றது. இதில் பெண்கள் குழந்தைகளும் அடங்குவர். சுட்டுக்கொன்றதுடன் அவர்களுடைய பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றது கொள்ளைக் கும்பல்.

    இது தொடர்பாக லெய்க்சிங் என்பவர் 1981-ம் அணடு நவம்பர் மாதம் 19-ந்தேதி புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சந்தோஷ் மற்றும் ராதே உள்பட 17 கொள்ளையர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது 17 குற்றவாளிகளில் 13 பேர் மரணமடைந்தனர். இதில் சந்தோஷ் மற்றும் ராதே ஆகியோரும் அடங்குவர்.

    மீதமுள்ள 4 பேரில் ஒருவர் இன்னும் தலைமறைவாக உள்ளார். கப்தான் சிங், ராம் சேவக், ராம் பால் ஆகிய மூன்று பேர் வழக்கை சந்தித்து வந்தனர்.

    இந்த நிலையில்தான் கப்தான் சிங், ராம் சேவக், ராம் பால் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் கடந்த 12ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. மார்ச் 18-ந்தேதி தண்டனை வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    அதன்படி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. 3 பேருக்கு மரண தண்டனை வழங்கியதுடன், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கியது.

    இந்த கொடூர சம்பவம் நடைபெற்ற கிராமத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். எதிர்க்கட்சி தலைவர் வாஜ்பாய், துக்கமடைந்த குடும்பங்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நடைபயணம் மேற்கொண்டார்.

    • திறந்திருந்த ரெயில்வே கேட் வழியாக கண்டைனர் லாரி கிராசிங்கை கடக்கும்போது அதன் மீது ரெயில் மோதியது.
    • சரக்கு ரெயிலின் முன் புறமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரெயிலும் கண்டைனர் லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் அயோத்தியா - ராய்பரேலி ரெயில்வே கிராஸிங் அருகே இன்று அதிகாலை இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.  

    அதிகாலை 2.30 மணியளவில் அந்த தடத்தில் சரக்கு ரெயிலானது வந்துகொண்டிருந்தது. அப்போது திறந்திருந்த ரெயில்வே கேட் வழியாக கண்டைனர் லாரி கிராசிங்கை கடக்கும்போது அதன் மீது ரெயில் மோதியது.

    இதில் படுகாயமடைந்த  லாரியின் ஓட்டுநர் சோனு சவுத்ரி (28), மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக போலீசார் கூறினார்.

    மேலும் சம்பவத்தின்போது கேட் மேன் அங்கு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் லாரி முற்றிலுமாக சேதமடைந்தது. சரக்கு ரெயிலின் முன் புறமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

    மேலும் ரெயில் பாதை மற்றும் மின்சார கட்டமைப்புகள் சேதமடைந்ததால் அவ்வழியாக ரெயில் இயக்கம் தடைபட்டுள்ளது. ரெயில் பாதையை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் போக்குவரத்து சீரமைக்கப்படும் என்றும் வடக்கு ரெயில்வேவின் லக்னோ பிரிவின் ரயில்வே கோட்ட மேலாளர் சச்சீந்தர் மோகன் சர்மா தெரிவித்தார்.  

    • கன்னோஜில் கட்டுப்பாட்டை இழந்து லாரி காந்தி சிலை மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் சிலை பெருமளவில் சேதமடைந்தது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் லாரி மோதியதில் காந்தி சிலை. பீடத்துடன் உடைந்து விழுந்தது. இதனால், மதுபோதையில் இருவர் அழுது புலம்பியது இணையத்தில் வைரலானது.

    கன்னோஜில் கட்டுப்பாட்டை இழந்து லாரி காந்தி சிலை மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிலை பெருமளவில் சேதமடைந்தது.

    விபத்தில் உடைந்த காந்தி சிலை அருகே மதுபோதையில் 2 நபர்கள் கட்டிபிடித்தபடியே அழுது புரண்டனர். 

    • பல்வேறு புகைப்படங்களும் 59 வீடியோக்களும் ஆதாரமாக இணைக்கப்பட்டிருந்தன.
    • பரீட்சையில் நல்ல கிரேட் தருவது, வேலை வாங்கி தருவது ஆகிய ஆசைகளை காட்டி பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் இந்த செயல்களில் 20 வருடமாக ஈடுபட்டு வந்தார்.

    உத்தரப் பிரதேசத்தில் 59 வயதான கல்லூரி அரசுக்கல்லூரி பேராசிரியர் பல மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் அரசு நடத்தி வரும் சேத் பூல் சந்த் பாக்லா முதுகலை கல்லூரியில் புவியியல் துறையின் தலைவராக (HOD) ஆக உள்ளவர் ரஜ்னீஷ் குமார் (59 வயது).

    இவர் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக  அக்கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதை வீடியோ எடுத்தும் வந்துள்ளார்.  இதுதொடர்பாக நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்படாத பின், உள்விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் அவர் குற்றமற்றவர் என்று கூறிவிட்டது.

    இதனையடுத்து கடந்த ஆண்டு தேசிய மகளிர் ஆணையம் (NCW), உயர் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் ரஜ்னீஷ் குமார் மீது பாதிக்கப்பட்டவர் பெயர் குறிப்பிடப்படாமல் பாலியல் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

    அந்தப் புகாரில், பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் ஆபாசமான நிலையில் இருப்பதைக் காட்டும் பல்வேறு புகைப்படங்களும் 59 வீடியோக்களும் ஆதாரமாக இணைக்கப்பட்டிருந்தன.

     

    இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் 13 அன்று தான் அவர் மீது எப்ஐஆர் பதவு செய்யப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 64 (பாலியல் வன்கொடுமை), பிரிவு 68 (அதிகாரத்தில் உள்ள ஒருவரால் பாலியல் வல்லுறவு), மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 66 (சைபர் குற்றங்கள்) ஆகியவற்றின் கீழ் ரஜ்னீஸ் குமார் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கடந்த சனிக்கிழமை அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் காவல்துறை நடவடிக்கை எடுப்பதை அறிந்ததும், ரஜ்னீஷ் குமார் தலைமறைவாகியுள்ளார்.

     மாணவிகளுக்கு பரீட்சையில் நல்ல கிரேட் தருவது, வேலை  வாங்கி தருவது ஆகிய ஆசைகளை காட்டி பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் இந்த செயல்களில் 20 வருடங்களுக்கும் மேலாக ஈடுபட்டு வந்ததாக ஹத்ராஸ் மாவட்ட எஸ்பி சிரஞ்சீவி நாத் சின்ஹா தெரிவித்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் மகளிர் ஆணையத்தில் சமர்ப்பித்த படங்களில் 12, ரஜ்னீஷ் சின்ஹா, காலேஜின் டீன் ஆபீசில் வைத்தே மாணவிகளிடம் அத்துமீறுவதைக் காட்டுகிறது.

    அதில் உள்ள மாணவிகளை அடையாளம் காண போலீசார் முயன்றனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். இதற்கிடையே தலைமறைவான பேராசிரியர் ரஜ்னீஷ் சின்ஹாவை தேடும் பணியில் ஹத்ராஸ் போலீஸ் ஈடுபட்டுள்ளது. 

     

    ×