என் மலர்
தெலுங்கானா
- செம்மரம் விநியோகம் தொடர்பாக விசாரணை நடத்த முதல் மந்திரி உத்தரவு.
- அரசாங்க பணத்தை தவறாக பயன்படுத்தியது தெரியவந்தது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் செம்மரம் மற்றும் மீன்பிடி விநியோகம் தொடர்பாக விசாரணை நடத்த முதல் மந்திரி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
இதில் தெலுங்கானா கால்நடை மேம்பாட்டு முகமை தலைமை நிர்வாக அதிகாரி சபாவத் ராம்சந்தர் மற்றும் அமைச்சர் ஒருவரின் உதவியாளராக இருந்த குண்டமராஜு கல்யாண்குமார் ஆகியோர் அரசாங்க பணத்தை தவறாக பயன்படுத்தியது தெரியவந்தது. இருவரும் அரசு விதிகளை மீறி செம்மர கொள்முதலில் தனியார் நபர்களை ஈடுபடுத்தி அதன் மூலம் மோசடி செய்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து இருவரையும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கில் தொடர்புடைய 8 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தெலுங்கானா சின்னம் மாற்றி அமைப்பதில் அரசுக்கு சிக்கல்.
- தெலுங்கானா அன்னை உருவம் மாற்றி அமைக்கப்படும்.
திருப்பதி:
தெலுங்கானா மாநில 10-ம் ஆண்டு விழா வருகிற 2-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
புதிதாக ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநிலத்திற்கு தனியாக மாநில பாடல் உருவாக்கப்படும்.
மாநில சின்னம், தெலுங்கானா அன்னை உருவம் மாற்றி அமைக்கப்படும் என அறிவித்தார்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே இசையமைப்பாளர் கீரவாணி இசையில் ஜெய ஜெய ஹே தெலுங்கானா என்ற பாடல் தயாரானது. இந்த பாடல் மாநில பாடலாக அங்கீகரிக்கப்பட்டது.
பாடலை தேர்வு செய்யும் கூட்டத்தில் பா.ஜ.க. மற்றும் பிரதான எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.
புதிதாக தயாராகும் தெலுங்கானா மாநில சின்னத்தில் சார்மினார் மற்றும் காகதியா வளைவு அகற்ற முடிவு செய்துள்ளனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தெலுங்கானா சின்னம் மாற்றி அமைப்பதில் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான எந்த முடிவையும் இன்னும் எடுக்கவில்லை. மேலும் தெலுங்கானா அன்னை சிலையை மாற்றியமைப்பது குறித்தும் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.
அனைத்து பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும்படி அரசு சின்னம் மற்றும் தெலுங்கானா அன்னை சிலை இருக்கும் வகையில் அரசு முடிவு எடுக்கும் என முதல் மந்திரி ரேவேந்த் ரெட்டி உறுதி அளித்துள்ளார்.
- ஐதராபாத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- நடிகை நிவேதா பெத்துராஜ் வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல்.
நடிகை நிவேதா பெத்துராஜ் காரை நிறுத்தி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர் தன்னுடைய கார் டிக்கியை திறக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ்ஜின் காரை மடக்கிய போலீசார் சோதனை செய்துள்ளனர். நிவேதா பெத்துராஜிடம் காரின் டிக்கியை திறக்க சொல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், நடிகை நிவேதா பெத்துராஜ் காரின் டிக்கியை திறக்க மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், போலீசாரிடம் தொடர்ந்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.
போலீசாருடன் நடிகை நிவேதா பெத்துராஜ் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், இந்த வீடியோ விரைவில் வெளிவரும் அவரது தெலுங்கு படத்திற்கான புரோமோஷனுக்காகவா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
- மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டன.
- பலத்த மழையின் காரணமாக தெலுங்கானாவில் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வங்க கடலில் புதிதாக உருவான ரீமல் புயல் சின்னம் காரணமாக தெலுங்கானாவில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
ஐதராபாத், நாகர் கர்னூல், மேடக், கங்கா ரெட்டி, மேட்சல், மல்காஜ்கிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இடி மின்னலில் சிக்கி நாகர் கர்னூல் மாவட்டத்தில் 7 பேரும், ஐதராபாத்தில் 2 பேரும், மேடக்கில் 2 பேரும் பலியாகினர். நல்கொண்டா மாவட்டத்தில் கோழிப்பண்ணை இடிந்து விழுந்ததில் மல்லேஸ் ( வயது 38), அவரது மகள் அனுஷா (12), மற்றும் சென்னம்மா (38), ராமுடு (36) ஆகியோர் இறந்தனர்.
மேலும் சூறாவளி காற்று வீசியதால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பங்கள் மற்றும் சாலைகளில் விழுந்தன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. பலத்த மழையின் காரணமாக தெலுங்கானாவில் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஒரே நாளில் மழைக்கு 15 பேர் பலியாகி உள்ளனர்.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டம், லஷ்மி பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீதர் ரெட்டி (வயது 55). இவர் சந்திரசேகர ராவின் பி.ஆர். எஸ் கட்சி தலைவராக இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீதர் ரெட்டி வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் ஸ்ரீதர் ரெட்டியை கோடாரியால் சரமாரியாக வெட்டினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து ஸ்ரீதர் ரெட்டி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஸ்ரீதர் ரெட்டியின் மகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்ரீதர் ரெட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தந்தை கொலை செய்யப்பட்டதற்கு உள்ளூர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தான் காரணம் என குற்றம் சாட்டினர். ஆனால் குற்றச்சாட்டிற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமியின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்து மகளை அழைத்துச் சென்று துக்காராம் கேட் போலீசில் புகார் செய்தனர்.
- போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சந்திப்பை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார். இதனைக் கண்ட சிறுமியின் பெற்றோர் மகளை கண்டித்தனர்.
இதனால் விரக்தி அடைந்த சிறுமி திங்கட்கிழமை இரவு வீட்டில் இருந்து வெளியேறினார். எங்கு செல்வது என தெரியாமல் சிறுமி கால் போன போக்கில் சென்றார்.
தெலுங்கானா மாநிலம், நல்கொண்டாவை சேர்ந்தவர் சந்திப் (வயது 28). இவர் செகந்திராபாத்தில் வாடகை பைக் ஓட்டி வருகிறார்.
இந்த நிலையில் அழுதபடி சென்ற சிறுமியை பார்த்த சந்திப் தன்னுடன் வருமாறு சிறுமியை அழைத்தார். ஆனால் சிறுமி சந்திப்புடன் செல்ல மறுத்தார்.
இருப்பினும் சந்திப் சிறுமியிடம் நைசாக பேசி காச்சிகுடாவிற்கு அழைத்துச் சென்றார்.
அங்குள்ள தங்கும் விடுதியில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
மகள் வீட்டில் இல்லாததால் அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். பின்னர் மகள் காணாமல் போனது குறித்து துக்காராம் கேட் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி அந்த வழியாக வந்த ஒருவரிடம் செல்போனை வாங்கி தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
சிறுமியின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்து மகளை அழைத்துச் சென்று துக்காராம் கேட் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சந்திப்பை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- சோதனையின் போது தண்ணீருக்கான பகுப்பாய்வு அறிக்கை இன்னும் வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
- பல்வேறு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஹைதராபாத்தில் உள்ள உப்பல் பகுதியில் உள்ள உணவகங்களில் சுகாதார மற்ற முறையில் உணவகங்கள் செயல்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது.
இந்நிலையில் உணவு ஆய்வார்கள் பிரபலமான உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் உணவு பொருட்கள் சுகாதாரமற்ற நிலையில் இருந்தது அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
FSSAI அதிரடிப்படை குழு உப்பல் பகுதியில் சோதனை நடத்தியதில் செயற்கை உணவு வண்ணங்களை பயன்படுத்தியதும், 4 காலாவதியான விஜயா பால் பாக்கெட்டுகள், 65 கிலோ லேபிள் இல்லாத இஞ்சி பூண்டு விழுதுகள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர்.

சோதனையின் போது தண்ணீருக்கான பகுப்பாய்வு அறிக்கை இன்னும் வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ள குளிர்சாதனப் பெட்டி, சரியாக சேமிக்கப்படாத அரைத்த தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள், ஹேர்கேப்கள், கையுறைகள், ஏப்ரான்கள் மற்றும் மருத்துவ உடற்பயிற்சி சான்றிதழ்கள் இல்லாமல் உணவு கையாளுபவர்கள் என பல்வேறு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இந்த ஆய்வில் எடுக்கப்பட்ட படங்கள் சமூகவளைதலங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பான ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, காலாவதியான பால், செயற்கை வண்ணங்களைப் பயன்படுத்துவது மற்றும் பல விதிமீறல்களில் ஈடுபட்டுள்ள இந்த உணவகங்கள் குறித்து ஜாக்கிரதையாக இருக்குமாறும், மேலும் இது ஹைதராபாத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ளதாக நான் உறுதியாக நம்புகிறேன்... என்று சமூக வலைதலங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Are you living around Uppal in Hyderabad ?
— Sudhakar Udumula (@sudhakarudumula) May 22, 2024
Beware of these restaurants that found using Expired milk, synthetic colors and involved in many more violations
FSSAI Task Force team has conducted inspections in Uppal area on Monday.
Master Chef Restaurant
* Found using synthetic… pic.twitter.com/6LNfbgKoWV
- மாநில அந்தஸ்து கொண்டாட்டங்களுக்கு அதிக பணம் செலவழித்து, கடன் வாங்கும் முன் காங்கிரஸ் அரசு தான் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் முதலில் செயல்படுத்த வேண்டும்.
- தெலுங்கானாவுக்கு மாநில அந்தஸ்தை வழங்குவதற்கு பா.ஜ.க எப்போதும் ஆதரவளித்து வந்தது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலம் உருவான 10-வது ஆண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதற்கு பின்னர் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமர்ந்து உள்ளது. இதனால் ஆண்டு விழாவிற்கு முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி அழைப்பு விடுத்தார்.
இது குறித்து தெலுங்கானா பா.ஜ.க செய்தி தொடர்பாளர் சுபாஷ் கூறியதாவது :-
எந்த தகுதியின் அடிப்படையில் ஆண்டு விழாவிற்கு சோனியா காந்தியை அழைத்து இருக்கிறீர்கள். தெலுங்கானா மக்களால் மாநில அந்தஸ்தை அடைந்தபோது காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ் கட்சிகள் தங்களால் தான் மாநில அந்தஸ்து கிடைத்ததாக பொய் கூறுகின்றனர்.
மாநில அந்தஸ்து கொண்டாட்டங்களுக்கு அதிக பணம் செலவழித்து, கடன் வாங்கும் முன் காங்கிரஸ் அரசு தான் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் முதலில் செயல்படுத்த வேண்டும். பி.ஆர்.எஸ் அரசு கடந்த காலங்களில் மாநிலத்தில் மக்கள் துயரத்தில் இருந்த போதும் கொண்டாட்டங்களுக்காக ரூ.500 கோடியை செலவழித்தது.
தெலுங்கானாவுக்கு மாநில அந்தஸ்தை வழங்குவதற்கு பா.ஜ.க எப்போதும் ஆதரவளித்து வந்தது. மறைந்த சுஷ்மா சிவராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகிய கட்சித் தலைவர்கள் இதற்கு ஆதரவு அளித்து வந்தனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- டிஎஸ்-09-9999 என்ற நம்பருக்கு கடும் போட்டி நிலவியது.
- இந்த எண்ணுக்கு மொத்தம் 11 பேர் போட்டியிட்டனர்.
ஐதராபாத்:
எளிய முறையில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் பேன்சி நம்பர் கொண்ட நம்பர் பிளேட்களை வாங்குகின்றனர்.
இந்த வகையிலான பேன்சி நம்பர் அவற்றின் இலக்கங்கள், எழுத்துக்களின் வரிசைகளுக்காக தேர்வு செய்யப்படுகின்றன. இவை தனிப்பட்ட விருப்பத் தேர்வுகள், அதிர்ஷ்ட எண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் தெலுங்கானாவில் ஒருவர் ரூ.25 லட்சம் செலவு செய்து டிஎஸ்-09-9999 என்ற பேன்சி நம்பரை வாங்கினார்.
பேன்சி பதிவு எண்கள் பெறுவதற்கான இணையவழி ஏலத்தை தெலுங்கானா சாலை போக்குவரத்து ஆணையம் நடத்தியது. அப்போது டிஎஸ்-09-9999 என்ற நம்பருக்கு கடும் போட்டி நிலவியது. மொத்தம் 11 பேர் இதில் போட்டியிட்டனர்.
இறுதியாக, கோடீஸ்வரர் ஒருவர் தனது விலையுயர்ந்த காருக்காக இந்த எண்ணை 25,50,002 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.
தெலுங்கானாவில் இதுவரை அதிக விலை கொடுத்து வாங்கிய பேன்சி நம்பர் இதுதான் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 1100 கோடி மோசடி வழக்கை காவல் உதவி ஆணையர் உமா மகேஸ்வர ராவ் விசாரித்து வந்தார்.
- அவருக்கு சொந்தமாக உள்ள 13 இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக காவல் உதவி ஆணையர் உமா மகேஸ்வர ராவை தெலுங்கானாவின் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
உமா மகேஸ்வர ராவின் வீடு மற்றும் தெலுங்கானா, விசாகப்பட்டினத்தில் அவருக்கு சொந்தமாக உள்ள 13 இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.
அதில், சுமார் 3.5 கோடி மதிப்பிலான சொத்து பத்திரங்களும், ரொக்கப்பணமும், தங்கம், வெள்ளி பொருட்களும் கைப்பற்றப்பட்டது.
தனது பதவியை பய்னபடுத்தி முறைகேடான வழிகளில் இவர் சொத்து சேர்த்துள்ளார் என்ற இவர் மீது குற்றசாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
1100 கோடி அளவில் வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக சொல்லப்படும் சாஹிதி இன்ப்ரா மோசடி வழக்கை காவல் உதவி ஆணையர் உமா மகேஸ்வர ராவ் தான் விசாரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத்தின் மத்திய குற்றப்பிரிவில் பொருளாதார குற்றப்பிரிவு உதவி காவல் ஆணையராக உமா மகேஸ்வர ராவ் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Senior police officer (ironically) serving as ACP in EOW, CCS #HyderabadPolice, T.S.UmaMaheswarRao, in custody after #ACBOfficials conducted raids on his house & 13 other locations in Telangana & AP (Vizag); Seized
— Uma Sudhir (@umasudhir) May 22, 2024
15 land documents, valuables like gold, silver worth Rs. 3.5 Cr pic.twitter.com/tWkgZc7OuW
- தனி மாநிலம் அமைக்க பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
- இசையமைப்பாளர் கீரவாணி இசையில் தெலுங்கானா மாநில பாடலும் புதுப்பித்து வெளியிடப்பட உள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா உருவாகி வருகிற 2-ந்தேதியுடன்10 ஆண்டுகள் நிறைவடைகிறது.
தெலுங்கானாவில் உள்ள காங்கிரஸ் அரசு, இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் தெலுங்கானா 10-ம் ஆண்டு விழாவை பெரிய அளவில் கொண்டாட்டங்களுடன் நடத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி, தெலுங்கானா உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
மேலும் தனி மாநிலம் அமைக்க பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
மாநில அமைச்சரவைக் கூட்டத்தின் போது துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா இதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். அது ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
மேலும் இசையமைப்பாளர் கீரவாணி இசையில் தெலுங்கானா மாநில பாடலும் புதுப்பித்து வெளியிடப்பட உள்ளது.
- படுகாயமடைந்த மனைவி சரளா தேவி, காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- முறிந்து விழுந்த மரத்தை முழுவதுமாக வெட்டி அங்கிருந்து அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹைதராபாத்தில் உள்ள பொலராம் அரசு மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த தம்பதி மீது மரம் முறிந்து விழுந்ததில் கணவர் ரவீந்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த மனைவி சரளா தேவி, காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சரளா தேவி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
தொடர்ச்சியாக மழை பொழிந்து வருவதால் மரம் முறிந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முறிந்து விழுந்த மரத்தை முழுவதுமாக வெட்டி அங்கிருந்து அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் முறிந்து விழுந்த மரம் பல வாரங்களாக மெதுவாக சாய்ந்து வந்ததாகவும், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்று உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தம்பதி மீது மரம் முறிந்து விழுந்த காட்சி மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.






