என் மலர்
நீங்கள் தேடியது "Govt Officials"
- செம்மரம் விநியோகம் தொடர்பாக விசாரணை நடத்த முதல் மந்திரி உத்தரவு.
- அரசாங்க பணத்தை தவறாக பயன்படுத்தியது தெரியவந்தது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் செம்மரம் மற்றும் மீன்பிடி விநியோகம் தொடர்பாக விசாரணை நடத்த முதல் மந்திரி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
இதில் தெலுங்கானா கால்நடை மேம்பாட்டு முகமை தலைமை நிர்வாக அதிகாரி சபாவத் ராம்சந்தர் மற்றும் அமைச்சர் ஒருவரின் உதவியாளராக இருந்த குண்டமராஜு கல்யாண்குமார் ஆகியோர் அரசாங்க பணத்தை தவறாக பயன்படுத்தியது தெரியவந்தது. இருவரும் அரசு விதிகளை மீறி செம்மர கொள்முதலில் தனியார் நபர்களை ஈடுபடுத்தி அதன் மூலம் மோசடி செய்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து இருவரையும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கில் தொடர்புடைய 8 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஊழல் குறித்து கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
- முன்ஜாமீன் வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.
அரசு துறைகள் மற்றும் அரசியல் கட்சிகளில் உயர் மட்டங்களில் உள்ள ஊழல்வாதிகள், கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலையாளிகளை விட சமூகத்திற்கு மிப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பொது வாழ்வில் ஊழல் குறித்து கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
"வளரும் நாட்டில் ஒரு சமூகம் கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலையாளிகள் முதல் சட்டம்ஒழுங்கு வரையிலான அச்சுறுத்தலை விட பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது என்றால், அது அரசாங்கத்தின் உயர் மட்டங்களிலும் அரசியல் கட்சிகளிலும் உள்ள ஊழல்வாதிகளிடம் இருந்து தான் வருகிறது," என்று நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
கிராம பஞ்சாயத்துகள் மேற்கொள்ளும் வளர்ச்சி பணிகளை தணிக்கை செய்ய லஞ்சம் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பஞ்சாப் அரசின் தணிக்கை ஆய்வாளர் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இத்தகைய காட்டமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மேலும் கூறும் போது, "நமது சமூகத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்திய ஒரே ஒரு காரணியைக் குறிப்பிடச் சொன்னால், அது மறுக்க முடியாத ஊழல். ஊழலின் அளவு குறித்து மக்கள் மத்தியில் இருந்த கருத்துக்களில் ஒரு பகுதியே உண்மையாக இருந்தாலும், உயர் பதவியில் உள்ளவர்கள் தண்டனையின்றி செய்யும் பரவலான ஊழல்தான் இந்த நாட்டில் பொருளாதார அதிருப்திக்கு வழிவகுத்தது என்ற பார்வை உண்மையிலிருந்து தொலைவில் இருக்காது," என்று தெரிவித்தது.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அவ்வகையில் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, அரசு ஊழியர்களை பாலியல் தொழிலாளர்களுடன் ஒப்பிட்டு பேசியது புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
“அரசு அதிகாரிகளை விட பாலியல் தொழில் செய்பவர்கள் எவ்வளவோ மேல். அவர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு தங்கள் வேலையை செய்கிறார்கள். மேடையில் தோன்றி நடனமும் ஆடுகிறார்கள். ஆனால், அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய பிறகுகூட தங்கள் பணியை செய்வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்றார் சுரேந்திரா.

இதேபோல் சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, ராவணனின் தங்கை சூர்ப்பனகை என்று மோசமாக வர்ணித்ததும் இவர்தான். #SurendraSingh #BJP






