என் மலர்
நீங்கள் தேடியது "Prostitutes"
திருச்சி:
திருச்சி கே.கே.நகர் பகுதியில் விபசாரம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தது. இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக மாலைமலரில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து போலீசார் தீவிர நடவடிக்கை பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் திருச்சி வடக்கு காட்டூரை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 24) என்பவர் கே.கே.நகர் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு பெண் ஒருவர், தினேஷ்குமாரிடம் நைசாக பேச்சு கொடுத்ததோடு, கே.கே.நகர் பாத்திமா தெருவில் உள்ள ஒரு வீட்டில் 2 இளம்பெண்கள் இருக்கிறார்கள். உல்லாசத்திற்கு வருகிறீர்களா? என்று அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தினேஷ்குமார் , உடனடியாக திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் கே.கே.நகர் பாத்திமாதெரு பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு வாடகை வீட்டில் 2 அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண்களை மீட்ட போலீசார் , அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் விபசாரம் நடத்தி வந்த ராணி தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அவ்வகையில் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, அரசு ஊழியர்களை பாலியல் தொழிலாளர்களுடன் ஒப்பிட்டு பேசியது புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
“அரசு அதிகாரிகளை விட பாலியல் தொழில் செய்பவர்கள் எவ்வளவோ மேல். அவர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு தங்கள் வேலையை செய்கிறார்கள். மேடையில் தோன்றி நடனமும் ஆடுகிறார்கள். ஆனால், அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய பிறகுகூட தங்கள் பணியை செய்வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்றார் சுரேந்திரா.

இதேபோல் சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, ராவணனின் தங்கை சூர்ப்பனகை என்று மோசமாக வர்ணித்ததும் இவர்தான். #SurendraSingh #BJP






