என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெலுங்கானா மழை"

    • மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டன.
    • பலத்த மழையின் காரணமாக தெலுங்கானாவில் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    வங்க கடலில் புதிதாக உருவான ரீமல் புயல் சின்னம் காரணமாக தெலுங்கானாவில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    ஐதராபாத், நாகர் கர்னூல், மேடக், கங்கா ரெட்டி, மேட்சல், மல்காஜ்கிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இடி மின்னலில் சிக்கி நாகர் கர்னூல் மாவட்டத்தில் 7 பேரும், ஐதராபாத்தில் 2 பேரும், மேடக்கில் 2 பேரும் பலியாகினர். நல்கொண்டா மாவட்டத்தில் கோழிப்பண்ணை இடிந்து விழுந்ததில் மல்லேஸ் ( வயது 38), அவரது மகள் அனுஷா (12), மற்றும் சென்னம்மா (38), ராமுடு (36) ஆகியோர் இறந்தனர்.

    மேலும் சூறாவளி காற்று வீசியதால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பங்கள் மற்றும் சாலைகளில் விழுந்தன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. பலத்த மழையின் காரணமாக தெலுங்கானாவில் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஒரே நாளில் மழைக்கு 15 பேர் பலியாகி உள்ளனர்.

    • மாநிலம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட பகுதிகளில் மத்திய குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் சென்று இழப்பீடு குறித்து ஆய்வு செய்தனர்.
    • இழப்பீடு மதிப்பு குறித்து ஆய்வு பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை.

    திருப்பதி:

    பருவமழை காரணமாக தெலுங்கானாவில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பலத்த மழை கொட்டி வருகிறது. அங்குள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் பொதுமக்களை மாநில அரசு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் வீடுகளில் வளர்க்கப்பட்ட ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியும் சேதம் அடைந்தது.

    இந்த நிலையில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த நிலையில் மாநிலம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட பகுதிகளில் மத்திய குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் சென்று இழப்பீடு குறித்து ஆய்வு செய்தனர். இழப்பீடு மதிப்பு குறித்து ஆய்வு பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை.

    பின்னர், தலைமை செயலாளர் மற்றும் அமைச்சர்களுடன் மத்திய குழு தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர்கள் தெலுங்கானாவில் மொத்தம் ரூ 1,400 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது ரூ.1,000 கோடியை உடனடியாக நிவாரணமாக மத்திய அரசு, மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தெலுங்கானாவில் மேலும் 5 நாட்கள் மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ×