என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பனியன் நிறுவனத்தில் உங்கள் இரண்டு பேரையும் சேர்த்து விடுகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
    • கையில் கத்தியை வைத்து மிரட்டியதால் அந்த தம்பதி சத்தம் போடமுடியாமல் பயத்தில் உரைந்துள்ளனர்.

    திருப்பூர்:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் தனது கணவன், குழந்தையுடன் திருப்பூர் அடுத்துள்ள தெக்கலூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர வந்துள்ளனர்.

    பின்னர் அங்கு வேலை பிடிக்கவில்லை என்று அந்த தம்பதி மீண்டும் தங்கள் சொந்த ஊரான ஒடிசா மாநிலம் செல்ல திருப்பூர் ரெயில் நிலையம் வந்துள்ளனர். இந்த நிலையில் ரெயில் நிலையம் அருகில் புஸ்பா பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்து இருந்துள்ளனர்.

    அப்போது அவர்களிடம் அறிமுகமான பீகார் மாநிலத்தை சேர்ந்த நதீம்(24), டானிஷ்(25) மற்றும் முர்சித் என்ற மூன்று வட மாநில இளைஞர்கள் நாங்கள் வேலை பார்க்கும் பனியன் நிறுவனம் அருகில் தான் உள்ளது என கூறியுள்ளனர். அந்த நிறுவனத்தில் உங்கள் இரண்டு பேரையும் சேர்த்து விடுகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

    இந்த நிலையில் கணவன், மனைவி மற்றும் குழந்தை தங்க இடம் இல்லாததை அறிந்த இந்த மூன்று பேரும் அந்த தம்பதியை அவர்கள் தங்கும் லட்சுமி நகர் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். இரவு உணவு தயார் செய்த இவர்கள் அனைவரும் ஒன்றாக சாப்பிட்டுள்ளனர்.

    பின்னர் இவர்கள் ஆறு பேரும் ஒரே அறையில் தூங்க சென்றுள்ளனர். இந்த நிலையில் அக்கம்பக்கதினர் தூங்கிய உடன் நதீம், டானிஷ் மற்றும் முர்சித் என மூன்று வட மாநில இளைஞர்களும் கையில் கத்தியை வைத்து பெண்ணின் கணவனை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் மூன்று பேரும் அந்தப் பெண்ணை கணவன் மற்றும் குழந்தை கண் முன்பே ஒருவர் மாற்றி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    கையில் கத்தியை வைத்து மிரட்டியதால் அந்த தம்பதி சத்தம் போடமுடியாமல் பயத்தில் உரைந்துள்ளனர்.

    இதை தொடர்ந்து அந்த பெண்ணை மூவரும் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பின்னர் அங்கிருந்து மிரட்டி வெளியில் அனுப்பியுள்ளனர். வெளியே வந்த அவர்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதை தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீசார் உடனே விரைந்து லட்சுமி நகர் பகுதியில் உள்ள நதீம், டானிஷ் மற்றும் முர்சித் ஆகிய மூன்று பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர் பின்னர் அவர்கள் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை, உயிர் பயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவைக்கு வருகை புரிகிறார்.
    • அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சையாக பேசியதற்காக கருப்புக் கொடி காட்ட முடிவு செய்துள்ளனர்.

    பிப்ரவரி 25 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவைக்கு வருகை புரிகிறார். 26 ஆம் தேதி பல்வேறு நிகழ்வுகளில் அவர் கலந்துகொள்ள இருக்கிறார்.

    இந்நிலையில், கோவைக்கு வரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கருப்புக் கொடி காட்ட பெரியாரிய அமைப்புகள், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் முடிவெடுத்துள்ளனர்.

    காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு, அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசியது உள்ளிட்டவற்றிற்காக கருப்புக் கொடி காட்ட முடிவு செய்துள்ளனர்.

    • தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே செருப்புப் போடுவேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
    • மூன்றாவதாக எதாவது ஒரு மொழி என்று பிதற்றுகிறார்கள். அதெல்லாம் பொய்.

    மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கொ.ம.தே.க. தலைவர் ஈஸ்வரன், "ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் திரண்டிருக்கிறார்கள். இந்தி நமக்கு எந்த விதத்தில் நமக்கு பயன் தரும். இந்திய கற்றுக்கொள்வது பெரிய விஷயம் இல்லை. நான் அசாமில் இருந்தபோது 3 மாதத்தில் இந்தி கற்றுக்கொண்டேன்.

    மூன்றாவதாக எதாவது ஒரு மொழி என்று பிதற்றுகிறார்கள். அதெல்லாம் பொய். இதில் ஏமாந்தோம் என்றால் பள்ளிகளில் இந்தி, சம்ஸ்கிருத ஆசிரியர்கள் மட்டும் தான் இருப்பார்கள்.

    பள்ளியில் 50 மாணவர்கள் வெவ்வேறு மொழி தேர்ந்தெடுத்தால் எப்படி அதற்கு ஆசிரியர்களை நியமிக்க முடியும். அது நடைமுறை சாத்தியமற்றது. இது ஒரு பிளாக்மெயில் அரசாங்கம்.

    தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே செருப்புப் போடுவேன் என மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார். ஜென்மத்திற்கும் நீங்கள் செருப்பு அணிய மாட்டீர்கள். செருப்புப் போட வாய்ப்பு அமையாது

    • இது திமிர் பிடித்தவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.
    • வரியை திருப்பிக் கேட்டால் அற்பத்தனம் என்கிறார் மத்திய அமைச்சர்.

    மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், "இது திமிர் பிடித்தவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம். வரியை திருப்பிக் கேட்டால் அற்பத்தனம் என்கிறார் மத்திய அமைச்சர்.

    மத்திய அமைச்சரின் பெயர் தர்மேந்திரா, ஆனால் எந்த தர்மமும் இல்லாதவர். ஆனால் இந்திய ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு நிதி கொடுக்க முடியாது என ஆணவத்துடன் கூறுகிறார். இதை கேட்ட தமிழ்நாட்டு மக்கள் உங்கள் அப்பன் வீட்டு பணமா என்று கேட்கிறார்கள்.

    எங்களின் உரிமையை தான் நாங்கள் கேட்கிறோம். யாசகம் கெடக்கவில்லை. மும்மொழியை ஏற்காத மாநிலங்களுக்கு நிதி கொடுக்க கூடாது என்று அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது?

    1965 இல் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டபோது அதற்கு எதிராக இங்கு மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இப்போராட்டத்தில் பலர் உயிரிழந்தார்கள். அப்போது ரெயில் நிலையங்கள், அஞ்சல் நிலையங்களில் இருந்த இந்தி அழிக்கப்பட்டது.

    இதனையடுத்தது இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிக்கப்படாது என்று அப்போதைய பிரதமர் நேரு உறுதி அளித்தார். இப்போது மோடி மன்னர் போல இருக்கிறார். அவர்களின் பாசிஸ்ட்ட ஆட்சியை எதிர்த்து தான் இங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    தனது வீட்டின் முன்பு தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்ட அண்ணாமலை இருமொழி கொள்கை காலாவதியாகிவிட்டது என்று கூறுகிறார். உண்மையில் அண்ணாமலை தான் காலாவதி ஆகிவிட்டார். தமிழ்நாட்டில் பாஜகவை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் இந்தி திணிப்பை எதிர்க்கிறார்கள்.

    ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்" என்று தெரிவித்தார்.

    • இந்தியை திணித்து தமிழ்நாட்டு வரலாற்றை, பண்பாட்டை, தனித்துவத்தை அழிக்கலாம் என நினைக்கிறார்கள்.
    • தமிழக மக்களை இரண்டாம் தர மக்களாக மாற்ற பாசிச பாஜக முயற்சி செய்கிறது.

    திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மும்மொழி கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இன்று தமிழ்நாடே கொந்தளித்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மக்கள் அன்பிற்கு கட்டுப்பட்டவர்கள். எந்த காலத்திலும் அடக்குமுறைக்கு பயப்படமாட்டோம். அஞ்சமாட்டோம். அடிபணியமாட்டோம். தமிழ்நாட்டுக்கு எதிரான மத்திய அரசின் பாசிச போக்கை கண்டித்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒரே மேடையில் கூடியிருக்கின்றோம்.

    மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கான எந்த திட்டமுல் இல்லை. தமிழ்நாட்டின் பெயர் கூட பட்ஜெட் உரையில் இல்லை. பெஞ்சல் புயல் பாதிப்பிற்காக மத்திய அரசு கஜானாவில் இருந்த ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. தற்போது இந்தியை ஏற்காததால் கல்வித்துறைக்கு வழங்கக்கூடிய 2,190 கோடி ரூபாயை உத்தர பிரதேசம், குஜராத்தில் மாநிலத்திற்கு பிரித்து கொடுத்துள்ளது.

    மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால்தான் நிதியை தர முடியும் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் மிரட்டியிருக்கிறார்.

    நாங்கள் ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டு காசை கேட்கவில்லை. நாங்கள் ஒன்னும் உங்களிடம் பிச்சையோ கடனோ கேட்கவில்லை. தமிழக மாணவர்களின் பெற்றோர்கள் கட்டிய வரிப்பணித்தின் உரிமையைத்தான் கேட்கிறோம். எங்களுக்கு தர வேண்டிய நிதி உரிமையை தாருங்கள் என உரிமையோடு கேட்கிறோம்.

    தமிழ்நாடு அரசையும் சரி, தமிழ்நாட்டு மக்களையம் சரி ஒருபோதும் மிரட்டி பணிய வைக்க முடியாது. இது திராவிட மண், பெரியார் மண். சுயமரியாதை மண். இதை ஒன்றிய அரசுக்கு அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

    இந்தியை திணித்து தமிழ்நாட்டு வரலாற்றை, பண்பாட்டை, தனித்துவத்தை அழிக்கலாம் என நினைக்கிறார்கள். தமிழக மக்களை இரண்டாம் தர மக்களாக மாற்ற பாசிச பாஜக முயற்சி செய்கிறது.

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

    • ஜிஎஸ்டியில் ஒத்துழைப்பு தரமாட்டோம். சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்காது என அறிவியுங்கள்.
    • என் மண்ணுக்கும் என் மக்களுக்கும் செய்கின்ற துரோகம்.. ஒக்கி புயல் வந்தால் பணம் இல்லை... வர்தா புயல் வந்தால் பணம் இல்லை...

    திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மும்மொழி கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது வேல்முருகன் பேசியதாவது:-

    இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சருக்கு ஒரேயொரு வேண்டுகோளை முன் வைக்கிறேன்.

    அது,

    சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கிறோம். சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறோம்.

    எதையும் பற்றி கவலைக்கொள்ளாமல் நம்மை தூசு என்று நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும் எனச்சொன்னார். இதை சரியான களமாக மாற்றுங்கள். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம்.

    அனைத்து சுங்கச்சாவடிகளில் உங்க தலைமையிலான தொண்டர்களும், மக்களும் வரிக்கொடா இயக்கத்தை அறிவியுங்கள். அனைத்து தலைவர்கள் சுங்கச்சாவடிகளில் சுங்கம் தர மறுப்போம் என வரிக்கொடா இயக்கத்தை தொடங்குவார்கள்.

    2-வது ஜிஎஸ்டி. ஜிஎஸ்டியில் ஒத்துழைப்பு தரமாட்டோம். சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்காது என அறிவியுங்கள். அதானியின் துறைமுகங்களுக்கு துணை நிற்கமாட்மோம் என சொல்லுங்கள். பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் ஒத்துழைப்பு தரமாட்டோம். எனச் சொல்லுங்கள். மோடி உங்களுடைய காலடியில் மண்டியிடுகிறாரா? இல்லையா? என்பதை நான் பார்க்கிறேன் என்பதுதான்.

    தமிழனின் மான உணர்ச்சி, இன உணர்ச்சி, சுயமரியாதையில், தன்மானத்தில் கை வைத்துக்கொண்டே இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு என்பதால் எவ்வளவோ பணிந்து போகிறீர்கள். எவ்வளவோ தீர்மானம் நிறைவேற்றி அனுப்புகிறோம். ஒன்றிற்கும் மரியாதை கிடையாது. கிழித்து குப்பையில் வீசுகிறார்கள்.

    பாரளுமன்றத்தில் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர். பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள்., மோடி அரசு, சங்கபரிவார் கும்பல்கள் நாட்டிற்கு செய்யும் அட்டூழியங்களை பாராளுமன்றத்தில் கிழித்து தொங்கவிடுகிறார்கள்.

    தமிழக வரலாற்றிலேயே கலைஞருக்குப் பிறகு தளபதி தலைமையில் உள்ள 40 எம்.பி.க்கள் நாட்டையே திரும்பி பார்க்க வைக்கக் கூடியவர்கள். நம்ம ஆட்கள் கேட்கும் கேள்விகள் ஒன்றிற்கு கூட சங்கி கும்பலால் பதில் சொல்ல முடியவில்லை.

    நிர்மலா சீதாராமன் கதறுகிறார். அவருக்கு கோபம்தான் வருகிறது. தயிர் சாதம் சாப்பிடுகிற உனக்கே கோபம் வருகிறது என்றால்?, நல்லி எழும்பு சாம்பிடுகிற எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்?.

    என் மண்ணுக்கும் என் மக்களுக்கும் செய்கின்ற துரோகம்.. ஒக்கி புயல் வந்தால் பணம் இல்லை... வர்தா புயல் வந்தால் பணம் இல்லை... தானே புயல் வந்தால் பணம் இல்லை. இயற்கை பேரிடர் பாதிப்பு ஏற்பட்டால் பணம் இல்லை... குரங்கணி தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற விமானப்படை ஹெலிகாப்டர் கேட்டால், 6 மணிக்குப் பிறகு ஹெலிகாப்டருக்கு கண் தெரியாது என்றகிறார்கள். அப்படி என்றால் ராணுவத்தில் என்னத்திற்கு ஹெலிகாப்டர்.

    நான் அதிகமாக பேசினா.. தளபதி சட்டமன்றத்தில் அழைத்து ஏன் இப்படி பேசினிங்க என கேட்பார். அதனால் ஆத்திரம் பொங்குது... கோபம் வருது... நாளைக்கு என்எல்சி-யில் வைக்கிறேன் கச்சேரி.

    இவ்வாறு வேல்முருகன் தெரிவித்தார்.

    • ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
    • கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்பட 18 மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவர்.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு ஃபெஞ்சல் புயல் காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

    பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக, தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.

    இதற்கிடையே, டெல்டா மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.498.8 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.498.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிவாரணம் வழங்குவதன் மூலம் 5,18,783 விவசாயிகள் பயன் பெறுவர்.

    மானாவாரி பயிர் ஹெக்டேருக்கு ரூ.8,500, நெற்பயிர், பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு ரூ.17,000 நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    • உத்தர பிரதேசத்தில் 25,000 அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு, 15,000 தனியார் பள்ளிகளை திறந்தார்கள்.
    • தேசிய கல்விக்கொள்கைக்கும் நமக்கு ஒவ்வொரு வருடமும் சேர வேண்டிய கல்வி நீதிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.

    மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், "1986 க்கு பிறகு கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்த, மொழிப் போருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

    ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான பேச்சிற்கு பிறகு.. நமது மூச்சில் கலந்த மொழிப்போர் தியாகிகளின் உயிர் மீண்டும் உயிர்த்தெழ ஆரம்பித்துள்ளது. அவர்கள் உங்களுடைய உருவின் இங்கு நின்று கொண்டுள்ளது.

    தமிழ்நாடு மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் கல்வி நிதி தருவேன் என்று 3 நாட்களுக்கு முன்பு ஒன்றிய அமைச்சர் கூறுகிறார்.

    அரசியலமைப்பு சட்டத்தில் மும்மொழி கொள்கை எங்கு உள்ளது. தேசிய கல்விக்கொள்கைக்கும் நமக்கு ஒவ்வொரு வருடமும் சேர வேண்டிய கல்வி நீதிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.

    தமிழக பாஜக தலைவர் வெளிநாட்டில் 6 மாத காலம் படித்துவிட்டு இப்போது பொய்யாக பேசி வருகிறார். அவர் தனது கையில் ACER அறிக்கை என்ற ஒன்றை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை விட உ.பி.யும் பீகாரும் சிறப்பாக இருக்கிறது என்று பேசுகிறார். அந்த ACER அறிக்கை பாஜகவின் ஒரு அஜெண்டா தான்.

    உத்தர பிரதேசத்தில் 25,000 அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு, 15,000 தனியார் பள்ளிகளை திறந்தார்கள். அதையேதான் தமிழ்நாட்டிலும் செய்ய முயற்சிக்கிறார்கள்.

    நம் வரிப்பணத்தில் 1 ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான் ஒன்றிய அரசு தருகிறது. இது என்ன உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? என்று எக்ட்டதற்கு உங்களுக்கு கோவம் வந்ததே, இப்போது கேட்கிறோம் ரூ.2,151 கோடி உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஆகவே எங்கள் பணத்தை எங்களிடம் கொடுங்கள்" என்று தெரிவித்தார்.

    • பிஎம்ஸ்ரீ பள்ளியை நாங்கள் திறக்க முடியாது என்பதை வைத்துக் கொண்டு நிதி தர மறுக்கிறது.
    • ஏற்கனவே நடைமுறையில் உள் எஸ்எஸ்ஏ நிதியை நிறுத்திவைப்பது பிளாக்மெயில் நடவடிக்கை.

    மும்மொழி கொள்கைக்கு எதிராக தமிழகத்தில் இன்று திமுக கூட்டணி கட்சிகள் மத்திய அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது மும்மொழி கொள்கை மற்றும் பள்ளி கல்வித்துறைக்கு நிதி விடுவிக்காதது குறித்த கேள்விக்கு திருமாவளவன் பதில் அளித்து கூறியதாவது:-

    இந்தி பேசாத பிற மாநிலங்களில் இந்தியை கட்டாயமாக திணிப்பது ஏற்புடையது அல்ல. தமிழகத்தில் ஏற்கனவே இருமொழி கொள்கை செயல்படுத்துகிற அரசு இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியும். பிஎம்ஸ்ரீ பள்ளியை நாங்கள் திறக்க முடியாது என்பதை வைத்துக் கொண்டு, ஏற்கனவே நடைமுறையில் உள் எஸ்எஸ்ஏ நிதியை நிறுத்திவைப்பது பிளாக்மெயில் நடவடிக்கை. அச்சுறுத்தும் நடவடிக்கை. இதை இந்திய அரசு கைவிட வேண்டும். நிதியை தர வைப்போம். தர வைப்பதற்கான வகையில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.

    இவ்வாறு கூறினார்.

    மேலும் கண்டன பொதுக்கூட்டத்தில் "தமிழ்நாடு மீண்டும் ஒரு மொழிப்போராட்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படும் என்று மத்திய பாஜக அரசை எச்சரிக்கிற அறப்போராட்டம்தான் இது" என்றார்.

    • தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை விட தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகமாக உள்ளனர்.
    • மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் தமிழ்மொழி என்பது கட்டாயம் அல்ல.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பாஜக அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணாமலை கூறியதாவது:-

    * மத்திய அரசு இந்தியை திணிப்பதாக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

    * இந்தி திணிக்கப்படவில்லை. யாரும் திணிக்கமாட்டார்கள். இதில் பாஜக தெள்ளத்தெளிவாக உள்ளது. பிரதமர் மோடியும் தெள்ளத்தெளிவாக உள்ளார்.

    * புதிய கல்விக்கொள்கை பரிந்துரையை பிரதமர் மோடியிடம் அளிக்கும்போது முதல் மொழி தாய்மொழி, 2-வது பாடம் ஆங்கிலம், 3-வது மொழி இந்தி என இருந்தது. அதை பிரதமர் மோடி 3-வது மொழியாக இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு மொழியை படிக்க வேண்டும் எனச் சொன்னார்.

    * ஆனால் திமுக அமைச்சர்கள் மும்மொழிக் கொள்கை என்றால் இந்தி திணிப்பு என்ற தவறான பிரசாரத்தை முன் வைக்கிறார்கள்.

    * தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை விட தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகமாக உள்ளனர். தனியார் பள்ளில் 56 லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    * மெட்ரிக்குலேசனில் தமிழ்மொழி என்பது கட்டாயம் அல்ல. தெலுங்கு, அரபு, மலையாளம், கன்னடம், குஜராத், இந்தி, பரெஞ்ச், உருது போன்ற மொழிகள் உள்ளது.

    * 56 லட்சம் மாணவர்கள் வேறொரு திட்டத்தில் போய் கொண்டிருக்கிறார்கள். அரசு பள்ளியில் படிக்கும் 52 லட்சம் மாணவர்களை மட்டும் கட்டாயமாக இருமொழிகளை படிக்க வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

    * இதனால் அரசு பள்ளியில் இருந்து தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அதிகமாகிறார்கள்.

    * தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மார்க்கெட் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய்.

    * மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு செல்வ வேண்டும் என்பதால் அரசு பள்ளிகளில் இருமொழி கொள்கைகளை வைத்திருக்கிறார்களா? எனக் கேள்வி கேட்கிறேன்.

    * நடிகர் விஜய் சிபிஎஸ்சி பள்ளிக் கூடம் நடத்தி வருகிறார். 2017-ல் இருந்து 2052 வரை விஜய் தனது இடத்தை ஒரு அறக்கட்டளைக்கு லீஸ்க்கு கொடுத்துள்ளார். அந்த அறக்கட்டளை எஸ்.ஏ. சந்திரசேகர் பெயரில் ரிஜிஸ்டர் ஆகியுள்ளது. இந்த அறக்கட்டளை படூரில் விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் பள்ளி நடத்தி வருகிறது.

    * அன்பில் மகேஷ் பிள்ளை பிரெஞ்ச் படிக்கிறது. அரசியல் தலைவர்கள் சிபிஎஸ்சி பள்ளி நடத்துகிறார்கள். அரசியல் கட்சி தலைவர்கள் பிள்ளைகள் பிரெஞ்ச் படிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது என்ன விதத்தில் அரசுப் பள்ளி மாணவர்களை இரண்டு மொழியில் மட்டும் படிக்க சொல்கிறார்கள்.

    * கலாநிதி வீராசாமி நடத்தும் மெட்ரிக் பள்ளியில் ஆங்கிலம் கட்டாயம். அதன்பின் தமிழ் உள்பட ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    * 30 லட்சம் மாணவர்கள் மும்மொழிக்கொள்கையை படிக்கிறார்கள் நான் கூறியதற்கு ஆதாரம் இல்லை என சொல்கிறார்கள். அப்படி என்றால் அரசு இவ்வளவு மாணவர்கள் என வெள்ளை அறிக்கை வெளியிடட்டும்.

    * 3-வது மொழி இந்தி வேண்டாம் என்று சொன்னால், வேறு ஏதாவது ஒரு மொழியை 3-வது மொழியாக படியுங்கள் என சொல்கிறோம்.

    * அரசு பள்ளியில் படிப்பவர்கள் போஸ்ட் அடித்து ஒட்ட வேண்டும் என டிராமா போடுகிறார்கள். உங்களுக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

    • தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் கஞ்சா வணிகம் தடையின்றி நடைபெறுகிறது.
    • நாளுக்கு நாள் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை.

    கோவையில் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் 7 பேர் சேர்ந்து 17 வயது சிறுமியை விடுதி அறைக்கு வரவழைத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் பெருகி வருவதும், அதைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்காததும் கடுமையாக கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கோவையில் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் 7 பேர் சேர்ந்து 17 வயது சிறுமியை விடுதி அறைக்கு வரவழைத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர் என்று வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் பெருகி வருவதும், அதைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்காததும் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் கஞ்சா வணிகம் தடையின்றி நடைபெறுகிறது. கஞ்சா உள்ளிட்ட அனைத்துப் போதைப் பொருட்களுக்கும் அடிமையாகிவிட்ட இளைய சமுதாயம், கொடூரமான குற்றங்களைக்கூட எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மிகவும் சாதாரணமாக செய்யும் மனநிலைக்கு வந்திருக்கிறது. இன்னொருபுறம் தமிழ்நாட்டில் எந்தக் குற்றங்களை வேண்டுமானாலும் செய்துவிட்டு, தண்டனையில்லாமல் தப்பித்துக்கொள்ளலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இந்தச் சூழல் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகுவதற்குக் காரணமாகும். தமிழக அரசு, காவல்துறை ஆகியவற்றின் தோல்வியையே இக்கொடிய நிகழ்வு காட்டுகிறது.

    தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகுவதற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம்தான் காரணம் என்பதால், அதன் புழக்கத்தைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நான் வலியுறுத்தி வருகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நான் நேரில் சந்தித்தும் இதை வலியுறுத்தியுள்ளேன். ஆனால், நாளுக்கு நாள் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை.

    தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவரும் வேகத்தைப் பார்த்தால், பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியுமா? பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் குழந்தைகளை அச்சமின்றி அனுப்பி வைக்க முடியுமா? என்ற ஐயம் எழுகிறது. மக்கள் மத்தியில் நிலவும் இந்த ஐயமும், அச்சமும் போக்கப்படவில்லை என்றால், பெண் கல்வி பாதிக்கப்படுவது உட்பட மோசமான விளைவுகள் ஏற்படும். அத்தகைய விளைவுகள் ஏற்படுவதை தடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை ஆகும்.

    கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் கஞ்சா விற்பனை நடைபெறவில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். காவல்துறையில் உள்ள போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவை வலுப்படுத்தி, போதைப் பொருள் நடமாட்டத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அன்புமணி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் அனைத்து நலத்திட்டங்களும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • பங்குத்தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி அன்னபூர்ணா தேவிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:

    தமிழ்நாட்டில் அனைத்து நலத் திட்டங்களும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு நிதியுதவி வழங்கும் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்களிப்பு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது.

    பெரும்பாலான நேர்வுகளில், ஒன்றிய அரசின் நிதிப்பங்கு காலாண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிலோ மட்டுமே வழங்கப்படுகிறது.

    நிதியாண்டின் முடிவிற்குள் ஒன்றிய அரசு ஒதுக்கும் தொகையை மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்குக் குறுகிய காலத்திற்குள் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.

    பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்னும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 304 கோடி ரூபாயில், ஒன்றிய அரசின் பங்குத் தொகையான 184 கோடி ரூபாய் இதுநாள் வரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் உரிய காலத்தில் வரவு வைக்க இயலாமல் உள்ளது.

    இன்றைய தேதியில், ஒற்றை ஒருங்கிணைப்பு முகமை (Single Nodal Agency) கணக்குகளில் உள்ள 576.22 கோடி ரூபாயில் இந்த நிதியாண்டு முடிவதற்குள் ரூ.482.80 கோடி பயன்படுத்தப்படும் என்றும், மீதமுள்ள தொகை ஒன்றிய அரசின் பங்காக அடுத்த நிதியாண்டுக்குக் கொண்டு செல்லப்படும்.

    இந்நிலையில், தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திட ஏதுவாக, ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான பங்குத்தொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள் அதாவது அந்தந்த நிதியாண்டுக்குள்ளேயே விடுவித்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    ×