என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழக அரசும், காவல்துறையும் இந்தக் கொடுமைகளை கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
    • தமிழக அரசு இனியும் இல்லாத சட்டம் - ஒழுங்கை இருப்பதாக வீண் பெருமை பேசாமல் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    திருப்பூரில் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக காத்திருந்த இளம்பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் குழந்தை கண் எதிரில், மூன்று பேர் கொண்ட கும்பலால் கத்திமுனையில் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன.

    கோவையில் 17 வயது சிறுமியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியும், பதற்றமும் விலகுவதற்கு முன்பாகவே திருப்பூரில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது என்பதையே காட்டுகிறது.

    தமிழ்நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகாத நாட்களே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும், தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு பெண் மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய தமிழக அரசும், காவல்துறையும் இந்தக் கொடுமைகளை கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

    பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது குறித்து குற்றச்சாட்டுகள் எழும் போதெல்லாம் குற்றவாளிகளை கைது செய்து விட்டதாகக் கூறி அரசும், காவல்துறையும் மார்தட்டிக் கொள்கின்றன. பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடமாடுவதை உறுதி செய்ய வேண்டியது தான் அரசு மற்றும் காவல்துறையின் பணி என்பதையும், குற்றம் செய்தவர்களை கைது செய்வது என்பது இழைக்கப்பட்ட கொடுமைக்கு தேடப்படும் பரிகாரம் தானே தவிர அதில் பெருமைப்பட்டுக் கொள்வதற்கு எதுவும் இல்லை என்பதையும் திராவிட மாடல் ஆட்சியாளர்கள் எப்போது உணர்வார்கள்? என்பது தான் தெரியவில்லை.

    திருப்பூரில் இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. வெளி மாநிலத்தவர் அதிகம் பணி செய்யும் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறும் நிலையில், வெளி மாநிலத்தவரை கண்காணிக்கவும், சுற்றுக்காவலை வலுப்படுத்தவும் காவல்துறையும், அரசும் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தக் கொடுமை நடந்திருக்காது.

    தமிழக அரசு இனியும் இல்லாத சட்டம் - ஒழுங்கை இருப்பதாக வீண் பெருமை பேசாமல் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் நடமாடுவதை உறுதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கார்ட்டூன் வெளியிட்டதற்காக இணையதளத்தை முடக்குகிறார்கள் என்றால் அது அவர்களது சர்வாதிகாரத்தை வெளிகாட்டுகிறது.
    • எங்கள் தலைமை ஏற்றுக்கொண்டு யார் வருகிறார்களோ அவர்களோடு நல்ல முறையில் வலுவான கூட்டணி அமையும்.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் அ.தி.மு.க. சார்பில் பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அப்போது கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமெரிக்காவில் இருக்கின்ற சட்டவிரோதமாக குடியேறியதாக இந்திய மக்களை வெளியேற்றுகின்றபோது, கை, கால்கள் கட்டப்பட்டு அனுப்பப்பட்டதாக செய்தி வந்ததும் உடனடியாக இந்திய அரசு பதில் சொல்லி இருக்க வேண்டும்.

    குறிப்பாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சொல்லி இருக்க வேண்டும், மத்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். அமெரிக்க விஷயத்தில் பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். கார்ட்டூன் வெளியிட்டதற்காக இணையதளத்தை முடக்குகிறார்கள் என்றால் அது அவர்களது சர்வாதிகாரத்தை வெளிகாட்டுகிறது.

    தமிழகம் தேசிய கல்வி கொள்கையை முழுமையாக ஏற்று கொண்டால்தான் தமிழகத்திற்கு முழுமையான நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியதற்கு இந்தி பேசாத மாநிலங்களை முழுவதையும் மிரட்டுகின்ற வகையில் கூறியிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என கூறினார்.

    அ.தி.மு.க. கொள்கை வேறு, மற்ற கட்சிகள் கொள்கை வேறு, அ.தி.மு.க. மதச்சார்பற்ற கொள்கை உடையது.

    அனைத்து மதங்களையும் ஒரு முகமாக பார்க்கின்ற கட்சி, எங்கள் தலைமை ஏற்றுக்கொண்டு யார் வருகிறார்களோ அவர்களோடு நல்ல முறையில் வலுவான கூட்டணி அமையும் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பகல் நேரத்தில் கடும் வெயில் சுட்டெரிக்கிறது.
    • கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியசாக குறைந்தது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பல இடங்களிலும் இன்னும் குளிர்காலம் போல கடும் குளிர் நிலவுகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காலையிலும் கடும் பனி மூட்டம் நிலவுகிறது.

    சில இடங்களில் காலை நேரங்களிலும் குளிர்ச்சி யான கால நிலை உள்ளது. அதேநேரம், விரைவில் கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் பகல் நேரத்தில் கடும் வெயில் சுட்டெரிக்கிறது.

    நேற்றைய நிலவரப்படி கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 35.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. சென்னை மற்றும் மாநிலத் தின் சில பகுதிகளில் பகல்நேர வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கோடைகாலம் வரும் போது அதிகப்பட்ச வெப்ப நிலை சீராக உயரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.

    சென்னை வானிலை ஆராய்ச்சி மைய முன்னாள் துணை இயக்குனர் ராஜ் கூறுகையில், நகரின் மையப்பகுதிகளில் வடகிழக்கு காற்று கூறுகள் இல்லாதது மற்றும் நகர்ப்புற வெப்பத்தின் தாக்கம் ஆகியவை கடந்த 6 ஆண்டுகளில் இயல்பான அல்லது குறைந்த வெப்பநிலைக்கு பங்களித்த காரணங்களாக உள்ளது என்றார்.

    2011 மற்றும் 2014-க்கு இடையில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக இரவு நேர வெப்பநிலை 20 டிகிரி செல்சியசாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக இரவு வெப்பநிலை சாதாரணமாக 20 டிகிரி செல்சியசுக்கு மேல் உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் குறைந்தபட்ச வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியசாக குறைந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேற்று நெய்வேலியில் இருந்து வீட்டுக்கு வந்த அசோக்குமார் மனைவியுடன் தகராறு செய்தார்.
    • தாய் தவமணி மற்றும் மகள் அருள்குமாரி ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் கெங்கவல்லி அருகே உள்ள 74. கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருபவர் அசோக்குமார் (வயது 42). இவரது மனைவி தவமணி (38). இவர்களுக்கு வித்யதாரணி (13), அருள்குமாரி (12), ஆகிய 2 பெண் குழந்தைகளும், அருள் பிரகாஷ் (5) என்ற மகனும் உள்ளனர்.

    அசோக்குமார் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று நெய்வேலியில் இருந்து வீட்டுக்கு வந்த அசோக்குமார் மனைவியுடன் தகராறு செய்தார். இன்று அதிகாலை வேளையில் மனைவி தவமணி, குழந்தைகள் வித்யதாரணி, அருள்குமாரி, அருள் பிரகாஷ் ஆகியோர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது குடிபோதையில் இருந்த அசோக்குமார் அவர்களை கண்மூடித்தனமாக வெட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தவமணி மற்றும் குழந்தைகள் அப்பா விட்டு விடுங்கள்... அப்பா விட்டு விடுங்கள்... என கெஞ்சினர். ஆனால் அசோக்குமார் கோபத்தில் மனைவி மற்றும் தனது குழந்தைகளை கொடூரமாக வெட்டினார். தன் கண் முன்னே கணவர், குழந்தைகளை வெட்டுவதை பார்த்து தவமணி கதறி அழுதார். அப்போது குழந்தைளும் அம்மா, அம்மா என கதறி அழுதது.

    அசோக்குமாரை தவமணி தடுக்க முயன்றார். அவரையும் சரமாரியாக வெட்டினார். கணவரிடம் இருந்து உயிர்பிழைக்க தனது குழந்தைகளுடன் தவமணி தப்பி ஓட முயன்றார். ஆனால் அசோக்குமார் விரட்டி விரட்டி அவர்களை வெட்டினார். இதில் தவமணி, குழந்தைகள் வித்யதாரணி, அருள்குமாரி, அருள் பிரகாஷ் ஆகிய 4 பேரும் வெட்டு காயங்களுடன் வீட்டில் ஆங்காங்கே சுருண்டு விழுந்தனர்.

    4 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக தவமணியின் பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதைக்கேட்டு கதறியபடி பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து வந்து பார்த்து கதறி அழுதனர்.

    அரிவாள் வெட்டில் மகள் வித்யதாரணி, மகன் அருள் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது தெரியவந்தது. தாய் தவமணி மற்றும் மகள் அருள்குமாரி ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இருவரையும் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு தாய் மற்றும் மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தும் ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஸ்குமார் மற்றும் கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகள் வித்யதாரணி, அருள் பிரகாஷ் ஆகியோர் உடல்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் இந்த கொலைகளை செய்த அசோக்குமாரை பிடித்து சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதற்கட்ட விசாரணையில், அசோக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இவர் கடந்த 6 ஆண்டுகளாக நெய்வேலியில் தனியாக வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டுவதில் கிடைக்கும் வருமானத்தை மது குடித்து செலவழித்து வந்தார். குடும்ப செலவுக்கு பணம் கொடுப்பதில்லை. இதனால் தவமணிக்கும், அசோக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    கணவர் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காததால் தவமணி தனது குழந்தைகளை கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் பணத்தில் 3 குழந்தைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார். இந்த நிலையில் அசோக்குமார் குடிபோதையில் வீட்டுக்கு வந்து அதிகாலை நேரத்தில் தூங்கி கொண்டிருந்த மனைவி மற்றும் குழந்தைகளை வெட்டி சாய்த்துள்ளார் என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து அசோக்குமார் தலையில் காயம் ஏற்பட்டதாக கெங்கவல்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளிகளில் மாணவ மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய, ஆலோசனைக் குழுக்கள் அமைப்பதாகச் சொல்லி மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன.
    • பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டது.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில், மாணவிகள் 7 பேருக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளி உதவித் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும், தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

    பள்ளிகளில் மாணவ மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய, ஆலோசனைக் குழுக்கள் அமைப்பதாகச் சொல்லி மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. எந்தப் பள்ளிகளிலும் இந்தக் குழுக்கள் செயல்பாட்டில் இல்லை என்பதையே, தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவது காட்டுகிறது. குழந்தைகள் பாதுகாப்புக்கான தேசிய அவசர உதவி எண் 1098க்கு அழைத்ததால் மட்டுமே, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

    பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டது. இத்தனை தொடர் குற்றங்களுக்குப் பிறகும், பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அமைச்சராகத் தொடரத் தகுதியோ, தார்மீக உரிமையோ இல்லை.

    உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியிலிருந்து, அன்பில் மகேஷ் விலக வேண்டும். முதலமைச்சர் உடனடியாக, பள்ளிக்கல்வித்துறைக்குத் திறமையான, குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட வேறு ஒருவரை அமைச்சராக நியமித்து, பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.



    • ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் மற்றும் வீடுகளை அகற்றும் பணி ஒரு வாரமாகவே நடந்து வருகிறது.
    • திருவள்ளூர் தெற்கு மாவட்ட இளைஞரணி கட்டிடத்தை நெடுஞ்சாலை துறையினர் இடித்து அகற்றினர்.

    திருவள்ளூரில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த தமிழக வெற்றிக்கழகத்தின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட இளைஞரணி கட்டிடத்தை நெடுஞ்சாலை துறையினர் இடித்து அகற்றினர்.

    அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் மற்றும் வீடுகளை அகற்றும் பணி ஒரு வாரமாகவே நடந்து வருகிறது. இந்த நிலையில், த.வெ.க. அலுவலகத்தையும் நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி மூலம் இடித்தனர்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

    • நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,760-க்கும் கிராம் ரூ.7,970-க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வார தொடக்க நாளான நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.400-ம் நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,760-க்கு விற்பனையானது.

    இதனைத் தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,035-க்கும் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,280-க்கும் விற்பனையாகிறது. நாள்தோறும் உயர்ந்து வரும் தங்கம் விலையால் மக்கள் கவலையில் உள்ளனர்.

    கடந்த 5 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    18-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,760

    17-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    16-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.63,120

    15-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.63,120

    14-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,920

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    18-02-2025- ஒரு கிராம் ரூ.108

    17-02-2025- ஒரு கிராம் ரூ.108

    16-02-2025- ஒரு கிராம் ரூ.108

    15-02-2025- ஒரு கிராம் ரூ.108

    14-02-2025- ஒரு கிராம் ரூ.108

    • இளைஞர் முன்பதிவில்லா டிக்கெட் வாங்கிக்கொண்டு தூங்குவதற்காக முன்பதிவு பெட்டிக்கு சென்றுள்ளார்.
    • கைதான தண்டாயுதபாணி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கைதான தண்டாயுதபாணி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இளைஞர் முன்பதிவில்லா டிக்கெட் வாங்கிக்கொண்டு தூங்குவதற்காக முன்பதிவு பெட்டிக்கு சென்றுள்ளார்.

    அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததாலும், தூங்க விடாமல் பயணிகள் தொந்தரவு செய்ததாலும் எரிச்சல் அடைந்து ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக போலீசாருக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

    இதையடுத்து மதுபோதையில் இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

    • தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்களது பிறந்த தினம் இன்று.
    • அடுத்த தலைமுறைக்கு தமிழ் இலக்கியங்களின் பெருமைகளை எடுத்துச் சென்றவர்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    அழிவின் விளிம்பிலிருந்த ஓலைச்சுவடியிலான தமிழ் இலக்கியங்களை நூல் வடிவத்தில் அச்சிட்டு, தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகெங்கும் அறியச் செய்த, தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்களது பிறந்த தினம் இன்று.

    மூவாயிரத்துக்கும் அதிகமான ஓலைச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும், பண்டைத் தமிழ் இலக்கியங்களையும் மீட்டு, அச்சிட்டு வெளியிட்டவர். அடுத்த தலைமுறைக்கு தமிழ் இலக்கியங்களின் பெருமைகளை எடுத்துச் சென்றவர்.

    தமிழ் மொழியைக் காத்து வளர்த்த தமிழ்த் தாத்தா உ.வெ.சாமிநாத ஐயர் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் என தெரிவித்துள்ளார். 



    • 20 பேரல்களில் காலாவதியான ரசாயனங்களை கொட்டி சென்றுள்ளனர்.
    • அதிக திறன் கொண்ட கெமிக்கல் கழிவுகள் இரவில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் ஊர் முழுவதும் புகை சூழ்ந்தது.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் விவசாய நிலத்தில் காலாவதியான ரசாயனங்களை மர்மநபர்கள் கொட்டி சென்றுள்ளனர். 20 பேரல்களில் காலாவதியான ரசாயனங்களை கொட்டி சென்றுள்ளனர்.

    அதிக திறன் கொண்ட கெமிக்கல் கழிவுகள் இரவில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் ஊர் முழுவதும் புகை சூழ்ந்தது. இதனால் மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. மூச்சு விடுவதில் சிரமப்பட்டனர்.

    கெமிக்கல் பாக்ஸ் மற்றும் கெமிக்கல் பேரல்களை விவசாய நிலங்களில் கொட்டி சென்றுள்ளதாகவும் ரசாயனங்களை கொட்டி சென்றது யார் என்று தெரியவில்லை என்றும் மக்கள் தெரிவித்தனர்.

    • குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்தினர் திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • பெருமாளை போலீசார் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    அரிமளம்:

    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் 400-க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் பெருமாள் (வயது 58). இவர் அப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பொறுப்பையும் வகித்து வருகிறார். இந்த நிலையில் அவர், அந்த பள்ளியை சேர்ந்த மாணவிகள் 7 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரி வசந்தகுமார், சமூக நலத்துறை அதிகாரி கோகுலபிரியா, பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) குமார், கே.புதுப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, திருமயம் இன்ஸ்பெக்டர் பத்மா மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே இந்த சம்பவம் பற்றிய தகவல் அப்பகுதியில் பரவியதால் பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டனர். இதையடுத்து பாதுகாப்பு பணிக்காக அரிமளம் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் அதிகாரிகள் தனித்தனியாக விசாரித்தனர். விசாரணையில் 7 மாணவிகளும், உதவி தலைமை ஆசிரியர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினர். மாணவிகளின் வாக்குமூலத்தை வீடியோவாக அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். இதற்கிடையே குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்தினர் திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து அவரை நேற்று கைது செய்தனர்.

    பின்னர் அவரை புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    இதனிடையே, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியர் பெருமாளை சஸ்பெண்ட் செய்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 

    • 10 கிலோ எடையுள்ள உடைமைகளை பயணிகள் இலவசமாக எடுத்துச்செல்லலாம்.
    • கூடுதலாக உடைமைகளை எடுத்துச்செல்ல கட்டணம் செலுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது. வானிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு(2024) நவம்பர் மாதம் 18-ந் தேதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    மீண்டும் கப்பல் போக்குவரத்து கடந்த மாதம்(ஜனவரி) முதல் வாரத்தில் தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி தொடர்பான பிரச்சனைகள் நீடித்து வந்ததால் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    பிரச்சனைகள் அனைத்துக்கும் விரைவில் தீர்வு காணப்பட்டு கப்பல் சேவை தொடங்கப்படும் என்று கப்பல் நிறுவனம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து வருகிற 22-ந் தேதி(சனிக்கிழமை) மீண்டும் தொடங்கப்படும் என கப்பலை இயக்கும் சுபம் நிறுவனத்தின் தலைவர் சவுந்தரராஜ் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நாகை-இலங்கை இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் கப்பல் போக்குவரத்து நடைபெறும். பயணிகள் www.sailsubham.com என்ற இணையதளத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். 10 கிலோ எடையுள்ள உடைமைகளை பயணிகள் இலவசமாக எடுத்துச்செல்லலாம். கூடுதலாக உடைமைகளை எடுத்துச்செல்ல கட்டணம் செலுத்த வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

    ×