என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
    • கடந்த ஒரு மாதமாக இரு தரப்புக்குமான விவாதம் நடைபெற்று வந்தது.

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ்குமார், வசந்தராஜன், மணிவண்ணன், அருளானந்தம், பாபு, அருண்குமார் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் உள்ளனர்.

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டது.

    கடந்த ஒரு மாதமாக இரு தரப்புக்குமான விவாதம் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டுள்ளார்.

    • சேவியர் காலனி பூங்கா ஆகியவற்றை மேயர் ராமகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    • உதவி பொறியாளர் மனோகர், சுகாதார ஆய்வாளர் பெருமாள், துப்புரவு கண்காணிப்பாளர் ஜானகிராமன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் மண்டலத்தில் மேயர் ராமகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர், 50-வது வார்டு மாட்டு சந்தை, குடிசை பள்ளி அருகில் உள்ள நுண் உரமாக்கும் மையத்தில் தேங்கி உள்ள குப்பைகள், கழிவுகளை அப்புறப்படுத்தவும், ஆமீம்புரம் 7-வது தெருவில் கழிவுநீர் ஓடை அமைக்கும் பணியை உடனே தொடங்கவும், அப்பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் கூடுதல் கட்டிடம் விரைவில் அமைத்திட நடவடிக்கை எடுக்கவும், பாதாள சாக்கடை பணிகளை விரைந்து நடத்திடவும், கழுவுநீர் ஒடைகளை முழுமையாக சுத்தம் செய்யவும், நேதாஜி ரோடு பாதாள சாக்கடை உடைப்பு குழாய்களை மாற்றிட நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் 52-வது வார்டு சேவியர் காலனி ஆர்.சி. சர்ச் தெருவில் கடந்த மழை வெள்ளத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் தேங்கியது. இன்று அதனை பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர் கழிவு நீர், மற்றும் மழை காலங்களில் மழை நீர் சீராக செல்லும் வகையில் சேவியர் காலனியில் இருந்து புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள வேய்ந்தான்குளத்திற்கு செல்லும் வகையில் பெரிய கால்வாய் அமைத்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து சேவியர் காலனி பூங்கா ஆகியவற்றை மேயர் ராமகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது மேலப்பாளையம் மண்டல தலைவர் கதிஜா இக்லாம் பாசிலா, மேலப்பாளையம் உதவி கமிஷனர் சந்திரமோகன்,50-வது வார்டு கவுன்சிலர் ரசூல் மைதீன், 52-வது வார்டு கவுன்சிலர் நித்திய பாலையா, கவுன்சிலர்கள் சுந்தர், வில்சன் மணிதுரை, மேலப்பாளையம் பகுதி செயலாளர் துபாய் சாகுல், தி.மு.க. மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி, இளநிலை பொறியாளர் ஜெய கணபதி, உதவி பொறியாளர் மனோகர், சுகாதார ஆய்வாளர் பெருமாள், துப்புரவு கண்காணிப்பாளர் ஜானகிராமன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

    • ஆங்கில நாளேடு வெளியிட்ட செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பதிவு வெளியிட்டுள்ளார்.
    • மக்களவை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம், தமிழ்நாடு 17% உயர் ரத்த அழுத்தம், 16.7% நீரிழிவு நோயும் கட்டுப்பாடு.

    மக்களை தேடி மருத்துவம் திட்டம் இந்தியா முழுவதும் பொது சுகாதாரத்திற்கான அடையாளமாக மாறியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து ஆங்கில நாளேடு வெளியிட்ட செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மக்களைதேடிமருத்துவம் வெறும் சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் - அது பலனையும் அளித்து வருகிறது.

    மக்களவை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம், தமிழ்நாடு 17% உயர் ரத்த அழுத்தம், 16.7% நீரிழிவு நோயும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பொது சுகாதார வெற்றி எவ்வாறு அளவிடப்படுகிறது என்பதை மறுவடிவமைக்கிறது.

    மக்களவை தேடி மருத்துவம் திட்டத்தில் அவர்களுக்காகக் காத்திருக்காமல் மக்களைச் தேடிச் சென்றடைவதன் மூலம் வெற்றிப்பெற்றுள்ளோம். இத்திட்டம் இந்தியா முழுவதும் பொது சுகாதாரத்திற்கான அடையாளமாக மாறியுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கூடங்குளம் அருகே உள்ள உலகரட்சகர்புரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தபோது அதில் சுமார் 2 டன் அளவு பீடி இலை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர கிராமங்கள் வழியாக படகுகளில் இலங்கைக்கு சட்டவிரோதமாக பீடி இலை, கடல் அட்டை, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தப்படுபவதை தடுக்க நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்திலும் கிழக்கு கடற்கரை சாலையில் கூடங்குளம் பகுதியில் சோதனை சாவடி அமைத்து நெல்லை மாவட்ட போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கூடங்குளம் கடல் வழியாக படகில் தடை செய்யப்பட்ட பீடி இலையை ஒரு கும்பல் கடத்துவதற்கு முயற்சி செய்வதாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனே அவரது தலைமையின் கீழ் இயங்கும் தனிப்படை கூடங்குளம் பகுதிக்கு விரைந்தது.

    கூடங்குளம் அருகே உள்ள உலகரட்சகர்புரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் அந்த வழியாக வந்த மினிலாரியை தடுத்து நிறுத்தினர். டிரைவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தபோது அதில் சுமார் 2 டன் அளவு பீடி இலை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது கூடங்குளத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு பீடி இலையை அனுப்பி வைக்க கொண்டு செல்வதாக அவர் தெரிவித்தார்.

    அந்த நேரத்தில் ஒரு காரில் வேகமாக வந்த 4 பேர் கும்பல் போலீசாரை கண்டதும் காரை திருப்பிக்கொண்டு தப்ப முயன்றது. அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தபோது அந்த கும்பல் தான் பீடி இலையை இலங்கைக்கு கடத்த முயன்றது என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பீடி இலையுடன் லாரியையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் போலீசாரின் பிடியில் சிக்கிய 5 பேரையும் கூடங்குளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில், அவர்கள் கூத்தங்குழி கிராமத்தை சேர்ந்த ஜெனா(வயது 70), தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சண்முகம்(25), ஏரலை சேர்ந்த சந்தோஷ்குமார்(23), தூத்துக்குடியை சேர்ந்த அந்தோணி ராஜ்(36), வள்ளியூர் அருகே உள்ள தளபதி சமுத்திரத்தை சேர்ந்த முத்துக்குமார்(42) என்பது தெரியவந்தது.

    அந்த கும்பல் கடல் வழியாக கடத்த முயன்ற பீடி இலையின் இலங்கை மதிப்பு ரூ.50 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • விவசாயி பணிகளை முடிந்த பின்பு ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கம்.
    • பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கணக்கான கிராம மக்கள் பங்கேற்றனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா சருகுவலையபட்டி ஊராட்சியை சேர்ந்தது அரியூர்பட்டி. இங்கு மோகினி சாத்தான் கண்மாய் உள்ளது. இப்பகுதியில் விவசாயிகள் தங்கள் விவசாயி பணிகளை முடிந்த பின்பு ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டும் மீன்பிடித் திருவிழா விவசாய பணிகள் முடிந்த பின்பு இன்று காலை 5 மணி அளவில் தொடங்கியது. இந்த மீன் பிடி திருவிழாவில் பங்கேற்க சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் மட்டுமன்றி சிவகங்கை, திண்டுக்கல் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கணக்கான கிராம மக்கள் பங்கேற்றனர்.

    முதலில் கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளைத் துண்டு வீச, சுற்றி இருந்த மக்கள் ஒரே நேரத்தில் போட்டி போட்டு இறங்கி தங்கள் கொண்டு வந்திருந்த கச்சா, வலை, குத்தா போன்ற ஏராளமான மீன்பிடி சாதனங்களை பயன்படுத்தி மீன்களை போட்டி போட்டு பிடித்தனர்.

    இதில் கெண்டை, கெளுத்தி, கட்லா, ரோகு ஜிலேபி, வீரா மீன்கள் என சிறிய ரக மீன்கள் முதல் 2 கிலோ, 3 கிலோ வரை உள்ள பெரிய மீன்கள் பிடிபட்டது. பிடித்த மீன்களை இப்பகுதி மக்கள் விற்பனை செய்யாமல் தங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து சமைத்து சாமி கும்பிட்டு சாப்பிடுவது வழக்கமாய் உள்ளது.

    இப்படி செய்வது மூலம் வருங்காலங்களில் மழை நன்றாக பெய்து விவசாயம் செழிக்கும் என்பதை பகுதி மக்களின் தொடர் நம்பிக்கையாக உள்ளது. இத்திருவிழாவில் ஜாதி மத பாகுபாடு இன்றி சமத்துவமாய் நடைபெறும் ஒரு சமத்துவ திருவிழாவாக நடைபெற்றது.

    • பலமுறை பணம் கேட்டும் அப்துல் முனாப் கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
    • தலைமறைவான முபாரக், குமார் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாஸ்கோ நகரை சோ்ந்தவர் அப்துல் முனாப்(வயது 45). தொழிலதிபரான இவர் பனியன் துணிகள் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் மங்கலத்தை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் சலாவுதீன், குமார் ஆகியோரிடமிருந்து அப்துல் முனாப் பனியன் துணிகள் வாங்கியுள்ளார்.

    பனியன் துணிகள் வாங்கியதற்காக தொகை ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். பலமுறை பணம் கேட்டும் அப்துல் முனாப் கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

    இந்த நிைலயில் அப்துல் முனாப்பை மாஸ்கோ நகரில் இருந்து காரில் சலாவுதீன்(40), முபாரக்(40), குமார்(38) ஆகிய 3 பேரும் கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் போில் வடக்கு போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து அப்துல் முனாப்பை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் சலாவுதீனை கைது செய்தனர். தலைமறைவான முபாரக், குமார் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தமிழகத்தில் 96 ஆயிரம் கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.

    தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப்பொருள் விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார்.

    அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    அதிமுக ஆட்சியில் எங்கும் குட்கா, எங்கும் போதைப்பொருள் என்ற நிலை இருந்தது.

    உயர் பதவியில் இருந்த காவலர்கள் கூட சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    தமிழகத்தில் 96 ஆயிரம் கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.

    போதைப்பொருள் ஒழிப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சிறந்த மாநிலமாக உள்ளது.

    குட்கா விற்கும் கடைகளை மூடி வருகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பண மோசடி வழக்கில் விசாரணையை விரைந்து நடத்த உத்தரவிட வேண்டும்.
    • செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும்.

    செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பான விசாரணையின்போது, செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை என்ற வாதத்தை ஏற்கிறோம். அந்த வகையில் புதிய கட்டுப்பாடு தேவையில்லை என நீதிபதிகள் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, விசாரணை முடியும் வரை செந்தில் பாலாஜி அமைச்சராகவோ அல்லது எந்த அரசு பதவிகளும் வழங்கக்கூடாது. டெல்லி முதல்வர் தலைமைச் செயலகம் செல்லக்கூடாது என உத்தரவிட்டதை போல செந்தில் பாலாஜிக்கும் உத்தரவிட வேண்டும். பண மோசடி வழக்கில் விசாரணையை விரைந்து நடத்த உத்தரவிட வேண்டும். செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில்,"அமலாக்கத்துறையின் வழக்கு முடிய 15 ஆண்டுகள் கூட ஆகலாம். அதுவரை எந்த பதவியும் வகிக்கக் கூடாதா? மீண்டும் அமைச்சராக முடியாது என உச்சநீதிமன்றம் கூற அதிகாரம் இல்லை" என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    மேலும், " லஞ்ச வழக்கில் விசாரணை முடியாமல் பண மோசடி வழக்கு விசாரணையை எப்படி தொடங்க முடியும் ? செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்றால் அவரின் ஜாமீனை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம் என்று நீதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வருகிற 3-ந்தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • சென்னையில் உள்ள சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. மே 28-ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும்.

    ஆனால் தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வருகிற 1-ந்தேதி வரை வெயில் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வருகிற 3-ந்தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் உள்ள சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் ஒருசில இடங்களில் வருகிற 1-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரும். 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மானியக் கோரிக்கைகளுக்கான விரிவான பதிலுரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தெரிவிக்கிறார்.
    • மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறையில் அடைக்கும் புதிய மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்திருந்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த மாதம் (மார்ச்) 14-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பட்ஜெட்டும், அதற்கு மறுநாள் (15-ந்தேதி) வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

    அதன் பிறகு இரு பட்ஜெட் மீதான விவாதம் 5 நாட்கள் நடைபெற்றது.

    இதன் தொடர்ச்சியாக மார்ச் 24-ந்தேதி முதல் சட்டசபைக் கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ் வொரு துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப் பட்டு அதன் மீது விவாதமும் அமைச்சர்களின் பதிலுரையும் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் இன்று காவல் துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்கான மானியக் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்திருந்தார். இதன் மீது சட்டசபையில் ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் பேசினார்கள். அவ்வப்போது குறுக்கிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

    இந்த மானியக் கோரிக்கைகளுக்கான விரிவான பதிலுரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தெரிவிக்கிறார். அப்போது காவல் துறை தீயணைப்பு துறைக்கான புதிய அறிவிப்புகளையும் வெளியிடுகிறார்.

    சட்டசபைக் கூட்டத் தொடரில் வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்திருந்தார்.

    அதே போல் மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறையில் அடைக்கும் புதிய மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்திருந்தார்.

    இதே போல் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, முத்துசாமி, மூர்த்தி கோவி. செழியன் ஆகியோரும் சட்ட மசோதாக்களை தாக்கல் செய்துள்ளனர். கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் கொண்டு வருவதற்கான மசோதாவும் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த மசோதாக்கள் அனைத்தும் நாளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. அத்துடன் சட்டசபைக் கூட்டம் நாளை முடிவடைகிறது.

    • துயரங்களை கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடே சாட்சி.
    • தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளைகள் குறைந்துள்ளது. 3,643 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சட்டசபையில் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கொள்ளை, கொலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்று தி.மு.க. அரசு மீது குற்றம்சாட்டினார்.

    இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * பொத்தாம் பொதுவாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டக்கூடாது.

    * அ.தி.மு.க. ஆட்சியின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி.

    * அவமான ஆட்சிக்கும், துயரமான ஆட்சிக்கும் அ.தி.மு.க. ஆட்சியே சாட்சி.

    * துயரங்களை கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடே சாட்சி.

    * இந்த ஆட்சியை பற்றி குறை சொல்வது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை.

    * தமிழ்நாட்டை புலம்ப வைத்ததுதான் அ.தி.மு.க. ஆட்சியுடைய சாதனை

    * தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளைகள் குறைந்துள்ளது. 3,643 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    * ஏ மற்றும் ஏ பிளஸ் ரவுடிகளின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    * தி.மு.க. ஆட்சி குறித்து பேச அ.தி.மு.க.விற்கு எந்தவிதமான தகுதியும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவையில் கோவில் அருகில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • காஷ்மீர் பிரச்சனையில் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும்.

    சென்னை:

    சட்டசபையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * தமிழ்நாட்டில் மதவாத எதிர்ப்பு சக்திகள் இருப்பதாக வானதி கூறியிருக்கிறார். எப்படி? எங்கு இருக்கிறது? என கூற வேண்டும்.

    * பொத்தாம் பொதுவாக பேசினால் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

    அப்போது பேசிய சபாநாயர் அப்பாவு, இந்தியாவில் மத பயங்கரவாதம் இருக்கிறது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறினார்.

    தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,

    * பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என வானதிக்கே தெரியும். பிரதமர் கூட சென்று பார்க்கவில்லை.

    * தமிழ்நாட்டை பொறுத்தவரை மதவாதம் உள்ளே நுழைய முடியாது.

    * கோவையில் கோவில் அருகில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * காஷ்மீர் மாதிரி இங்கே நடக்கக்கூடாது என வானதி பேசி உள்ளார், அப்படி தமிழகத்தில் நிச்சயமாக நடைபெறாது.

    * காஷ்மீர் விவகாரம் தெரிந்தவுடன் நீங்கள் எடுக்கக்கூடிய எந்த நடவடிக்கையாக இருந்தாலும் உறுதுணையாக இருப்போம் என்று கூறினேன்.

    * காஷ்மீர் பிரச்சனையில் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும்.

    * வானதி சீனிவாசன் பா.ஜ.க. தலைமையிடம் பேசி தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.

    * தமிழகத்திற்கான நிதியை பா.ஜ.க.விடம் இருந்து பெற்று தர தயவு செய்து தமிழக பா.ஜ.க.வினர் குரல் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×