என் மலர்
நீங்கள் தேடியது "Mahila Court"
- பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
- கடந்த ஒரு மாதமாக இரு தரப்புக்குமான விவாதம் நடைபெற்று வந்தது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ்குமார், வசந்தராஜன், மணிவண்ணன், அருளானந்தம், பாபு, அருண்குமார் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் உள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
கடந்த ஒரு மாதமாக இரு தரப்புக்குமான விவாதம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டுள்ளார்.
- போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த வசந்தா என்பவர் முபாராக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- தனியார் பள்ளி ஆங்கில ஆசிரியரான முபாராக்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை என்று செசன்ஸ் நீதிபதி சையத் பர்கத்துல்லா தீர்ப்பளித்தார்.
தருமபுரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மேட்டுபுலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் முபாராக் (வயது26). இவர் தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
அந்த பள்ளியில் பயின்று வந்த 14 வயது சிறுமிக்கு கடந்த 21.4.2022-ந் தேதியன்று முபாராக் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த வசந்தா என்பவர் முபாராக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போதைய மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி தருமபுரி மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் நேற்று மகிளா கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆங்கில ஆசிரியரான முபாராக்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை என்று செசன்ஸ் நீதிபதி சையத் பர்கத்துல்லா தீர்ப்பளித்தார்.
இதைத்தொடர்ந்து முபாராக்கை போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர்.
- ஞானசேகரனிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
- பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் மகிளா நீதிமன்றத்திற்கு மாற்ற கோரிக்கை.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஞானசேகரனுக்கு எதிராக ஏற்கனவே போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஞானசேகரன் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது குற்றப்பத்திரிகை நகல் அவரிடம் வழங்கப்பட்டது.
ஞானசேகரனுக்கு எதிராக பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தனர். இதனால் சைதாப்பேட்டை நீதிமன்றம் வழக்கை மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது.






