என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழ்நாட்டை பொறுத்தவரை மதவாதம் உள்ளே நுழைய முடியாது - முதலமைச்சர் திட்டவட்டம்
    X

    தமிழ்நாட்டை பொறுத்தவரை மதவாதம் உள்ளே நுழைய முடியாது - முதலமைச்சர் திட்டவட்டம்

    • கோவையில் கோவில் அருகில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • காஷ்மீர் பிரச்சனையில் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும்.

    சென்னை:

    சட்டசபையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * தமிழ்நாட்டில் மதவாத எதிர்ப்பு சக்திகள் இருப்பதாக வானதி கூறியிருக்கிறார். எப்படி? எங்கு இருக்கிறது? என கூற வேண்டும்.

    * பொத்தாம் பொதுவாக பேசினால் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

    அப்போது பேசிய சபாநாயர் அப்பாவு, இந்தியாவில் மத பயங்கரவாதம் இருக்கிறது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறினார்.

    தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,

    * பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என வானதிக்கே தெரியும். பிரதமர் கூட சென்று பார்க்கவில்லை.

    * தமிழ்நாட்டை பொறுத்தவரை மதவாதம் உள்ளே நுழைய முடியாது.

    * கோவையில் கோவில் அருகில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * காஷ்மீர் மாதிரி இங்கே நடக்கக்கூடாது என வானதி பேசி உள்ளார், அப்படி தமிழகத்தில் நிச்சயமாக நடைபெறாது.

    * காஷ்மீர் விவகாரம் தெரிந்தவுடன் நீங்கள் எடுக்கக்கூடிய எந்த நடவடிக்கையாக இருந்தாலும் உறுதுணையாக இருப்போம் என்று கூறினேன்.

    * காஷ்மீர் பிரச்சனையில் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும்.

    * வானதி சீனிவாசன் பா.ஜ.க. தலைமையிடம் பேசி தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.

    * தமிழகத்திற்கான நிதியை பா.ஜ.க.விடம் இருந்து பெற்று தர தயவு செய்து தமிழக பா.ஜ.க.வினர் குரல் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×