என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும் என்பதை அரசு உணர வேண்டும்.
- விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் வேளாண் கடன் உடனடியாக கிடைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அடங்கல் சான்றிதழ் மட்டும் பெற்று கடன் வழங்குவது வழக்கமானது என்பதால் தமிழக அரசு விவசாயிகளின் தற்போதைய கஷ்டத்தை, நஷ்டத்தை, வருவாய் இல்லாத நிலையை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் என்றால் என்ன என்று தெரியாது.
விவசாய நிலம், தற்காலிக குத்தகை நிலம், கோவில் நிலம், வக்பு நிலம் மற்றும் தனியார் நிலம் போன்ற பல்வேறு வகைப்பட்ட நிலங்களில் விவசாயம் செய்யப்படுகின்றது. இந்நிலையில் வங்கியில் நகைக்கடன், கல்விக் கடன் பெற்று அது சம்பந்தமாக நிலுவை இருந்தால் சிபில் ஸ்கோர் மதிப்பெண் கணக்கிட்டால் கடன் பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுவர்.
எனவே தான் வேளாண் தொழில் சம்பந்தமாக விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் கிடைக்க வேண்டிய விவசாயக் கடன் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் கிடைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். உணவுக்கு வித்திடும் விவசாயிகள் படும் கஷ்டத்தை பார்த்து ஆறுதல் கூறுவதை தாண்டி அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும் என்பதை அரசு உணர வேண்டும்.
குறிப்பாக விவசாயிகளின் கடன் நிலுவை, சிபில் ஸ்கோர் மதிப்பெண் என எக்காரணத்தையும் கூறாமல், இப்பருவத்தில் விவசாயத்தில் ஈடுபட, கடன் பெற காத்திருக்கும் விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் வேளாண் கடன் உடனடியாக கிடைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு ஜூலை மாதம் 25-ந்தேதி பிறந்த தினம் ஆகும்.
- முதல் கட்டமாக வடமாவட்டங்களில் தொகுதி வாரியாக அவர் நடைபயணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை :
பா.ம.க.வில் தந்தை- மகனுக்கு இடையேயான மோதல் தற்போது வரை முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், சட்டமன்ற தொகுதி வாரியாக உரிமை மீட்பு நடைபயணம் செல்ல அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு ஜூலை மாதம் 25-ந்தேதி பிறந்த தினம் ஆகும். அன்றைய தினம் டாக்டர் அன்புமணி நடைபயணத்தை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முதல் கட்டமாக வடமாவட்டங்களில் தொகுதி வாரியாக அவர் நடைபயணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நடைபயணத்தின் போது ஒவ்வொரு தொகுதியிலும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை அவர் சந்தித்து பேச இருப்பதாக தெரிய வந்துள்ளது.
- வேளாண் கண்காட்சி, கருத்தரங்கம் வேளாண் துறையினர் ஈரோட்டில் மிக சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.
- விவசாயிகளுக்கு பிரச்சனை என்றால் நாங்கள் தான் கேள்வி கேட்போம்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே வேளாண் உழவர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தும், விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
டெல்டா பாசனத்ததுக்கான தண்ணீரை நாளை மேட்டூர் அணையில் இருந்து திறந்து நான் வைப்பதற்கு முன், இன்று மேற்கு மண்டல வேளாண் குடி மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வேளாண் கண்காட்சி, கருத்தரங்கம் வேளாண் துறையினர் ஈரோட்டில் மிக சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர். அதற்காக முதலில் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த பிரமாண்ட கண்காட்சி அரங்கை பார்வையிட்டபோது என் மகனதில் அளவில்லாத மகிழ்ச்சி உண்டாகியது. அதற்காக எனது வணக்கத்தையும் நன்றியும் தெரிவிக்க விரும்புகிறேன். விவசாயிகளால் தான் இந்த மண்ணும் மக்களும் மகிழ்ச்சியாக மன நிறைவோடு இருக்கிறார்கள்
தமிழ்நாட்டின் வேளாண் துறை மக்கள் எல்லோரும் வாழ்வாங்கு வாழ வேண்டும் என இந்த ஈரோட்டில் ஈர மனதுடன் தெரிவித்து கொள்கிறேன்.
கண்காட்சி, கருத்தரங்கை நடத்துவற்கு ஈரோடு மாவட்டத்தை ஏன் தேர்ந்து எடுத்தார்கள் என்றால் ஈரோடு வேளாண்மையில் வளர்ச்சிப்பெற்ற பல முன்னோடி விவசாயிகளை கொண்ட மாவட்டம்.
குறிப்பாக சொல்ல வேண்டும் வேளாண் உற்பத்தியில் மாநிலத்தில் 8-வது இடம்.
வேளாண் துறைக்கு என நிதி நிலை ஒதுக்கீடு செய்துள்ளோம். அதன் பயன்களை எடுத்து சொல்ல வேண்டும் என்றால் 4 நான்கு ஆண்டுகளில் 488 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்து சாதனைப்படைத்து உள்ளோம்.
கூட்டுறவு துறையின் மூலம் 81 லட்சம் விவசாயிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 லட்சம் வேளாண் மின் இணைப்பு கொடுக்கு இலக்கு நிர்ணியக்கப்பட்டு 1 லட்சத்து 84 ஆயிரம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இலவச மின்சாரத்துக்கு 26 ஆயிரத்து 223 கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம்.
தமிழ்நாட்டில் சிலர்தோளில் துண்டுப்போட்டு கொண்டு ஏமாற்றுகிறார்கள். விவசாயிகளுக்கு பிரச்சனை என்றால் நாங்கள் தான் கேள்வி கேட்போம்.
விவசாயிகளுக்கு அவர்கள் துரோகம் செய்தனர். 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடியபோது அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள். அதனால் தேர்லில் அவர்கள் தோற்கப்பட்டனர். தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 1.86 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுத்துள்ளோம்.
- 3 வேளாண் சட்டங்களை நாம் எதிர்த்தபோது அதனை ஆதரித்து கையெழுத்திட்டவர்கள் அ.தி.மு.க.வினர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:
* விவசாயிகள் நலனுக்காக திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
* 1.86 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுத்துள்ளோம்.
* இலவச மின்சாரத்திற்காக ரூ.26,223 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
* கடந்த ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலை அதிக அளவில் இருந்தது.
* 3 வேளாண் சட்டங்களை நாம் எதிர்த்தபோது அதனை ஆதரித்து கையெழுத்திட்டவர்கள் அ.தி.மு.க.வினர்.
* தோளில் பச்சை துண்டு போட்டுக்கொண்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் அல்ல.
* பயிர்களுக்கு இடையே வளரும் களைகளைப்போன்று தான் கடந்த அ.தி.மு.க. ஆட்சி இருந்தது.
* எல்லா வகையிலும் விவசாயத்திற்கு துரோகம் செய்த ஆட்சிதான் கடந்த கால ஆட்சி.
இவ்வாறு அவர் கூறினார்.
- கரும்பு உற்பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாடு 2-ம் இடம் வகிக்கிறது.
- உழவு என்பது தொழில் மட்டுமல்ல, நம் பண்பாடு.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ரூ.15.70 கோடி செலவில் 16 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.159.53 கோடி மதிப்பீட்டில் 11 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். ரூ.25.41 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 4,524 பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து பெருந்துறையில் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் 2 நாட்கள் நடைபெறும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* சிறுதானிய உற்பத்தியில் தமிழ்நாடு தேசிய அளவில் முதலிடம்.
* கரும்பு உற்பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாடு 2-ம் இடம் வகிக்கிறது.
* டெல்டா பாசனத்திற்கான நீரை திறக்கும் முன் வேளாண் கண்காட்சியை தொடங்கியதில் மகிழ்ச்சி.
* பவானி ஆற்றில் 8 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
* ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு மேலும் திட்டங்கள் தருவோம்.
* உழவு என்பது தொழில் மட்டுமல்ல, நம் பண்பாடு.
* வேளாண்மையில் வளர்ச்சி பெற்ற முன்னோடிகளை கொண்டது ஈரோடு மாவட்டம்.
* டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறந்து வைக்க உள்ளேன்.
* முதல் முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை தி.மு.க. அரசு தாக்கல் செய்தது.
* கூட்டுறவுத்துறை மூலம் 81 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.62,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
* மண்ணுயிர் காத்து இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் 22 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
- நான்கு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், வடகரை கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை சுமார் 9.00 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் காரியாட்டி வட்டம், கல்குறிச்சியை சேர்ந்த சவுண்டம்மாள் மற்றும் தண்டியளேந்தலைச் சேர்ந்த கருப்பையா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவரும் காரியாபட்டியைச் சேர்ந்த கணேசன், திருமுருகன், மாரியம்மாள் மற்றும் பேச்சியம்மாள் ஆகிய நான்கு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
- அனைவரும் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும்.
- மாலையில் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.
சென்னை:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று முதல் 4 நாட்களுக்கு நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த கூட்டம் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை என 2 பிரிவாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. முதல் நாளான இன்று காலையில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனையில் ஈடுபட்டார்.
மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி என 7 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற இன்றைய கூட்டத்தில் தேர்தல் பணி, கட்சி வளர்ச்சி பணி, தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, கிளைக் கழகங்களை வலுப்படுத்துவது, சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றியம், நகரம், வார்டு, பகுதி, வட்டம் பேரூர் வார்டுகளுக்கு சார்பு அணி நிர்வாகிகள் தேர்வு செய்வது, பூத் முகவர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் பிரேமலதா பேசியதாவது:-
இன்று முதலே நீங்கள் அனைவரும் உங்களுக்கான பணிகளை தொடங்க வேண்டும். நாம் மேற்கொள்ளும் அனைத்து பணிகளும் 2026 தேர்தலுக்கான பணியாகவே இருக்க வேண்டும்.
போனில் பேசி நான் அதைச் செய்துவிட்டேன், இதை செய்து விட்டேன் என்று கூறாமல் களத்திற்கு சென்று ஒவ்வொருவரும் வெற்றி வீரர்களாக பணியாற்ற வேண்டும்.
உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை முழுமையாக ஆராய்ந்து அனைவரும் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும்.
பூத் கமிட்டி நிர்வாகிகள், கிளைக் கழக தொண்டர்கள் வரை அனைவரையும் நிர்வாகிகள் சந்தித்து பேச வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவே இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை அனைவரும் தெரிவியுங்கள். எங்கள் கருத்துக்களையும் கேட்டுக்கொள்ளுங்கள். நமது பணிகள் அனைத்தும் தேர்தலில் வெற்றி பெறும் வகையிலேயே அமைய வேண்டும்.
இவ்வாறு பிரேமலதா பேசினார்.
இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் அனைவரும் சட்டமன்றத் தேர்தலில் அதிகமான தொகுதிகளை கேட்டு போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இது தொடர்பாக கூட்டத்தில் பேசிய மூத்த நிர்வாகி ஒருவர், வருகிற சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 10 எம்.எல்.ஏ.க்களாவது வெற்றி பெற்று சட்டசபைக்குள் செல்ல வேண்டும்.
அதற்கேற்ப நாம் செயல்பட வேண்டும் என்று ஆவேசமாக தனது கருத்தை தெரிவித்தார்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் (சுமார் 4 ஆயிரம் ஓட்டுகள்)தோல்வியை தழுவிய விஜயபிரபாகரனை மீண்டும் அதே மாவட்டத்தில் களமிறக்குவதற்கு அம்மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அருப்புக்கோட்டை தொகுதியில் தான் விஜயபிரபாகரனுக்கு மற்ற சட்டமன்ற தொகுதிகளை விட அதிக அளவில் வாக்குகள் கிடைத்துள்ளது.
இதனை மையமாக வைத்து விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் இன்றைய கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் விஜயபிரபாகரனை அருப்புக்கோட்டை தொகுதியில் களம் இறக்கினால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்கிற கருத்தையும் பதிவு செய்து இருக்கிறார்கள்.
இதன்மூலம் அ.தி.மு.க. கூட்டணியில் அருப்புக்கோட்டை தொகுதியை அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டு பெறுவதற்கும் தே.மு.தி.க. தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாலையில் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை செயலாளர் பார்த்தசாரதி, இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் மற்றும் துணை செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.யூ.சந்திரன், சுபாரவி ஆகியோர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர்.
தே.மு.தி.க.வில் மொத்தம் 84 மாவட்ட செயலாளர்கள் பொறுப்பில் உள்ளனர்.
மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வருகிற 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள்.
- தொகுதிவாரியாக 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
- 4-ம் கட்ட பரிசளிப்பு விழாவும் இந்த வாரத்திலேயே நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை:
த.வெ.க. தலைவர் விஜய் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.
2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 2 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முதலிடத்தை பெற்ற மாணவிகளுக்கு வைரக் கம்மல் பரிசாக வழங்கப்பட்டது.
தொகுதிவாரியாக 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அடுத்ததாக 3-ம் கட்ட பரிசளிப்பு விழா நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது. விழாவில் பங்கேற்போருக்கு அந்தந்த மாவட்ட செயலாளர் வாரியாக டிஜிட்டல் அடையாள அட்டைகளை கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் இன்று வழங்கினார்.
இதைத் தொடர்ந்து 4-ம் கட்ட பரிசளிப்பு விழாவும் இந்த வாரத்திலேயே நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அடுத்த வாரம் நடைபெறும் விழாவில் விடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. அனைத்து விழாக்களிலும் கட்சி தலைவர் விஜய் பங்கேற்று பரிசுகள் வழங்கி மாணவ, மாணவிகளை கவுரவிக்க இருக்கிறார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்து வருகிறார்.
- ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக மானாமதுரையில் இருந்து மாலை 4.55-க்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.
- திருச்சி செல்லும் விரைவு ரெயில் (எண்:16850), ராமேசுவரம்-மானாமதுரை இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லையில் இருந்து குஜராத் மாநிலம் ஹப்பாவுக்கு செல்லும் விரைவு ரெயில் (வண்டி எண்-19577) ஜூன் 15-ல் இருந்து காலை 5.05-க்கு புறப்படும். அதே போல, நெல்லையில் இருந்து புறப்பட்டு குஜராத் காந்திதாம் செல்லும் விரைவு ரெயிலும் (எண்: 20923) காலை 5.05-க்கு புறப்படும். கோவையில் இருந்து அரியானா மாநிலம் ஹிசார் செல்லும் விரைவு ரெயில் (எண்:22476) பிற்பகல் 1.30-க்கு கோவையில் இருந்து புறப்படும்.
இதே போல, மும்பை தாதரில் இருந்து நெல்லை செல்லும் விரைவு ரெயில் (எண்:22629), நெல்லையில் இருந்து புறப்பட்டு தாதருக்கு செல்லும் ரெயில் (எண்:22630) உள்பட 37 விரைவு ரெயில்களின் நேரமும் மாற்றப்பட்டு உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் சத்திரக்குடி ரெயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில விரைவு ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி திருச்சியில் இருந்து ஜூன் 12, 14, 16, 21, 23 மற்றும் ஜூலை 4 ஆகிய தேதிகளில் காலை 7.05-க்கு புறப்பட்டு ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரெயில் வண்டி எண்.16849 மானாமதுரை, ராமேசுவரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு, மானாமதுரையில் நிறுத்தப்படும்.
மறுமார்க்கமாக ராமேசுவரத்தில் இருந்து அதே தேதியில் மாலை 3-க்கு புறப்பட்டு திருச்சி செல்லும் விரைவு ரெயில் (எண்:16850), ராமேசுவரம்-மானாமதுரை இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக மானாமதுரையில் இருந்து மாலை 4.55-க்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.
மேலும், ராமேசுவரத்தில் இருந்து ஜூன் 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 9.10-க்கு புறப்பட்டு செகந்திராபாத் செல்லும் சிறப்பு ரெயில் (எண்:07696) அதற்கு மாற்றாக ராமேசுவரத்தில் இருந்து இரவு 7-க்கு 19 மணி நேரம் 50 நிமிடம் தாமதம்) புறப்பட்டு செகந்திராபாத் செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஜூன் 12, 16, 19, 23, 26, 30 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.05-க்கு புறப்பட்டு விஜயவாடா செல்லும் பினாகினி விரைவு ரெயில் (வண்டி எண்.12712), வழக்கத்துக்கு மாறாக சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2.25-க்கு (20 நிமிடம் தாமதம்) புறப்பட்டு விஜயவாடா செல்லும்.
இதேபோல, திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் விரைவு ரெயில் (வண்டி எண்.20606), பண்ருட்டி ரெயில் நிலையத்தில் காலை 6.04-க்கு வந்து செல்லும்.
இன்று (புதன்கிழமை) முதல் 25 நிமிடம் தாமதமாக, அதாவது காலை 6.29-க்கு வரும். ஆனால், திருச்செந்தூர்- திருப்பாதிரிப்புலியூர் மற்றும் விழுப்புரம்-எழும்பூர் இடையேயான ரெயில் சேவையில் எந்த மாற்றமும் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சார்பு அணிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
- ஐ.டி. பிரிவில் மாநில, மண்டல வாரியாக பொறுப்பாளர்கள், வழக்கறிஞர் அணி, சட்ட ஆலோசனை அணிக்கான புதிய பொறுப்பாளர்களை நியமிக்கப்பட்டுள்ளனர்.
த.வெ.க.வில் புதிய பொறுப்பாளர்கள் நியமித்து கட்சி தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சார்பு அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், கழகத் தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் சமூக ஊடக அணியின் அதிகாரப்பூர்வ புதிய பொறுப்பாளர்கள் நியமித்து உள்ளார்.
ஐ.டி. பிரிவில் மாநில, மண்டல வாரியாக பொறுப்பாளர்கள், வழக்கறிஞர் அணி, சட்ட ஆலோசனை அணிக்கான புதிய பொறுப்பாளர்களை நியமித்து உள்ளார்.
- 2021-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த ஆய்வில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்தது.
- தமிழகத்தில் தற்போது கொரோனா நோயின் தீவிர தன்மை மிகப்பெரும் அளவுக்கு குறைந்தே இருப்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக கடந்த 2 வாரங்களாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த வைரஸ் அதிக வீரியம் இல்லாதது என்பதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வு தகவல் இன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மக்கள் மத்தியில் எப்படி உள்ளது? என்பது தொடர்பாக இதுவரை 5 கட்டங்களாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 2020 அக்டோபர் மாதம் முதல் கட்ட ஆய்வு நடந்த போது தமிழக மக்களில் 32 சதவீதம் பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த 2-ம் கட்ட ஆய்வில் 29 சதவீதம் பேருக்கும், மே மாதம் நடந்த ஆய்வில் 70 சதவீதம் பேருக்கும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதியானது. 2021-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த ஆய்வில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரிய வந்தது.
தற்போது (2025) கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழக மக்களில் 97 சதவீதம் பேருக்கு கொரோனா நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா நோயின் தீவிர தன்மை மிகப்பெரும் அளவுக்கு குறைந்தே இருப்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பொது சுகாதாரம் இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது.
- தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனையில் ஈடுபட்டார்.
- த.வெ.க.வுடன் கூட்டணியா என்பதை விஜயிடம் தான் கேட்க வேண்டும்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் தே.மு.தி.க.வும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி உள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.வுக்கு மேல்சபை எம்.பி. பதவியை தருவதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது காலியான மேல்சபை எம்.பி. பதவி இடம் அந்த கட்சிக்கு ஒதுக்கப்படாததால் அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.
இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இதுபோன்ற சூழலில் இன்று முதல் 4 நாட்களுக்கு தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த கூட்டம் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை என 2 பிரிவாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.
முதல் நாளான இன்று காலையில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:
* 2026 சட்டசபை தேர்தலில் தேவைப்பட்டால் தனித்து போட்டியிடவும் தயார்.
* தே.மு.தி.க. தனித்து போட்டியா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.
* கூட்டணி குறித்து முடிவு செய்ய சில காலம் தேவைப்படுகிறது.
* தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் வரவேற்கிறோம்.
* ராஜ்யசபா சீட் குறித்த ஒப்பந்த கடிதத்தை நாகரிகம் கருதி வெளியிடவில்லை.
* தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணையுமா என்ற கேள்விக்கு தி.மு.க.விடம் கேளுங்கள்.
* த.வெ.க.வுடன் கூட்டணியா என்பதை விஜயிடம் தான் கேட்க வேண்டும்.
* தி.மு.க. அழைத்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு காலம் வந்ததும் பதில் சொல்கிறேன் என்று அவர் கூறினார்.






