என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பச்சை துண்டு போட்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் அல்ல - மு.க.ஸ்டாலின்
- 1.86 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுத்துள்ளோம்.
- 3 வேளாண் சட்டங்களை நாம் எதிர்த்தபோது அதனை ஆதரித்து கையெழுத்திட்டவர்கள் அ.தி.மு.க.வினர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:
* விவசாயிகள் நலனுக்காக திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
* 1.86 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுத்துள்ளோம்.
* இலவச மின்சாரத்திற்காக ரூ.26,223 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
* கடந்த ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலை அதிக அளவில் இருந்தது.
* 3 வேளாண் சட்டங்களை நாம் எதிர்த்தபோது அதனை ஆதரித்து கையெழுத்திட்டவர்கள் அ.தி.மு.க.வினர்.
* தோளில் பச்சை துண்டு போட்டுக்கொண்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் அல்ல.
* பயிர்களுக்கு இடையே வளரும் களைகளைப்போன்று தான் கடந்த அ.தி.மு.க. ஆட்சி இருந்தது.
* எல்லா வகையிலும் விவசாயத்திற்கு துரோகம் செய்த ஆட்சிதான் கடந்த கால ஆட்சி.
இவ்வாறு அவர் கூறினார்.






