என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பெருந்தலைவர் காமராஜர் பற்றி ஸ்டாலினும், திமுக-வும் பேசுவதெல்லாம் நகைமுரண்.
- காமராஜர் குறித்த கருணாநிதியின் பழைய முரசொலி சித்திரங்களை எல்லாம் யாரும் மறந்துவிடவில்லை.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பெரும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கர்மவீரர் காமராஜர் மறையும் தருவாயிலான நிகழ்வுகள் வரலாற்றுக் குறிப்பாக உள்ள போதே, காமராஜர் கருணாநிதியின் கையைப் பிடித்துப் புகழ்ந்தார் என்பது எவ்வளவு பெரிய பச்சைப்பொய்? திமுக-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா?
பெருந்தலைவர் காமராஜர் பற்றி ஸ்டாலினும், திமுக-வும் பேசுவதெல்லாம் நகைமுரண்.
பெருந்தலைவர் குறித்து சர்ச்சையான விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றால், அந்த சர்ச்சையை ஆரம்பித்தது யார்? உங்கள் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர், திமுகவின் துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா தானே?
அதை வைத்து, சமூக ஊடகங்கள் முழுக்க ஐயா காமராஜர் குறித்த அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருப்பது உங்கள் திமுக கொத்தடிமைகள் தானே?
காமராஜர் குறித்த கருணாநிதியின் பழைய முரசொலி சித்திரங்களை எல்லாம் யாரும் மறந்துவிடவில்லை. அப்படி கர்மவீரர் காமராஜர் மீது பன்னெடுங்காலமாக கருணாநிதி வகையறா கொண்டிருந்த வன்மத்தை, இப்படி ஒரு சர்ச்சை உருவாக்கி, அதன் மூலம் காமராஜர் புகழை மழுங்கடிக்கத் துடிக்கும் அற்ப அரசியலை செய்வது திமுக தானே?
இவரே வெடிகுண்டு வைப்பாராம்..
இவரே அதை எடுப்பது போல் நடிப்பாராம்! நடிக்காதீங்க மு.க.ஸ்டாலின்.
அவதூறான பேச்சை திரித்து பேசும் போதே தெரிகிறது, உங்களுடைய நோக்கம் என்னவென்று!
ஒன்றைத் தெளிவாக சொல்கிறேன்- உங்களாலோ, உங்கள் அடிப்பொடிகாளோ, ஒருபோதும் மக்களுக்காக உழைத்த பெருந்தலைவர் காமராஜரின் புகழைத் துளியும் குறைத்துவிட முடியாது!
வாழ்க கர்மவீரரின் புகழ்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியா? அ.தி.மு.க. கூட்டணியா? என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது.
- தி.மு.க., அ.தி.மு.க.வை தாண்டி ஏற்படும் எந்த கூட்டணியும் தாக்கத்தை ஏற்படுத்தாது.
சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
* மத்தியிலும், மாநிலத்திலும் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை.
* 3-வது அணி உருவாக்கப்பட்டிருந்தாலும் அது வெற்றி பெறவில்லை.
* வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியா? அ.தி.மு.க. கூட்டணியா? என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது.
* தி.மு.க., அ.தி.மு.க.வை தாண்டி ஏற்படும் எந்த கூட்டணியும் தாக்கத்தை ஏற்படுத்தாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாகனத்தில் இருந்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
- காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியை அடுத்த நவமலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் வேலைக்காக அருகே இருக்கும் கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் இப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் வழக்கம் போல காட்டம்பட்டி அருகே வாய்க்கால் வேலைக்கு புறப்பட்டனர்.
இவர்கள் தங்கள் பகுதியில் இருந்து ஒரு சரக்கு வாகனத்தில் புறப்பட்டனர். இந்த வாகனத்தை தேவ பாலு என்பவர் ஓட்டினார்.
அப்போது ஆழியார் அடுத்த சின்னார்பதி மலைப்பாதையில் சென்றபோது அங்குள்ள வளைவில் வாகனம் திரும்பியது. அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் இருந்த 20-க்கும் மேற்பட்டோரும் படுகாயம் அடைந்தனர்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் பார்த்து ஓடி வந்தனர். பின்னர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் நவமலையை சேர்ந்த ராணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்றவர்களை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியில் திலகராஜ் என்பவர் உயிரிழந்தார்.
மற்றவர்கள் பொள்ளாச்சி மற்றும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற ஒருவர் செல்லும் வழியில் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கோடம்பாக்கம், தி.நகர், அரும்பாக்கம் மற்றும் தி. நகர் பஸ் வழித்தடங்களுக்கு புதிய பஸ் நிலையம் ஒரு முக்கிய மையமாக திகழும்.
- பல்வேறு வசதிகள் செய்யப்படுவதால் 5 மாடிகளை கொண்ட பிரம்மாண்ட பஸ் முனையமாக விரைவில் செயல்பட தொடங்கும்.
சென்னை மாநகரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதிகளில் ஒன்று தி.நகராகும். பல்வேறு ஜவுளி கடைகள், வணிக நிறுவனங்கள் என தி.நகரில் ஏராளமான தொழில் சார்ந்த கடைகள் வரிசை கட்டி நிற்கின்றன. இதன் காரணமாக மாம்பலம் பகுதிக்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள்.
ஆனால் அங்கு பயணிகளுக்கும் மாநகரப் போக்குவரத்து கழக டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கும் போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்படாமலேயே உள்ளன.
பஸ் நிலையத்தில் போதிய இட வசதி இல்லாததால் பஸ் நிலையத்துக்கு வெளியேயும் மாநகரப் பஸ்களை நிறுத்த வேண்டிய நிலையே நீடித்து வருகிறது.
இதன் காரணமாக தி.நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருந்து வருகிறது.
இதனை குறைக்கும் வகையிலும், பயணிகளுக்கு சிறந்த வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தி.நகரில் ஒரு புதிய ஒருங்கிணைந்த பஸ் முனையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டத்தை நிறைவு செய்து அதன் பிறகு பணிகளை தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த புதிய பஸ் முனையம் சுமார் 1.97 ஏக்கர் பரப்பளவில், ரூ.254 கோடியில் தி.நகரில் உள்ள சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் தற்போதைய பணிமனையிலேயே அமைக்கப்பட உள்ளது. விசாலமாக கட்டப்பட உள்ள புதிய பஸ் நிலையத்தில் 97 பஸ்கள் மற்றும் 235 வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு இட வசதி செய்து கொடுக்கப்பட இருக்கிறது.
இது தவிர, தினமும் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மினி பஸ்களையும் கையாளும் திறன் கொண்டதாக இந்த புதிய பஸ் நிலையம் செயல்பட இருப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.
கோடம்பாக்கம், தி.நகர், அரும்பாக்கம் மற்றும் தி. நகர் பஸ் வழித்தடங்களுக்கு புதிய பஸ் நிலையம் ஒரு முக்கிய மையமாக திகழும். பல்வேறு வசதிகள் செய்யப்படுவதால் 5 மாடிகளை கொண்ட பிரம்மாண்ட பஸ் முனையமாக விரைவில் செயல்பட தொடங்கும்.
தரைத்தளத்தில் பஸ்களை நிறுத்தி வைப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. மேல் தளங்களில் கடைகள், அலுவலகங்கள், மருத்துவ மையங்கள், உணவகங்கள், குழந்தைகள் பராமரிப்பு மையங்கள், காத்திருப்பு பகுதிகள் மற்றும் கழிப்பறைகள் கட்டப்படுகிறது. ஒரு தளத்தில் 50,471 சதுர அடியில் வாகன நிறுத்துமிடமும் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட இருக்கிறது.
இந்த முனையத்தில் 75 பஸ்களுக்கான நிறுத்தம் மற்றும் 9 அடுக்குகள் கொண்ட 945 நான்கு சக்கர வாகன நிறுத்தம் மற்றும் 1.09 ஏக்கரில் 60 அடுக்குகள் கொண்ட 87 இருசக்கர வாகன நிறுத்தம் ஆகியவையும் இருக்கும்.
தற்போது தி.நகரில் 60-க்கும் மேற்பட்ட பஸ் வழித்தடங்கள் உள்ளதால், இங்குள்ள பஸ் முனையங்கள் மற்றும் சாலைகள் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகின்றன. புதிய முனையம் அமைப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயணிகளுக்கு தடையற்ற மற்றும் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த முனையத்தில் வாகன நிறுத்தம், டிக்கெட் கவுண்டர்கள், தகவல் மையங்கள், பயணிகள் காத்திருப்புப் பகுதிகள், உணவகங்கள், மருத்துவ மையங்கள், மருந்தகங்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு வசதிகள் போன்ற பல்வேறு வசதிகளும் ஒரே இடத்தில் ஏற்படுத்தப்படுவதால் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இந்த மையம் மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும்.
புதிய முனையம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு வணிகம் மற்றும் பார்க்கிங் வருவாய் மூலம் ஐந்து ஆண்டுகளில் ரூ.29.52 கோடி வருவாய் ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பஸ் நிலையம் மூலம் போக்குவரத்து வசதிகள் மேம்படுவதுடன், வணிக ரீதியாகவும் கணிசமான வருவாய் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய தி.நகர் பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் பஸ்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. புதிய முனையம் இந்த நெரிசலை முழுமையாக சரிசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து கழக ஊழியர்கள் நீண்ட நேரம் பணிபுரிவது ஒரு சவாலாக உள்ளது. புதிய முனையம் இது போன்ற பிரச்சனைகளை குறைப்பதுடன் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பயன் அடைவார்கள் என்பதும் அதிகாரிகளின் நம்பிக்கையாக உள்ளது.
இதை தொடர்ந்து புதிய முனையம் அமைக்கும் முடிவை அவர்கள் வரவேற்றுள்ளனர். இது தங்களுக்கு சிறந்த ஓய்வு மற்றும் பணிச்சூழலை வழங்கும் என நம்புகிறார்கள்.
இந்த புதிய திட்டம் தி.நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, சென்னை மாநகர வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை ஏற்படுத்துவதாகவே அமையும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
- இக்கொடூரச்செயலில் ஈடுபடுபவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
- தமிழ்நாடு அரசு, காவல்துறை மற்றும் மருத்துவ நிறுவனங்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் ஏழைத்தொழிலாளர்களை குறிவைத்து அவர்களின் வறுமையை பயன்படுத்தி வெறும் 3 இலட்சத்திற்கு அவர்களின் கிட்னி எடுப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. இக்கொடூரச்செயலில் ஈடுபடுபவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
ஏழை மக்களின் உடல் உறுப்புகளை விற்பனைக்கான பொருளாக பயன்படுத்துவது மனித உரிமையை முற்றிலும் இழிவுப்படுத்தும் செயல். இன்றைய சமூகத்தில் சில மனித உறுப்புகள், குறிப்பாக 'கிட்னி', ஒரு வியாபாரப் பொருளாக மாறிவிட்டது என்பது வருத்தத்துக்குரியது.
சட்டப்படி தானம் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்க, சிலர் அதனைத் தாண்டி, லாப நோக்கத்தோடு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது குற்றமாகவே பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு, காவல்துறை மற்றும் மருத்துவ நிறுவனங்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- மனிதர்கள் உயிர்வாழத் தேவையான முதன்மையான உடல் உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று.
- தமிழக மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக கதையளந்து கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறிகளில் பணியாற்ற வரும் ஏழைத் தொழிலாளர்களை ஏமாற்றி, அவர்களின் சிறுநீரகங்களை சில கும்பல்கள் பறித்துச் செல்வதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களின் சிறுநீரகங்கள் கொள்ளையடிக்கப்படுவதும், அதை தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை.
நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் தொழிலாளர்களை சந்திக்கும் கும்பல், அவர்களின் சிறுநீரகங்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பணம் தருவதாகக் கூறி விலை பேசுவதாகவும், ஒப்புக்கொள்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை முன்பணம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கோவை, சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அவர்களிடமிருந்து சிறுநீரகங்கள் எடுக்கப்படுவதாகவும், அவை ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பணக்காரர்களிடம் ரூ.50 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பொருத்தப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகத்தை வழங்கியவர்களில் சிலருக்கு, முன்பணம் போக மீதமுள்ள தொகை வழங்கப்படாத நிலையில், அவர்கள் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து தான் இந்த மோசடி வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ளது. ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து தான் இது குறித்து விசாரணை நடத்தப்போவதாக நாமக்கல் மாவட்ட மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது.
மனிதர்கள் உயிர்வாழத் தேவையான முதன்மையான உடல் உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. ரூ.1 லட்சத்திற்காக சிறுநீரகத்தையே மக்கள் விற்கத் துணிகிறார்கள் என்றால் அவர்களின் வாழ்க்கை நிலை எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். இதையெல்லாம் கூட அறியாமல் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக கதையளந்து கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகத் திருட்டு நடப்பதாக சில ஆண்டுகளுக்கு முன் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, அது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தொடர் கண்காணிப்பை தமிழக அரசு மேற்கொண்டிருந்தால், இத்தகைய சிறுநீரகத் திருட்டுகளைத் தடுத்திருக்க முடியும். ஆனால், தமிழக அரசு நீண்டகாலமாக உறங்கிக் கொண்டிருந்து விட்டு இப்போது துறை சார்ந்த விசாரணை நடத்தப்போவதாக கூறுகிறது. அதில் நீதி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உயர்நிலைக்குழு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) 355 பஸ்களும், சனிக்கிழமை 350 பஸ்களும் இயக்கப்படும்.
- பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை:
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 355 பஸ்களும், சனிக்கிழமை 350 பஸ்களும் இயக்கப்படும்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 55 பஸ்களும், சனிக்கிழமை 55 பஸ்களும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும், மாதவரத்தில் இருந்து நாளை மற்றும் சனிக்கிழமை 20 பஸ்களும் என மொத்தம் 1,035 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
மேலும், ஞாயிற்றுக்கிழமை (20-ந்தேதி) சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூட்டணி ஆட்சி என அமித்ஷா கூறுவதால் நானும் அதையே கூறுகிறேன்.
- அ.தி.மு.க.விற்கு மாற்றுக்கருத்து இருந்தால் அவர்கள் அமித்ஷாவிடம் பேசிக் கொள்ளட்டும்.
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
* தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கூட்டணி ஆட்சி நடைபெறும்.
* கூட்டணி ஆட்சி என அமித்ஷா கூறுவதால் நானும் அதையே கூறுகிறேன்.
* அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம்.
* அ.தி.மு.க.விற்கு மாற்றுக்கருத்து இருந்தால் அவர்கள் அமித்ஷாவிடம் பேசிக் கொள்ளட்டும்.
* அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் எனது பங்கு எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நீர்மட்டம் 119.50 அடியாகவும், நீர் இருப்பு 92.67 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
- கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர்:
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் காலையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 17,485 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 17,235 கனஅடியாக குறைந்தது. இன்று காலையில் நீர்வரத்து 17,880 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்மட்டம் 119.50 அடியாகவும், நீர் இருப்பு 92.67 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 18,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
- சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததும் மர்ம வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
- மாணவியை மர்ம வாலிபர் மிரட்டி தூக்கி செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 10-வயது மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளி முடிந்து மாணவி தனியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின் தொடர்ந்து வந்த மர்ம வாலிபர் ஒருவர் மாணவியிடம் பேச்சுகொடுத்தார். திடீரென அவர், மாணவியை மிரட்டி தூக்கிச் சென்றார். பின்னர் அருகில் உள்ள மாந்தோப்பிற்கு மாணவியை கடத்தி சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கதறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததும் மர்ம வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதைத் தொடர்ந்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அப்போது மாணவி தனக்கு நேர்ந்தது குறித்து தெரிவித்து அழுதார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் ஆரம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அவரை பிடிக்க 4 தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் மாணவியை மர்ம வாலிபர் மிரட்டி தூக்கி செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில் மர்ம வாலிபர் மாணவியை தூக்கி செல்வதும், பின்னர் அவர் செல்போனில் பேசியபடி தப்பி செல்வதும் பதிவாகி உள்ளது. இதனை வைத்து குறிப்பிட்ட நேரத்தில் அந்த பகுதியில் இருந்து சென்ற செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- பெருந்தலைவர் காமராசரைப் 'பச்சைத்தமிழர்' என்று போற்றியவர் தந்தை பெரியார்.
- மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
பெருந்தலைவர் காமராசரைப் 'பச்சைத்தமிழர்' என்று போற்றியவர் தந்தை பெரியார்.
குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா.
பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் தமிழினத் தலைவர் கலைஞர்.
உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு!
அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும்.
சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கோஷங்கள் எழுப்பியபடி ராஜா காலனியில் உள்ள திருச்சி சிவா வீட்டை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
- காமராஜர் ஆட்சி போன்று தமிழக மக்கள் ஒரு ஆட்சியை கண்டதில்லை.
திருச்சி:
பெருந்தலைவர் காமரஜர் குறித்த திருச்சி சிவா எம்.பி. பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருச்சி சிவா எம்.பி. பேச்சை காங்கிரஸ் கட்சியும் கண்டித்து உள்ளது.
அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் அறிவித்தார்.
இதை தொடர்ந்து வக்கீல் சரவணன் தலைமையில், சிவாஜி பேரவை தலைவர் சிவாஜி சண்முகம், தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திர குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகாமையில் உள்ள வ.உ.சி. சிலை முன்பு திரண்டனர்.
பின்னர் அங்கிருந்து கோஷங்கள் எழுப்பியபடி ராஜா காலனியில் உள்ள திருச்சி சிவா வீட்டை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு சரவணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.
பின்னர் அவர்களை வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் உள்ள ஒரு அரங்கில் அடைத்து வைத்தனர். இந்தப் போராட்டம் காரணமாக திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக வக்கீல் சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெருந்தலைவர் காமராஜர் மனித கடவுள். அவரைப் பற்றி அவதூறான கருத்தை பரப்பிய திருச்சி சிவா எம்.பி. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். காமராஜர் ஆட்சி போன்று தமிழக மக்கள் ஒரு ஆட்சியை கண்டதில்லை.
மக்களுக்கு வழங்கிய ரேஷன் அரிசியை தானும் சாப்பிட்டு வந்த மகான் காமராஜர். தமிழ்நாடு அரசின் விடுதியில் காமராஜருக்காக ஏ.சி. பொருத்தப்பட்டதாக உண்மைக்கு புறம்பான செய்தியை தெரிவித்துள்ளார்.
திருச்சி சிவாவின் விளக்கம் ஏற்கும்படியாக இல்லை. அவர் காங்கிரஸ் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






