என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17,880 கன அடியாக அதிகரிப்பு
- நீர்மட்டம் 119.50 அடியாகவும், நீர் இருப்பு 92.67 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
- கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர்:
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் காலையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 17,485 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 17,235 கனஅடியாக குறைந்தது. இன்று காலையில் நீர்வரத்து 17,880 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்மட்டம் 119.50 அடியாகவும், நீர் இருப்பு 92.67 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 18,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
Next Story






