என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கரூர் சம்பவம் தொடர்பான தினமும் பேச வேண்டாம்.
- பேசிக்கொண்டே இருந்தால் சோகம் போய்விடாது.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேற்று இரவு நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதையடுத்து இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரூர் சம்பவம் தொடர்பான தினமும் பேச வேண்டாம். வழக்கு கோர்ட்டில் உள்ளது. சோகம் தான் இல்லை என்று சொல்லவில்லை. பேசிக்கொண்டே இருந்தால் சோகம் போய்விடாது. இனி நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது நம்முடைய கடமை.
கரூர் சம்பவம் அரசியலாக மாறுகிறதா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, இப்போது நான் பேசியதில் கூட அரசியல் செய்யலாம். அரசியல் செய்யாமல் இருப்பது நாம் இருவரின் கடமை என்று கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டில் 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
- வளர்ந்து வரும் அனைத்து தொழில்களிலும் தமிழ்நாடு கால்பதித்து வருகிறது.
சென்னை:
சென்னை நந்தம்பாக்கத்தில் TIDCO சார்பில் நடைபெறும் விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான (AeroDefCon 25) கண்காட்சி கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் பேசியதாவது:-
* இந்தியாவை ஈர்க்கும் மாநிலம் என்ற நிலையில் இருந்து உலகை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது.
* தமிழக தொழில்துறை மாநாடுகள் உலக அளவில் பேசப்படுகின்றன.
* இந்தியாவை மட்டும் அல்ல, உலகையே ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது.
* வளர்ந்து வரும் அனைத்து தொழில்களிலும் தமிழ்நாடு கால்பதித்து வருகிறது.
* உலக அளவில் வளரும் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
* தமிழ்நாட்டில் 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
* உற்பத்தி துறையில் லீடராக தமிழ்நாடு மாறி வருகிறது, அனைத்து தொழில்களிலும் தடம் பதித்து வருகிறது.
* இன்று நான் தொடங்கி வைத்தது வெறும் கண்காட்சி அல்ல, முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்களை கண்டறியும் தளம்.
* இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற ஒரே மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
* இந்திய விண்வெளி துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும்.
* பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் எதிர்காலத்தில் முக்கிய பங்காற்ற உள்ளது.
* பாதுகாப்பு துறையில் முக்கிய மையமாக தமிழ்நாடு மாறும் என நம்புகிறேன்.
* பாதுகாப்புத்துறையில் 23,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
* சென்னை அருகே AEROHUB என்ற திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது.
* தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியும் முதலீடுகளுக்கு உகந்த பகுதிகளாக திகழ்கிறது என்றார்.
- டாக்டர் ராமதாஸ் அய்யா அவர்களை சந்தித்து நலம் விசாரிக்க வந்தேன்.
- வைகோ அய்யா அவர்களும் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேற்று இரவு நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதையடுத்து இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டாக்டர் ராமதாஸ் அய்யா அவர்களை சந்தித்து நலம் விசாரிக்க வந்தேன். விசாரிப்பதற்கு முன்பே நல்ல செய்தி வந்தது. இன்று மாலை அவரை டிஸ்சார்ஜ் செய்கிறார்கள். அவருடன் பேசிக்கொண்டு இருந்தேன். நலமாக இருக்கிறார்.
வைகோ அய்யா அவர்களும் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார். அவருக்கும் ஜூரம் தணிந்துவிட்டதாக சொன்னார்கள். அவருடைய மகனிடம் நலம் விசாரித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்று காலை நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
- ராமதாஸ் சிகிச்சை பெறும் தகவல் இமயமலையில் ஆன்மீக சுற்றுப் பயணம் செய்து வரும் ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேற்று இரவு ராமதாசை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இன்று காலை நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்நிலையில் டாக்டர் ராமதாஸ் சிகிச்சை பெறும் தகவல் இமயமலையில் ஆன்மீக சுற்றுப் பயணம் செய்து வரும் ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த ரஜினிகாந்த் உடனடியாக டாக்டர் ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும் விரைவில் பூரண நலம் பெற வேண்டிக்கொள்வதாகவும் டாக்டர் ராமதாசிடம் ரஜினி தெரிவித்தார்.
- தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வரும் தங்கம் விலை சீரான இடைவெளியில் இதுவரை கண்டிராத புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
- வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.
அமெரிக்காவின் வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவருகிறது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது கணிசமாக குறைந்து, தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளது. தங்கத்துக்கான தேவை அதிகரித்து வருவதால் அதன் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துகொண்டே செல்கிறது.
தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வரும் தங்கம் விலை சீரான இடைவெளியில் இதுவரை கண்டிராத புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த மாதம் 6-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்துக்கும், ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்துக்கும் விற்பனையானது. அதன் பின்னரும் தங்கம் விலை ஓய்வில்லாமல், தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது.
இதையடுத்து அதே மாதம் 9-ந் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.81 ஆயிரத்தையும், 16-ந் தேதி ரூ.82 ஆயிரத்தையும், 22-ந் தேதி ரூ.83 ஆயிரத்தையும், 23-ந் தேதி ரூ.85 ஆயிரத்தையும், 29-ந் தேதி ரூ.86 ஆயிரத்தையும், கடந்த 1-ந் தேதி ரூ.87 ஆயிரத்தையும் கடந்தது. ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை தொடர்ந்து மேல்நோக்கியே நிற்காமல் சென்றுகொண்டிருக்கிறது.
கடந்த 4-ந் தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 950-க்கும், ஒரு சவரன் ரூ.87 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது 5-ந் தேதியும் மாற்றமின்றி தொடர்ந்தது.
நேற்று காலையில் அதிரடியாக ரூ.110 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 60-க்கும், ரூ.880 அதிகரித்து சவரன் ரூ.88 ஆயிரத்து 480-க்கும் தங்கம் விற்பனையானது. மாலையில் மேலும் ரூ.65 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 125-க்கும், ரூ.520 அதிகரித்து சவரன் ரூ.89 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை உயர்ந்து முதல் முறையாக ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்தை கடந்து சவரன் ரூ.89 ஆயிரத்தை தொட்டு வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியிருப்பது இல்லத்தரசிகளுக்கு கடுமையான அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.11,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.167-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
07-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,600
06-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,000
05-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600
04-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600
03-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
07-10-2025- ஒரு கிராம் ரூ.167
06-10-2025- ஒரு கிராம் ரூ.167
05-10-2025- ஒரு கிராம் ரூ.165
04-10-2025- ஒரு கிராம் ரூ.165
03-10-2025- ஒரு கிராம் ரூ.162
- வரம்புமீறிய வழக்கறிஞரை வன்மையாகக் கண்டிக்கிறேன்
- நாட்டின் பெரும்பான்மை மக்களைக் காலங்காலமாய்க் கழுத்தில் மிதித்து அழுத்திக் கொண்டிருக்கும் பழைய பொருளாகும்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.
ஆனால் இதுபற்றி கவலைப்படாத தலைமை நீதிபதி, வக்கீல்களை பார்த்து, ''இதையெல்லாம் பார்த்து கவனத்தை சிதற விடாதீர்கள். நாங்கள் கவனத்தை சிதறவிட மாட்டோம். இந்த விஷயங்கள் என்னை பாதிக்காது'' என்று கூறினார். பின்னர், விசாரணையை தொடர்ந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
உச்சநீதிமன்றத்
தலைமை நீதியரசர்
@JusticeBRGavai மீது
அநாகரிகத்தை
வீசமுயன்றது கண்டு
அதிர்ந்துபோனேன்
இது
முறைசெய்யும் நீதித்துறையைக்
கறைசெய்யும் களங்கமாகும்
வரம்புமீறிய வழக்கறிஞரை
வன்மையாகக் கண்டிக்கிறேன்
பிற்போக்குத்தனம்தான்
இந்த அவமானச் செயலுக்கு
அடிப்படை என்று அறிகிறேன்
தென்னிந்தியாவில்
பிற்போக்குச் சக்திகளைப்
பிடரிபிடித்துத் தடுத்து
நிறுத்தியதைப்போல
வடஇந்தியாவில்
செய்யத் தவறிவிட்டார்கள்
அந்தச் சாத்திரத்தின்
ஆத்திரம்தான் இது
காலில் அணியவேண்டியதைக்
கையில் அணிந்தபோதே
அவர் அறிவழிந்துபோனார் என்று
அறிய முடிகிறது
அதை
மென்மையாகக் கையாண்ட
நீதியரசரின் சான்றாண்மையைப்
பெரிதும் போற்றிப்
பெருமிதம் கொள்கிறோம்
நீதியரசரின் மாண்பு
அவரை மன்னித்துவிட்டது
வீச முயன்ற பொருளும்
அவரிடமே
ஒப்படைக்கப்பட்டு விட்டது
வீசிய பொருளைக்கூட மறந்துவிடலாம்
அவர் பேசியபொருளை
மறந்துவிட முடியாது
அது
நாட்டின் பெரும்பான்மை மக்களைக்
காலங்காலமாய்க்
கழுத்தில் மிதித்து
அழுத்திக் கொண்டிருக்கும்
பழைய பொருளாகும்
பழையன கழிய வேண்டாமா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூட்டு பிரசாரத்தை முன்னெடுக்கவும், தேர்தல் வியூகத்தை வடிவமைக்கவும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து பா.ஜ.க. உத்தரவிட்டது.
- வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை, எவை? என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
சென்னை:
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருக்கிறது. தேர்தலை சந்திக்க பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. இந்த முறை அதிக இடங்களை கேட்டு பெறுவதில் ஆர்வமாக இருக்கிறது.
இதற்காக, அ.தி.மு.க.வுடன் கலந்து பேசவும், கூட்டு பிரசாரத்தை முன்னெடுக்கவும், பா.ஜ.க. தேர்தல் வியூகத்தை வடிவமைக்கவும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து பா.ஜ.க. உத்தரவிட்டது.
அந்தவகையில், பா.ஜ.க. சார்பில் தேர்தல் பொறுப்பாளராக தேசிய துணை தலைவர் பைஜெயந்த் பாண்டா எம்.பி., இணை பொறுப்பாளர் மத்திய இணை மந்திரி முரளிதர் மொஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
அவர்கள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து முதல் முறையாக சென்னைக்கு நேற்று வந்தனர். தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை மாநில நிர்வாகிகளுடன் அவர்கள் முதல்கட்ட ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மாநில பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் எச்.ராஜா, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., நடிகர் சரத்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அ.தி.மு.க. கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டு பெறுவது, கூட்டு பிரசாரம் செய்வது, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை, எவை? என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகி சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் இணைப்பது குறித்தும் கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர்கள் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் திருச்சி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மிதமான மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- கணேஷ் நகர், திருமகள் நகர், மேத்தா நகர், ராஜேஸ்வரி நகர், 100 அடி சாலை.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (08.10.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
தாம்பரம்: சேலையூர் கேம்ப் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, பாரதி பார்க் தெரு, கர்ணம் தெரு, ராஜா ஐயர் தெரு, மாதா கோவில் தெரு, நெல்லுரம்மன் கோவில் தெரு, பாளையத்தான் தெரு, புதிய பாலாஜி நகர் மற்றும் விரிவாக்கம், லோரா தெரு, அவ்வை நகர், எம்.எஸ்.கே.நகர், கண்ணன் நகர், ஐ.ஓ.பி. காலனி, முத்தாலம்மன் கோவில் தெரு, குமரன் தெரு, இளங்கோவன் கோவில் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு.
சிட்லபாக்கம்: சிட்லபாக்கம் மெயின் ரோடு, கணேஷ் நகர், திருமகள் நகர், மேத்தா நகர், ராஜேஸ்வரி நகர், 100 அடி சாலை, சுந்தரம் காலனி, செல்லி நகர், எழில் நகர், அன்னை நகர், தனலட்சுமி நகர், விஜயலட்சுமி தெரு மற்றும் சந்தான லட்சுமி தெரு.
ஆவடி: சிவசங்கராபுரம், ஜாக் நகர், தென்றல் நகர், பத்மாவதி நகர், மூர்த்தி நகர், ரவீந்தரா நகர், ஸ்ரீ நகர் காலனி, முல்லை குறிஞ்சி தெரு, சோழன் நகர், சிடிஎச் சாலை, கவரபாளையம், சிந்து நகர், தனலட்சுமி நகர், எம்ஆர்எப் நகர், நாசர் மெயின் ரோடு, மோசஸ் தெரு.
- திமுக-வின் மு.க.ஸ்டாலின் மாடல் Failure அரசின் இரட்டை வேடம் தமிழக மக்களிடத்தில் அம்பலமாகிவிட்டது.
- மண்டல காவல் துறை ஐ.ஜி. தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை துவக்கம்.
அதிமுக பொதுச் செயலாளர் எட்பபாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடைபெற்றதாக தமிழக அரசின் மருத்துவத் துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்டவர்கள், நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையத்தில் ஏழை விசைத்தறி தொழிலாளர்கள். சிறுநீரக மாற்று மோசடி வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, புரோக்கர்கள் மூலம் நடைபெற்ற கிட்னி முறைகேடு கொடூரமான செயல் என கண்டித்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டு ஒரு மாதம் கடந்தும், தமிழக அரசு இன்னும் விசாரணையை தொடங்கவில்லை.
மாறாக, #KarurTragedy தொடர்பான நீதிமன்ற உத்தரவு அரசுக்கு கிடைக்கப்பெறும் முன்பே, சில மணி நேரங்களிலேயே, மண்டல காவல் துறை ஐ.ஜி. தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை துவங்கப்பட்டுவிட்டது.
ஆனால் கிட்னி முறைகேடு வழக்கில் இதுவரை விசாரணை தொடங்காதது ஏன்?
இரண்டு வழக்குகளிலும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகள் ஒன்றுபோல் இருந்தபோதிலும், தங்களுக்கு தொடர்புடையவர்கள் வழக்கு என்றால், விசாரணையை தாமதப்படுத்துவதும், கிடப்பில் போடுவதும், வேண்டாதவர்கள் மீதான விசாரணை என்றால் துரித வேகத்தில் செயல்படும் விடியா திமுக-வின்
மு.க.ஸ்டாலின் மாடல் Failure அரசின் இரட்டை வேடம் தமிழக மக்களிடத்தில் அம்பலமாகிவிட்டது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எண் 169-ஐ கைகழுவியது ஏன்?
- அடுத்த தலைமுறையின் நலனில் அலட்சியம் காட்டும் திமுக அரசு.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால் வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே?
திமுக ஆட்சி அமைத்தால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி காலையில் பால் வழங்கப்படும் என்று தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எண் 169-ஐ கைகழுவியது ஏன்?
இது போதாதென்று, மாணவர்களின் பசியைப் போக்கி ஊட்டச்சத்தை மேம்படுத்த வேண்டிய காலையுணவில் புழுக்களையும் பல்லிகளையும் நெளியவிட்டு, மதிய உணவில் வழங்க வேண்டிய முட்டையை வெளிச்சந்தையில் விற்று, ஊசிப்போன உணவை வழங்குவது தான் பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலமா?
மக்கள் வரிப்பணத்தைக் கொட்டி, கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று வெற்று விளம்பர விழாக்களை நடத்துவதற்கு பதில், அதே பணத்தைக் கொண்டு மாணவர்களுக்குப் பால் வழங்கி ஊட்டச்சத்தை மேம்படுத்தியிருக்கலாமே!
கொடுத்த வாக்குறுதியைக் கிடப்பில் போட்டு, ஊழல் புரிந்து, தமிழக மாணவர்களின் ஊட்டச்சத்தோடு விளையாடிவிட்டு, "அப்பா" என்ற பட்டத்திற்கு மட்டும் ஆசைப்படுவது என்றும் நியாயமில்லை! அடுத்த தலைமுறையின் நலனில் அலட்சியம் காட்டும் திமுக அரசை ஆட்சிக்கட்டிலில் இருந்து தமிழக மக்கள் அகற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- இருதயவியல் நிபுணர்கள் தொடர்ந்து ராமதாசை கண்காணித்து வருகின்றனர்.
- சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் ராமதாஸ் வீடு திரும்புவார் என்று கூறப்பட்டது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு இன்று ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,"ராமதாசின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருதயவியல் நிபுணர்கள் தொடர்ந்து ராமதாசை கண்காணித்து வருகின்றனர்.
சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் ராமதாஸ் வீடு திரும்புவார் என்று கூறப்பட்டது.
முன்னதாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பா.ம.க.நிறுவனர் ராமதாசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
முதல்வர் இன்று காலை ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலையில் நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






