என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இந்திய விண்வெளித் துறை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம்! - உற்பத்தித் துறையில் LEADER-ஆக மாறி வரும் தமிழ்நாடு : மு.க.ஸ்டாலின்
    X

    இந்திய விண்வெளித் துறை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம்! - உற்பத்தித் துறையில் LEADER-ஆக மாறி வரும் தமிழ்நாடு : மு.க.ஸ்டாலின்

    • தமிழ்நாட்டில் 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
    • வளர்ந்து வரும் அனைத்து தொழில்களிலும் தமிழ்நாடு கால்பதித்து வருகிறது.

    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கத்தில் TIDCO சார்பில் நடைபெறும் விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான (AeroDefCon 25) கண்காட்சி கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் பேசியதாவது:-

    * இந்தியாவை ஈர்க்கும் மாநிலம் என்ற நிலையில் இருந்து உலகை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது.

    * தமிழக தொழில்துறை மாநாடுகள் உலக அளவில் பேசப்படுகின்றன.

    * இந்தியாவை மட்டும் அல்ல, உலகையே ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது.

    * வளர்ந்து வரும் அனைத்து தொழில்களிலும் தமிழ்நாடு கால்பதித்து வருகிறது.

    * உலக அளவில் வளரும் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

    * தமிழ்நாட்டில் 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.

    * உற்பத்தி துறையில் லீடராக தமிழ்நாடு மாறி வருகிறது, அனைத்து தொழில்களிலும் தடம் பதித்து வருகிறது.

    * இன்று நான் தொடங்கி வைத்தது வெறும் கண்காட்சி அல்ல, முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்களை கண்டறியும் தளம்.

    * இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற ஒரே மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

    * இந்திய விண்வெளி துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும்.

    * பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் எதிர்காலத்தில் முக்கிய பங்காற்ற உள்ளது.

    * பாதுகாப்பு துறையில் முக்கிய மையமாக தமிழ்நாடு மாறும் என நம்புகிறேன்.

    * பாதுகாப்புத்துறையில் 23,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

    * சென்னை அருகே AEROHUB என்ற திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது.

    * தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியும் முதலீடுகளுக்கு உகந்த பகுதிகளாக திகழ்கிறது என்றார்.

    Next Story
    ×